2.1.09

நெஞ்சே நீ கலங்காதே.....விழுவது எழுவதற்கே.....

இன்றைய தினம் தமிழ் நெஞ்சங்கள் பலருக்கு மனம் வெதும்பி போயிருக்கும்.
தனித்தமிழ் தேசம் ஒன்றை கொணர ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகுந்து, பத்தாண்டுகளுக்கு மேலாக, வன்னி பெருநிலத்தில் தனியொரு அரசை நிருவி தமிழர் தேசத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி, சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டதாக கொலைவெறியன் மகிந்த ராஜாபாக்சே அறிவித்துள்ளான்.

எவ்வளவுதான் வலுவோடு நெஞ்சம் இருந்தாலும், கண்ணில் பீறிட்டு வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை. தனித்தமிழ் தேசிய எழுச்சி இத்தோடு முடிந்து விடுமோ என்ற அச்சத்தில் வரும் கண்ணீர்தானே தவிர தோல்வி பயத்திலோ, சோகத்தினாலோ வரும் கண்ணீர் அல்ல.

புலிகள் இதைவிட மோசமான பின்னடைவுகளையெல்லாம் சந்தித்துள்ள போதிலும், அடுத்த சில மாதங்களிலேயே அசுர பலத்தோடு சிங்கள முகாம்களை தாக்கி மீண்டும் கிளர்த்தெழுந்துள்ளதை ஈழப்போர் வரலாற்று நெடுகிலும் நாம் கண்டு வந்துள்ளோம். இந்த முறை புலிகள் கடுமையான எதிர்ப்பு எதையும் முன்வைக்காமல் பின்வாங்கியுள்ளனர் என்பதை உற்று நோக்கும் போது, பாரிய இழப்புகளை தவிர்க்கும் தந்திரபோயம் என்றே கருத வேண்டியுள்ளது.

உலகின் தலைசிறந்த மரபுவழி போர்முறையை கையாளும் விடுதலை இயக்கம் என்று பெயர் பெற்றிருக்கும் புலிகளின் அடுத்த நகர்வு என்ன என்பதே இப்போதைய அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றி விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த அடுத்த சில மணி நேரத்திற்குள் இலங்கையின் வான்படை தளத்திற்கு அருகில் தற்கொலைத்தாக்குதல் ஒன்று நடந்திருப்பதை பார்க்கையில், புலிகள் தங்களது கொரில்லா வழிமுறை போரை தொடங்கி விட்டதையே காட்டுகிறது.

எது எப்படியிருப்பினும், உலக தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் துடித்து போயிருக்கும் இவ்வேளையில், புலிகள் மிக விரைவாக படை நகர்வுகளை மேற்கொண்டு சிங்கள இராணுவத்தின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தமிழனின் ஆவல்.

தமிழ் நெஞ்சமே.....
நீ கலங்காதே.....
விழுவது எழுவதெற்கே......

தமிழ் புலியே......
உனது பின்னால் உலகத்தமிழினம்.....
உயிரினும் மேலான எமது தேசத்தின் சுதந்திரத்தை மீட்டெடு!!

1 comment:

தாய்மொழி said...

கிளிநொச்சியின் விவரங்களை கோர்த்து அழகாக சொல்லியிருப்பது படிக்க ஆர்வமாக இருந்தாலும் இலங்கை மக்களின் பிரச்சனை கலையுமா என்பது இன்னும் கேள்விக் குறியாக அமைந்துள்ளது..