5.3.08

வேண்டாம் பாரிசான்

வேண்டாம் பாரிசான்

டான்ஸ்ரீ கோ சூ கூன்,ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கின் முதல்வராக இருப்பவர்,இப்பொழுது மத்திய அரசாங்கத்திற்கு தாவ போகிறார்.மத்திய அரசாங்கத்திற்கு தாவ இவர் தேர்வு செய்திருக்கும் தொகுதி பத்து கவான் தொகுதி.பத்து கவான் தொகுதியில் வாழும் மானமுள்ள தமிழர்களே,இந்த கோ சூ கூனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சிலவற்றை உங்களுக்காக தொகுக்கிறோம்.

- இந்தியர்களுக்கு திறமையில்லையாம்.
இம்முறை தேர்தலில் கெராக்கான் கட்சியின் சார்பில் மொத்தம் 43 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.இதற்கு என்ன காரணம் என்று கேட்ட பொழுது,"இந்தியர்கள் திறமை இல்லாதவர்கள்" என்ற பதில் வந்தது கோ சூ கூனிடமிருந்து.இந்தியர்கள் பதவி வகிக்க திறமையில்லாதவர்கள்,ஆனால் இந்தியர்களின் வாக்குகள் மட்டும் திறமையானதோ?!சொந்த கட்சியில் உள்ள இந்தியர்களை புறக்கணிக்கும் இந்த கோ சூ கூனா நமது தொகுதி இந்தியர்களுக்காக நாடளுமன்றத்தில் குரல் கொடுப்பார்?!சிந்தியுங்கள்....

- சகோதரர் பரஞ்சோதியின் மீது நடவடிக்கை.
கெராக்கான் கட்சியை சேர்ந்த சகோதரர் பரஞ்சோதி அவர்கள் அம்னோ அரசாங்கம் இந்தியர்களை கருவறையிலிருந்து,கல்லறை வரை மூன்றாம் தர குடிமக்கள் போல் நடத்துகிறது என்ற உண்மையை கூறியதற்காக அவரின் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுத்தவர்தான் இந்த கோ சூ கூன்.தனது அம்னோ முதலாளிகளிடம் தன்க்குள்ள விசுவாசத்தை காட்டவே இந்நடவடிக்கை.உண்மையை கூறியதற்காக தண்டிக்கப்பட்டவர் சகோதரர் பரஞ்சோதி அவர்கள்.அந்த மறத்தமிழனை வஞ்சித்த இந்த கோ சூ கூனுக்குதான் உங்கள் வாக்கா??

- அம்னோவின் தீவிர ஆதரவாளர்கோ
சூ கூன்,இனவாத அம்னோவின் தீவிர ஆதரவாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அம்னோ இளைஞரணி தலைவர் ஹிஷாமுடினின் மிரட்டலுக்கு பணிந்துதான் சகோதரர் பரஞ்சோதி மீது இவர் நடவடிக்கை எடுத்தார் என்பது நினைவுக்கூறத் தக்கதாகும்.அம்னோ தலைவர்களுக்கு இவர் பரம விசுவாசி;மாநில மக்களை விட,தனது கட்சிக்காரர்களை விட,தனது அம்னோ முதலாளிகள்தான் இவருக்கு முக்கியம்.இப்படிப்பட்டவர் நமது தொகுதிக்கு தேவையா??

- பினாங்கு தீவில் நிராகரிக்கப்பட்டவர்.
இவ்வளவு நாளும் பினாங்கு தீவில் உள்ள தொகுதியில் தேர்தலில் நின்ற கோ,இப்பொழுது ஏன் செபராங் பிறை பக்கம் திரும்பியுள்ளார்?!கோ சூ கூன் மீது பினாங்கு தீவில் உள்ள மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,அதனால்தான் இப்பொழுது நமது பக்கம் காற்று வீசுகிறது.அம்னோவின் மிரட்டல்,உருட்டல்களுக்கு இவர் அடிபணிவதுதான் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.அப்துல்லா படாவியின் மருமகன்,கைரி ஜாமலுடினின் நேரடி மிரட்டலைக் கூட எதிர்க்காத இவரின் அம்னோ விசுவாசம்தான் நமது தொகுதிக்கு தேவையா?!கைரியின் பொம்மைதான் உங்களுக்கு வேண்டுமா?!

- இந்தியர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராதவர்.
சில தினங்களுக்கு முன்பு,வால்டோர் தோட்ட மக்கள் தமிழ்பள்ளியில் போராட்டம் ஒன்றை நடத்தியபோது அவ்வழியே சென்ற கோ,மருந்துக்குக்கூட தனது காரை நிறுத்தவில்லை.உண்மையில் இந்தியர்களிடம் கரிசணை உள்ளது என்றால்,காரை நிறுத்தி அவர்கள் பிரச்சனையை கேட்டிருக்கலாம்தானே?!இப்பொழுது நம் மீது பொழியும் பாசம் எல்லாம் வெறும் தேர்தல் நாடகம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

- பக்கம் இருக்கும் யானை தெரியவில்லை,எங்கோ இருக்கும் ஈ தெரியுமாம்.
ஏறக்குறைய 15 ஆண்டுகளாக பினாங்கின் முதல்வராக இருக்கும் கோ சூ கூனிற்கு,இவ்வளவு நாளும் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் நம் தொகுதி மக்களின் பிரச்சனை தெரியாமல் போனது ஏனோ?!20-30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பினாங்கு தீவில் இருக்கும் போதே நமது பிரச்சனைகளை தீர்க்காத இவர்தான் 300 கிலோமிட்டர் தூரம் இருக்கும் கோலாலம்பூரில் போய் நமது பிரச்சனயை தீர்க்கப்போகிறாரா??சிந்தியுங்கள்....

- இந்தியர்கள் வாக்குகளை நம்பாதவர்.
கோ சூ கூன்,அவர்கள் இந்தியர் வாக்குகளை நம்பி தேர்தலில் தாம் நிற்கவில்லை என்று பிறையில் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.அவர் வாயாலே கூறிவிட்டார்,இன்னும் ஏன் அவருக்கு நாம் வாக்களிக்க வேண்டும்?!இவ்வளவு விளக்கிய பிறகும்,இல்லை நாங்கள் கோ சூ கூனிற்குதான் வாக்களிப்போம் என்று நீங்கள் அடம்பிடித்தால்,அது உங்கள் விருப்பம்.இதற்கு மேல் உங்களை திருத்த முடியாது.

சோற்றில் உப்பிட்டு சாப்பிடும் எந்த தமிழனும்,தமிழர்களை மதிக்காத,தமிழனுக்கு(பரஞ்சோதி) அநீதி இழைத்த இந்த கோ சூ கூனுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதுதான் உண்மை.தேர்தல் முடிவு வந்தால் தெரியும் நம்மில் எத்தனை பேர் சோற்றில் உப்பிட்டு உண்கிறோம் என்று!!

No comments: