8.5.09

இலங்கை விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடம்


மலேசியாவின் இரட்டை வேட அரசாங்கத்தின் தலைவர்!!

உலக அரங்கில் எங்கே மனித அவலங்கள் நடந்தாலும், உடனே அதற்கு எதிராக குரல் எழுப்ப மலேசியா அரசாங்கம் தயங்கியதில்லை. தென்னாப்பிரிக்காவில் அப்பர்தேய்ட் எனப்படும் இனவெறி தலைவிரித்தாடிய போது பொதுநலவாய(காமென்வெல்ட்) அமைப்பிலிருந்து தென்னப்பிரிக்காவை நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்ததே மலேசியா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். போஸ்னியா, கொசொவோ போன்ற பிராந்தியங்களில் இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மலேசிய அரசு மிகக்கடுமையாக அவற்றை கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பாலஸ்தீன விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேல் போய், இஸ்ரேல் நாட்டுடன் எந்தவொரு தூதரக உறவுகளும் இல்லை என்ற அளவுக்கு மலேசியாவின் வெளியுறவு கொள்கை மனிதாபிமானத்தை முன்னிறுத்தியுள்ளது. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதனி நேரடியாகவே மலேசியா எதிர்த்தது. அதேபோல், பாலஸ்தீனம், போஸ்னியா, கொசொவோ, பிலிப்பின்ஸ், லெபனான் என்று உலகில் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டிக்கிறது மலேசிய அரசாங்கம். ஐரோப்பிய் கண்டத்தில் உள்ள நாடுகளில் நடக்கும் படுகொலைகள் மலேசிய அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியும் போது, நமது ஆசிய கண்டத்திலேயே உள்ள ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலைகள் மட்டும் தெரியவில்லை. இது மலேசிய தமிழர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மனிதாபிமான விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றுகின்றது.

இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை கண்டும் காணாதது போல் இருக்கும் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை என்னவென்று சொல்வது??

அண்மையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற அவசரக்கூட்டத்தின் விவாதத்தில் கலந்துக்கொண்ட பினாங்கு மாநில துணை முதல்வர், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை நிறுத்துமாறு இலங்கை அரசையும் வற்புறுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த இராய்ஸ் யாத்தீம், இலங்கையில் நிலைமைகளை தாங்கள் உற்று கவனிப்பதாகவும், ஈழத்தமிழர்களின் மீது மலேசிய தமிழார்களின் கரிசணையை கருத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இராய்ஸ் யாத்திம் வெளியுறவு அமைச்சிலிருந்து விலகும் வரை அதைப்பற்றி பேசவேயில்லை. தமிழர்கள், இன்று கேட்பார்கள் நாளை மறந்து விடுவார்கள் என்ற நினைப்புப்போல!!

மலேசிய அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் மஇகாவோ, ஏதோ இவர்கள் மனு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பதைப்போல் மனுக்கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கூட கொடுத்தனர். அமைச்சரவையில் மலேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழும் வேலையில் அதனுடைய விடையும் நமக்கு தெரிந்தே உள்ளது. கடந்த காலங்களில் மலேசியாவில் உள்ள தமிழர்களின் நிலை பற்றியே இந்த "பிரதிநிதிகள்" என்ன செய்துக்கொண்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் மலேசிய அரசு கொலைவ்வெறியன் மகிந்தாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருக்குமா?? அடிக்கடி சிங்கள காடையர் அமைச்சர்கள் மலேசியாவிற்கு வந்து புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பதாகக் கூறுவார்களா?? ம இகா மலேசியத்தமிழர்களுக்கு மட்டும் தீங்கிழைக்கவ்வில்லை, ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலைகளை நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி கண்டித்த மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை ஒப்புக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலஸ்தீனர்களின் துன்பத்தை புரிந்து ௧0 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மலேசிய அரசு, ஈழத்தில் பட்டினியால் சாகும் எம் தமிழர்களை நினைத்துக்கூட பார்க்கவில்லை. (பினாங்கு மாநில அரசு மட்டுமே, 15000 ரிங்கிட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு இன்னும் அதிகமாக தர விரும்பிய போதும், சட்ட சிக்கல் காராணமாகவே அதிக பட்சமாக 15000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
இதுவெல்லாம் மலேசிய அரசாங்கம், மனிதாபிமான விடயத்தில் இரட்டை வேடம் ஆடுவதை புலப்படுத்துகிறது.

கொசொவோவில் செத்தால் அவன் மனிதன்; போஸ்னியாவில் செத்தால் அவன் மனிதன், பாலஸ்தீனத்தில் செத்தாலும் மனிதன்; ஈழத்தில் சாவுபவன் மட்டும் மாடா?? கொசொவோ,போஸ்னியா,பாலஸ்தீனத்தில் துன்பப்பாடுவோரோடு மத அடிப்படையிலான தொடர்பு உள்ளதனால்தானே, மலேசியாவிற்கு அவர்களின் மீது அவ்வளவு அக்கறை??!! மலேசியாவில் வாழும தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களோடு இரத்த உறவே உள்ளதே, அதை புரிந்துக்கொள்ள இந்த முட்டாள் அரசாங்கத்தால் முடியவில்லையா?? அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முட்டாள் மலேசிய இந்திய காங்கிரஸ்காரனால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா??

காங்கிரஸ்க்காரன் எங்கிருந்தாலும் அவனை செருப்பால் அடிக்க வேண்டும்; அது இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், அல்லது மலேசிய இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், பொத்தம் பொதுவாக காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரித்தான்!!

இரட்டை வேடம் போடும் மலேசிய அரசே, உடனடியாக இலங்கை அரசாங்கத்தை போரை நிறுத்த வற்புறுத்து. மலேசிய வெளியுறவுத்துறையின் துணையமைச்சராக இருக்கும் தமிழனே, உனது சீன முதலாளிகளை திருப்தி படுத்துவதில் மட்டும் குறியாக இருக்காதே. உன்னைப்போல் ஒரு தமிழன்தான் அங்கு ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கிறான், முடிந்தால் அவனுக்கு உதவப்பார்!! எதற்கும் உருப்படாத சாதியைப் பிடித்துக்கொண்டு ஆடாதே!!!

தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா??

தமிழனின் உயிர் அவ்வளவு மலிவா??

தமிழனின் கோபம் தெரியுமா?? அவன் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா??
கடந்த மார்ச்8 தேர்தல் நினைவில் உள்ளதுதானே??

எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; எங்கள் ஈழத்தமிழர்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்!!

1 comment:

Anonymous said...

Patient for new leadership. Tamil Ehlam will come. Soul of death & cries will answer Tamil Desam. Whole world now know Tamil Ehlam.