
4.12.08
தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்

27.11.08
தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்......



உலகத்தில் உள்ள தமிழருக்கெல்லாம், யார்தான் தலைவர் ??இராசேந்திர சோழனுக்குப் பிறகு அந்த தனித்தன்மை மிகுந்த தமிழன் ஒருவன் இருக்கிறானென்றால், அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

27.10.08
எதற்கய்யா தீபாவாளி கொண்டாடனும்??மானமுள்ள தமிழர்களிடத்தில் ஒரு கேள்வி.

23.10.08
ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.
இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க
தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!
நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்
இக்கண்,
சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்
( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)
*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்
18.10.08
ஈழத்தமிழருக்காக ஒன்றிணைந்த தமிழ் நெஞங்களே....,நன்றி...நன்றி...நன்றி
எமது நிகழ்வின் விவரங்களை விளம்பரப்படுத்தியிருந்த ஒவ்வொரு தமிழருக்கும் இவ்வேளையில் நன்றி.
மலேசிய வலைப்பதிவாளர்கள்,அகப்பக்கங்கள் மட்டுமின்றி,சில அனைத்துலக தமிழ் அகப்பக்கங்களும் நமது நிகழ்வின் விவரங்களை வெளியிட்டிருந்ததைக் கண்டு நாம் பெரிதும் மனம் மகிழ்ந்தோம்.
பாவேந்தரின், "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு" என்ற வரிகள்தாம் எம் நினைவுக்கு வந்தன.கடல் நம்மை பிரித்தாலும்,உணர்வு நம்மிடையே வலுவாய் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
வலைப்பதிவுகள்,அகப்பக்கங்கள் மட்டுமின்றி,கனேடிய தமிழ் வானொலி ஒன்றும் எமது நிகழ்வைப் பற்றி தமது செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் உள்ள தமிழ் தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு நிகழ்வைப் பற்றி வினவியதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட அரசியல் தலைவரும்,நமது நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட தடையை விவரித்ததோடு மட்டுமல்லாமல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்வைப் பற்றியும் கூறியுள்ளார்.
இன்று (18-10-2008) ஒன்றுகூடிய ஜசெக ஜாலான் பாரு,பிறை கிளையின் செயற்குழு ஈழத்தமிழர் ஆதரவு நிகழ்வை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு,நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். பினாங்கில் உள்ள தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளும் இந்நிகழ்வுக்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் ஈழத்தமிழருக்காக ஒரே குரலில் ஒலித்த அனைத்து தமிழுள்ளங்களுக்கும் நன்றி.
*17ஆம் தேதி நிகழ்வை வெளியிட்ட வலைப்பதிவுகள்/அகப்பக்கங்கள் :
http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_16.html
http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_9323.html
http://www.malaysiaindru.com/?p=5693
http://www.puthinam.com/full.php?2e4ZTH6cb3bfbCR34d2WXvD2a02K6JBe4d47Qp8c00agtTRBde2dC0cn2cc0AfYU3e
http://www.paristamil.com/tamilnews/?p=16025
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=5820&Itemid=9
http://www.seithy.com/briefEventDetail.php?event_id=75&language=tamil
http://nanavuhal.wordpress.com/2008/10/11/indian-malaysian-politics/
http://tamiluyir.blogspot.com/2008/10/blog-post_16.html
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/f2bf628df266dc71/b3fe9e1554f87b11?show_docid=b3fe9e1554f87b11
(எவருடைய வலைப்பதிவோ/அகப்பக்கமோ விடுப்பட்டிருந்தால் தயைக்கூர்ந்து மன்னிக்கவும்.)
16.10.08
மிக முக்கிய அறிவிப்பு.....ஈழ தமிழர் ஆதரவு போராட்டம் - தள்ளிவைப்பு
இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்
திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்வலைப்பதிவில் (மேலே காணப்படுவதைப்போல்) அறிவிக்கப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று முதல் இந்த்ராஃப் எனப்படும் இந்து உரிமை பணிப்படையை அரசு தடை செய்துள்ளதை நாம் அறிவோம்.ஈழத்தமிழருக்கான ஆதரவு போரட்டத்தை இந்த்ராஃப் ஆதரவு போராட்டம் என்று ஆதரவு கூட்டத்தை சீர்குலைக்க ஒர் சில தரப்பினர் முயற்சிப்பதாக எமக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்களை அடுத்தே,இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது.
மீண்டும் துரோகம்!!
தமிழனுக்கு எப்பொழுதுமே தமிழன்தான் துரோகம் புரிவான் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.ஈழ தமிழரின் நலம் காக்க அப்பேற்பட்ட அரசியல் எதிரிகளான தமிழக அரசியல் கட்சிகளே ஒன்றிணைந்து விட்ட போதிலும்,இது வரையிலும் தங்களை மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று பிதற்றிக்கொண்டவர்கள் ஈழ தமிழருக்காதரவான போரட்டத்தைப் பற்றி காவல் துறைக்கு தவறான தகவல்களை தந்து,அவ்வற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.(சில தமிழின துரோகிகள் தந்த தவறான தகவல்களால்,காவல்துறை என்னை 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியது,விசாரணையின் இறுதியில் ஈழ தமிழர் ஆதரவு போரட்டத்தை வேறோரு நாளுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வை தள்ளி வைப்பதற்கு பயம் காரணமல்ல;கவனம்தான் காரணம்,தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்கவே நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது)
தடைகள் தற்காலிகமே;
ஈழத்தமிழருக்கு ஆதரவான கவனயீர்ப்பு கூட்டத்தை எப்படியேனும் நடத்தி விட வேண்டும் என்ற வேட்கை முன்பை விட இப்போதுதான் அதிகமாகியுள்ளது.எதிர்வரும் 24ஆம் தேதி,அதாவது இன்றிலிருந்து ஒரே வாரத்தில்,ஈழத்தமிழருக்கான ஆதரவு கூட்டம் பினாங்கு மாநிலத்தில் மையமிட்டுள்ள பல்வேறு தமிழ் சார்புடைய இயக்கங்களின் ஆதரவோடு மிகப்பெரிய அளவில்,பட்டவொர்த் நகரில் நடத்தப்படுமென்பதை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.நிகழ்வின் முழு விவரங்களும்,எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
எமது அறிக்கைக்கு மதிப்பளித்து தத்தம் வலைப்பதிவுகளில் வெளியிட்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும்,மலேசியா இன்று இணயத்தளத்திற்கும் எமது தாழ்மையான நன்றிகள். அதேவேளையில்,இந்த தள்ளிவைப்பு அறிக்கையையும் தயைக்கூர்ந்து தாங்கள் வெளியிடுவீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.
எதிர்பாராவிதமாக நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதற்கு பெரிதும் வருந்துகிறோம்.துரோகங்களின் விளைவுதான் இந்த தள்ளி வைப்பு என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
அன்புடன்,
சத்தீஸ் முணியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி,
ஜாலான் பாரு,பிறை கிளை.
14.10.08
மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்!!!
எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம்,இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றை ஜசெக,ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வை பற்றிய அறிவிப்பு செய்தியை தங்களது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தமிழர்களின் கண்ணிரை துடைக்க ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை செய்வோமாக.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்!! நிகழ்வின் விவரம் பின்வருமாறு :-
இடம் : பிறை,ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
தேதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்
அன்புடன்,
சத்திஸ் முனியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி
ஜாலான் பாரு கிளை,பிறை.

Stop Genocide of Tamils in Sri Lanka
DAP,Jalan Baru Branch has organized a protest meeting to condemn the Sri Lankan Goverment genocide of Eelam Tamils.Unlike the Tamilnadu leaders who were tight-lipped for all this while though they're just 18km away from Eelam,let us gather and show our concern to our Tamil brothers & Sisters there.DAP MP's and leaders will give speeches condemning the killing of innocent people.The event will take place as follow :-
Place : Infront of Jalan Baru,Muniswaran Temple,Perai
Date : 17-10-2008 ( Friday )
Time : 8.00 pm onwards
Dear Tamilians,Let us together condemn the Brutality against our beloved Eelam Tamils.
for further inquiries, call Satees at 016-4384767
24.9.08
மே 13......ஒரு அறிமுகம்--2
பல நாடுகளின் சரித்திரம் இதற்கு தக்க சான்றாக அமையக்கூடும்.ஆசிரியரின் ஆய்வு படி,மே 13 இனக்கலவரமானது, ஒரு திட்டமிடப்பட்ட "அதிகார பறிப்பு"க்கான முன்னோட்டம் என்று கூறுகிறார்.இவ்வதிகார பறிப்பானது,பழமைவாதம் மிகுந்த மலாய் பிரிவினடமிருந்து, நாட்டின் வளங்களை பொருளாதார இலாபத்திற்காக பங்கிட்டுக் கொள்ளும் (CAPITALIST) பிரிவினர் நடத்தியதாகும்.பழைய கலாச்சாரம் மிகுந்த மலாய்க்காரர்களின் பிரதிநிதியான துங்குவிடமிருந்து அதிகாரத்தை புதிதாக தலையெடுத்த பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர் திட்ட்மிட்டு பறித்தனர்.இவ்வதிகார பறிப்பின் தாக்கம்தான்,மலேசியாவின் அரசியலிலும் பொருளாதாரத்துறையிலும் இன்று வரை நீடிக்கிறது.இவ்வதிகார பறிப்பின் விளைவுதான்,புதிய பொருளாதார கொள்கை (NEP);இவ்வதிகார பறிப்பின் மூலம்,பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களின் பொருளதாரத்தை வளப்படுத்திக் கொண்டதோடு,அரசியலிலும் தங்களின் பிடியை இறுக்கினர்.

இவ்வதிகாரப் பறிப்பை பற்றி துங்குவும் கூறியுள்ளார் :-
“ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.”
சுப்கி லத்தீப்,இக்காலகட்டத்தில் நிருபராக இருந்தவர்;அவர் 1977இல் அவர் கீழ்வருமாறு கூறியுள்ளார் :
-மே 13 இனக்கலவரம் திடிரென்று ஏற்பட்ட இனக்கொந்தளிப்பல்ல! இச்சம்பவமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.இத்திட்டத்தை தீட்டியவர்கள் யாரென்பதை தெளிவாக கூற முடியவில்லை.ஆனாலும்,ஒட்டு மொத்த கண்ணோட்டத்தையும் வைத்து பார்த்தால்,மே 13 கலவரமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று.மே 13 கலவரத்திற்குப் பின்,துங்குவின் அதிகாரமானது அதற்கு பின் மழுங்கி விட்டதெனவே கூற வேண்டும்.அதற்கு பிறகும் துங்கு,பிரதமராகவும்,அம்னோ தலைவராகவும் இருந்த பொழுதும், அவர் அதிகார சின்னமாக மட்டுமே இருந்தார், அதிகாரம் அவரிடத்தில் இல்லை!” சுப்கி லத்தீபின் கருத்தானது 1977இல் வெளியிடப்பட்டது.அவரது கருத்துக்கு ஆதரமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ள ஆவணங்களே இருந்துள்ளன.
இந்நூலின் முதல் பகுதி,மலேசியாவில் இன அரசியலுக்கு வித்திட்ட “கப்பல் கூட்டணி”யின் உதயத்தைப்பற்றி ஆராய்கிறது.கப்பல் கூட்டணியானது,சுதந்திரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது.காலனித்துவ ஆட்சியாளர்களான பிரிட்டிசாரின் ஆசியைப் பெற்றது.சுதந்திரத்திற்குப் பின்பு,இக்கூட்டணியின் கொள்கைகளின் விளைவே இன ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது.இந்த இன ரீதியான கண்ணோட்டம்தான் அறுபதுகளின் அரசியல்,சமூகவியல்,பொருளாதார வித்தியாசங்களுக்கு அடிப்படை என்பது திண்ணமாகும்.

1960ஆம் ஆண்டுகளில்,காலனித்துவ ஆட்சிக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட சில அரசாங்க கொள்கைகள்,நடவடிக்கைகள் மக்கள் மத்தியில்,குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர்,விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி கல்வி,உபகார சம்பளம்,தொழில் உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்) போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் ஒரு தலைபட்சமான நிலைப்பாடுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் அதிருப்தியடைந்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நிலவிய அரசாங்கத்திற்கெதிரான அதிருப்தியானது,1969 பொதுத்தேர்தலில் ந்திரொளித்தது.அதுவரை ஆட்சியை இறுகப்பிடித்திருந்த அம்னோவின் அதிகாரத்திற்கும் 1969 பொதுத்தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர், இவ்வேளையில் “மலாய் அதிகாரத்துவம்” என்ர கொள்கையை அறிமுகப்படுத்தி அம்னோவின் ஆளுமையை நிலைநிறுத்தியதோடு, அம்னோவிற்குள்ளும் துங்குவின் அதிகாரத்தை கைப்பற்றினர்.
இரண்டாம் பகுதியில் 1969 பொதுத்தேர்தலை ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். 1969 பொதுத்தேர்தலில்,எதிர்கட்சிகள் ஒரு ஒப்பந்த நிலையிலான கூட்டணியை அமைத்து “கப்பல் கூட்டணியை” எதிர்த்தன.பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே,கப்பல் கூட்டணி சுதந்திரத்திற்கு பின்பு முதன்முறையாக பலத்த சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அதோடு மட்டுமல்லாமல்,ஒரு சில மாநிலங்களையும் எதிர்கட்சிகல் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்த வேளையில்,எதிர்கட்சிகளின் வெற்றி பேரணிகளே ஒரு பயங்கரமான இனக்கலவரத்திற்கு அடிப்படை காரணம் என் கூறப்படுவதை,அர்சியல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
இரகசியமாக்கப்பட்ட ஆவணங்கள்
- 1969 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நமக்கு கிடைத்த தகவல்கள்களில் பெரும்பாலனவை, அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும், தணிக்கைகளுக்கும் மத்தியில் பல உண்மைகள் மறைக்கப்பட்ட தகவல்கள் என்பது தெரிய வருகிறது.
- 1969 இன் இனக்கலவரத்தின் போது மலேசிய அரசாங்கத்தின் “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்ற கண்துடைப்பு நாடகத்துக்கு பிரிட்டிஷ் போன்ற மேற்கு நாடுகளும் துணை போயுள்ளன.
15.9.08
மே 13......ஒரு அறிமுகம்
“மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!”

மே 13,நமது சுதந்திர மலேசியாவின் கரை படிந்த அத்தியாயம்.இந்த மே 13 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நாம் படித்து வந்த சரித்திர கோப்புகள் எல்லாம் பொய் என்பதை சுவாராம் இயக்குனர்,குவா கியா சுங் அவர்களின் "மே 13,1969 மலேசிய கலவரத்தைப் பற்றிய இரகசிய ஆவணங்கள்" ( May 13, Declassified documents on Malaysian Riots 1969" என்ற புத்தகத்தை படித்த பிறகு அறிய முடிகிறது.இந்த மே 13 புத்தகம்,மலாய் மொழியிலும், ம்ஆங்கில மொழியிலும் மட்டுமே உள்ளது. உண்மைகளைக் கூறும் இந்நூல் தமிழில் வெளிவர வேண்டும் என்பதுதான் என் அவா.அதற்கான முதல் முயற்சியாக இந்நூலின் அறிமுக பாகத்தை தமிழில் மொழி பெயர்த்து இவ்வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.மே 13 பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்......


மலாக்கா பேராளர்,ஹஸ்னோர் சிடாங் உசேன் பேசுகையில்,
“இன உரிமையையும்,மதத்தையும் காக்க,அம்னோ உயிர்களை அடமானம் வைக்கவும்,இரத்ததில் குளிக்கவும் ஒரு போதும் தயங்காது!” என்றார்.
பெர்லிஸ் பேராளர் ஹஷிம் சூபோ பேசுகையில், “இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!” என்றார்.
தெரங்கானு அம்னோ இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர்,ரசாக் இட்ரீஸ் பேசுகையில், “மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!” என்றார். (ஆதாரம் : மலேசியாக்கினி,22.11.2006)
- தொடரும் –
அடுத்த பாகத்தில் :
இன அரசியலும்,வர்க்கப் பிரிவினையும்
- இனக்கலவரத்தை தூண்டியது யார்?
- NEP இன் அறிமுகம்
- “ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.” - துங்கு
12.9.08
மீண்டும் ஓப்பராசி லாலாங் II??
பிரபல வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா,சின் சியு டேய்லி நிருபர்,செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரும்,கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும்,சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான தெரெசா கோக் ஆகியோர் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
செபூத்தே எம்.பி தெரேசா கோக்
ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
9.9.08
எப்பிங்காம் தமிழ்பள்ளி நிலம் விழுங்கப்பட்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது.....

14.8.08
தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?!
ஆனால்,அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.
இன்றுள்ள நாம்,கல்கியின் பார்த்திபன் கனவையோ,பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம்.ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ,பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால்,கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர,பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள்.இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்??
ஒவ்வொரு தமிழனுக்கும்,தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.
எனது பாட்டன்,பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான்.மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து,தமிழினத்தின் பூர்வீகம்,அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான்.சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.

அடுத்த பதிவில் அலசலாம்.
- தொடரும் -
9.8.08
ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் மலேசிய தமிழர்கள் - முழுமையாக
நன்றி : தமிழ்கனேடியன்.காம்
thanks : http://www.tamilcanadian.com/
தமிழ் தேசியம்;இதுதான் நீண்டதொரு போராட்டத்தை மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழீழ போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது.புலிகளின் தலைவர் பிரபாகரன் பலமுறை கூறியுள்ளார்,"ஈழம் உருவாகும் நாளதான்,உலக தமிழினத்தின் வெற்றி நாள்" என்று.புலிகளின் இந்த கருத்தானது உலக அரங்கில் தமிழீழ போராட்டத்துக்கு பலமானதொரு அடித்தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.இந்த கருத்தின் மூலம்தான் உலகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் மத்தியில் தமிழீழத்திற்கான ஆதரவு பெருகியுள்ளது.சிங்கள இனவாதத்தை எதிர்த்து போராடும் புலிகளுக்கு,வெறும் மானசீக ஆதரவு என்பதைவிட, பொருளாதார, அறிவுசார் ஆதரவும் இந்த கூற்றின் மூலமே பெருகியுள்ளது என்பது உண்மையாகும். மலேசிய தமிழர்கள் என்று பார்த்தோமானால், தமிழீழம் உருவாவதை இவர்கள் பெரிதும் ஆதரிக்கிறார்கள்.
மலேசிய தமிழர்கள்,பிரிட்டிசாரால் சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டவர்கள்.மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் தமிழர்கள்,அதாவது 17 இலட்சம் பேர்.இவர்களில் மிக சிறுபானமையாக உள்ளோர்,இலங்கையிலிருந்து (சீலோன்) பிரிட்டிசாரால் அலுவலக வேலைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள், இவர்களை சீலோனிஸ் என்றும் யாழ்ப்பாண தமிழர்கள் என்றும் அழைக்கிறார்கள்.இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும்-இலங்கை வம்சாவளியினருக்கும் பொதுவில் ஒரு வேறுபாடு நிலவி வந்தது.பொருளாதார, சமூக பின்னணியில் இந்த வேறுபாடு அமைந்திருந்தது.பெரும்பாலான இலங்கையர்கள், தோட்டப்பாட்டாளிகளான தமிழர்களிடம் பழகுவதில் இருந்து விலகியிருந்தனர்.பாட்டாளி தமிழர்களோ, இலங்கைத்தமிழர்கள் காலனித்துவ பிரிட்டிஷ் முதலாளிகளிடம் வைத்திருந்த விசுவாசத்தை சுட்டிக்காட்டி அவர்களிடம் நெருங்கவதில் இருந்து தவிர்த்து வந்தனர்.
ஈழப்போரால்,தற்பொழுது பெரும்பாலான இலங்கையர்கள்(சீலோனிஸ்) தங்களை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். நெடுங்காலமாக மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும், இலங்கை வம்சாவளி தமிழர்களுக்கும் இடையில் நிலவிவந்த வேறுபாட்டை ஈழப்போர் கலைந்துள்ளது என்றே கூற வேண்டும்.இந்த வேறுபாடானது தற்பொழுதும் நிலவுகின்ற போதிலும்,இன அடையாளத்தின் பேரில் இந்த இரு வேறு வம்சாவளி பின்னணியைக் கொண்ட தமிழர்கள் ஒன்றாகியுள்ளனர்.
ஆரம்பக்காலங்களில்,இலங்கை வம்சாவளி தமிழர்கள் ஈழப்போராட்டத்துக்கு தனியாளாகவோ,குழுக்களாகவோ பொருளாதார ஆதரவை வழங்கி வந்தனர். இந்திய வம்சாவளி தமிழர்களின் ஈழ போரட்டத்துக்கான ஆதரவு, மலேசியாவில் தமிழீழ போராட்டத்துக்கான ஆதரவில் புதியதோர் பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ போரட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது வெளிப்படையாகவே உள்ளது.உலக தமிழர் புனர்வாழ்வு நிதியமைப்பு போன்ற அமைப்புகளின் உதயமானது, ஈழப்போராட்டத்துக்கு மலேசிய தமிழர்களிடம் உள்ள ஆதரவை வெளிப்படுத்துகிறது.
ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது பல வடிவங்களில் மலேசிய தமிழர்களின் மத்தியில் பிரபலமாகியுள்ளது. கருத்தரங்குகள்,நிதி சேகரிப்பு நிகழ்வுகள்,பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமாகியுள்ளது. மலேசியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பெருநாள்,தைப்பூசத்திருநாள் ஆகும்.ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருநாள் கொண்டாடப்படும்பொழுதும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடும் கோலாலம்பூரில் உள்ள பிரபல ஆலயத்தில் ஈழ அகதிகளுக்காக நிதி சேகரிப்புகள்,கையேடு வழங்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு ஆலய நிர்வாகம் தனியாக ஓர் இடத்தை ஒதுக்கித்தரும்.ஈழப்போரைப்பற்றிய குறுந்தகடுகளும் இவ்வேளையில் விற்கபடும்.
இவ்வாறான நிகழ்வுகளின் மூலம்,ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய இடமொன்றை பிடித்துள்ளது.இனவாத இலங்கை அரசின் பொய்யுரைகளை மலேசிய தமிழர்கள் பெரிதுப்படுத்துவதில்லை. அண்மையக்காலமாக ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு பெருகியுள்ளதே தவிர,குறையவில்லை.
மலேசிய தமிழர்கள் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதற்கு மிக முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஈழத்தமிழர்களைப் போலவே மலேசிய தமிழர்களும் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தால் பிழிந்தெடுக்கப் பட்டவர்களே.இவர்களுக்கு,தங்களது ஈழ சகோதரர்கள் படும் இன்னல்கள் புரிகின்றது. தங்களைப்போலவே அநீதி இழைக்கப்பட்டவர்களாக பாட்டாளி மலேசிய தமிழர்கள்,ஈழத்தமிழர்களைப் பார்க்கிறார்கள். இதனால்தான்,நடுத்தர வர்க்கத்தைவிட இவர்கள் தமிழீழ போரட்டத்தை அதிகமாக ஆதரிக்கிறார்கள். மலேசிய தமிழ் இளையோர் மத்தியில்,புலிகளின் தலைமையின் மீது ஓர் அசைக்க முடியாத பற்று உள்ளது.அதிலும்,புலிகளின் தலைவர்,பிரபாகரன் அவர்களை ஓர் நாயகனாக பார்க்கிறார்கள். பிரபாகரனின் படத்தை பெரும்பாலான தமிழர்களின் வீட்டில் சர்வ சாதரணமாக பார்க்கமுடிகிறது.கடந்த காலங்களில்,ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழ ஆதரவு போரட்டங்களின் போது,பிரபாகரனின் படத்தை இளையோர்கள் ஏந்தியிருந்தது, மலேசிய காவல் துறைக்கு கோபத்தை உண்டுப்பண்ணியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது காரணம்,மலேசிய தமிழர்கள் மத்தியில் நிலவும் அரசியல்,பொருளாதார,சமூக பின்னடவுகள்.இந்நாட்டை வளமாக்க உழைத்து உருகுலைந்து போன தமிழினத்தை மலேசிய அரசாங்கம் ஒரு பொருட்டாக கருதாது.மற்ற இனங்களைப்போல்,தமிழினம் எந்தவொரு துறையிலும் தலைத்தூக்க முடியவில்லை. பெரும்பானமை மலாய் இனத்தை அரசாங்கம்,தனது கொள்கைகளின் மூலம் மிக பாதுக்காப்பாக வைத்துள்ளது.சீனர்களோ,பொருளாதார வளத்தைக்கொண்டுள்ளனர். தமிழர்களோ,உழைத்து ஓடானதுதான் மிச்சம் என்ற நிலை நிலவுகிறது. பொருளாதரத்தில்தான் பின்னடைவு என்றால்,வேலை வாய்ப்புகளிலும் அப்படிதான்.அரசு துறைகளிலோ,தனியார் துறைகளிலோ தமிழர்களை மிக குறைவாகவே வேலைக்கு எடுக்கின்றனர்.
மலாய் இனத்துக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கும் கொள்கைகளை கொண்டுள்ளதுதான் மலேசிய அரசின் கொள்கைகள்.இந்த கொள்கைகளின் மூலம் அனைத்து துறைகளில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.கலாச்சாரத்திலும் அரசின் தலையீடு தலைத்தூக்கியுள்ளது.வழிபாட்டுத்தளங்களைக் கூட இழக்க வேண்டிய நிலையில் உள்ளது மலேசிய தமிழினம்.சமுதாய தலைவர்கள் என்று தங்களை பாறைசாற்றிக்கொண்டவர்களோ,தங்கள் சமுதாயத்திற்காக எந்தவொரு அநியாயத்தையும் தட்டிக் கேட்காமல அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே உள்ளனர்.பெரும்பானமை மலாய் இனத்தோரிடம் அனுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தங்களது சுயநலத்தை மட்டுமே பேணி வந்துள்ளனர்;சமுதாய நலனை மறந்தே விட்டிருந்தனர் இந்த சமுதாயத்துரோகிகள்.இது போன்றதொரு சூழ்நிலையில்,உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான இளைய தமிழர்கள் தங்களுடைய மானசீக இயக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மூன்றாவது காரணம்,புலிகளின் தன்னலமற்ற போரட்டத்தின் மீது தமிழர்களுக்கு உள்ள ஈர்ப்பு.புலிகள் இயக்கத்தின் போராட்டம்,புலி உறுப்பினர்களின் கட்டுக்கோப்பு,அவர்களின் வெற்றிகள் மலேசிய தமிழர்களின் மத்தியில் புலிகள் இயக்கம் பிரபலமாக மிக முக்கிய காரணங்கள்.மலேசியத் தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறார்கள்,இதற்கு காரணம்,உலக அரங்கில்,தமிழர்கள் என்றாலே புலிகள் என்ற கருத்து நிலவுவதால்.
புலிகளின் தலைமைத்துவத்தின் மீது ஓர் அபரீதமான பற்றைக் கொண்டுள்ளனர் மலேசிய தமிழர்கள்.இதற்கு முக்கிய காரணம்,மலேசியாவில் நெடுங்காலமாக கோலேச்சி வரும் தமிழ் தலைவர்களின் சுயநல தன்மையும், முற்போக்கில்லா சிந்தனையும்தான்.மலேசிய தமிழர்களின் தலைவர்கள்,என்று தங்களை பாறைசாற்றிக்கொள்ளும் தலைவர்கள்,தங்களின் சுயநலத்தை முன்படுத்தி சிறுபான்மை தமிழர்களின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.ஆளும் பெரும்பான்மை மலாய் கட்சியோடு சேர்ந்து கொண்டு,சொந்த இனத்திற்கு சொந்தமான அனைத்தையும் தங்களின் பதவி சுகத்திற்காக விற்றே விட்டிருந்தனர்.ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்,காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டதிலிருந்து மலேசிய தமிழ் சமூகம் அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம்.மலேசிய தமிழர்களின் பொதுநலனை காக்க குறிப்பிட்டு சொல்லும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, எந்தவொரு இயக்கங்களோ செயல்படவில்லை.தங்களது சுயநலனுக்காக மொத்த இனத்தையும் கூறு போட்டனரே தவிர,உரிமைகளை மீட்டெடுக்க,அநீதியை எதிர்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.சொந்த இனத்தின் உரிமைகளை விட்டுகொடுத்து விட்டு மலேசியாவின் ஆளும் கட்சியின் இனவாத அரசியலுக்கு ஆதரவளித்தார்களே அன்றி,மலேசிய தமிழ் சமுதாயத்தின் அரசியல்,பொருளாதார,சமூக மேம்பாட்டைப் பற்றி யாரும் கேட்கவும் இல்லை,அதற்காக கவலைப்படவும் இல்லை.
மலேசியாவில் வாழும் தமிழர்களில் ஏறக்குறைய 75 சதவீதம் பேர்,குறைந்த அல்லது நடுத்தர வருமானத்தை பெருபவர்கள்.இவர்களில் பெரும்பாலோர், தோட்டப்புறங்களிலும் புறநகர் பகுதியிலும் வாழ்கிறார்கள்.மலேசிய தமிழர்களின் சொத்துடமை,வெறும் 1.5 சதவீதம் மட்டுமே;இதிலும் பெரும் பகுதி பாட்டாளி தமிழ் வர்க்கத்தைப் பற்றியோ,அவர்களின் போரட்டத்தைப் பற்றியோ கவலைப்படாத பணக்கார தமிழர்களையே சேரும்.
மொத்தத்தில்,ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தமிழர்கள் சுரண்டப்பட்டனர், ஏமாற்றப்பட்டனர்.இனிவரும் காலங்களில் இந்த சுரண்டல்களும் ஏமாற்று நாடகங்களும் தொடருமானால்,மலேசிய தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை வேறுவிதமாக அமையக்கூடும்.ஒரு முன்னாள் அரசியல்வாதி கூறியதைப் போல்,"தமிழர்கள் நாங்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல",என்ற கூற்றுக்கேற்ப எதுவும் சாத்தியம்.அண்மையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ் கலாச்சார நிகழ்வின் போது ஒரு மாணவரின் உரையும் இதைத்தான் பிரதிபலிக்கிறது. அம்மாணவர் கூறினார், "இனியும் எங்களின் கல்வி,கலாச்சார சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கம் கண்மூடித்தனமாக நடந்துக்கொள்ளுமானால்,எங்களுக்கு வேறு வழியில்லை, எங்களுக்கென்று தனிக்கொடி பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை."
31.7.08
இந்த்ராஃபின் விலை வெறும் 5 இலட்சம்தானா??
இந்தியர்களின் சாபக்கேடு மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் RS.தனேந்திரன், இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.இந்த்ராஃப் ஆதரவாளர்களை மஇகாவில் இணைப்பதற்கு 500,000(5 இலட்சம்) ரிங்கிட்டை மலேசிய இந்தியர்களின் சாபக்கேடான S.சாமிவேலு விடமிருந்து பெற்றுள்ளார்.5 வீரர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் போது,இந்த புல்லுருவி சொந்த இனத்தை விலைபேசியுள்ளான். பட்டவொர்த் மகாமரியம்மன் ஆலய வெள்ளி இரத நன்கொடையை கையாடல் செய்த இந்த பச்சோந்தி இப்போது,ஈப்போவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது.தனேந்திரனோடு சேர்ந்து இந்த துரோகத்தை இழைத்துள்ள இன்னும் சிலர்,பின்வருமாறு, G.அசோகன்,G.முகுந்தன் மற்றும் மலேசியாக்கினி நிருபர் ஆதி.வீரங்கன் ஆகியோர்.இந்திய சமுதாயத்தின் துரோகிகளே,அம்மன் உங்களை நரகத்துக்கு அனுப்புவாளாக.
ஆங்கிலத்தில்,
The Indian dillema lurks it ugly head again.National Coordinator of HINDRAF, RS.Thanendran has betrayed d Indians by accepting 500,000 bribe fr d Great Indian Robber,S.Samy Vellu,to get HINDRAF supporters to join d rest of d thieves in MIC.What a shame?5 heroes languishing in jail & dis scumbag sells out his race.Having cheated silver chariot fund of d Mahamariamman Temple Butterworth,Thanenthiran is in hiding in Ipoh.His chronies who hv also recieved money fr Samy vellu include G.Asokhan,G.Mukunthan & Malaysiakini reporter Athi.Veeranggan.Taritors of d Indian comnty,may Amman Shakthi burn u to hell.
இதனால்தான் இவ்வளவு நாளும்,மக்கள் கூட்டணி அரசாங்கத்தை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர் இந்த நன்றி மறந்த நரிக்கூட்டத்தினர்.
தனேந்திரன் இதையெல்லாம் செய்யக்கூடிய ஆள்தான் என்று முன்பிலிருந்து ஒரு பேச்சு இருந்த போதிலும்,உதயா அண்ணனுக்காக பல ஆதரவாளர்கள், அடக்கி வாசித்தனர்.இனிமேலும் அமைதியாய் இருந்தால்,நாளைக்கே உள்ளே உள்ள 5 பேரும் பணம் வாங்கி விட்டன்ர் என்பார் தனேந்திரன்.
தாங்கள் கேட்ட பதவியை மக்கள் கூட்டணி அரசு தரவில்லை என்றதும், கொள்கை என்பதையே விற்றுவிட்ட இவர்களெல்லாம்,பணத்துக்காக் சொந்த ம....... , தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம் என்று பார்க்கிறேன்.
இனிமேலும் இந்திய சமுதாயம் பொறுத்தல் கூடாது.
இந்திய சமுதாயத்துக்கு துரோகம் இழைப்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.சாமிவேலுவுக்கே பாடம் கற்பித்துள்ளோம் நாம்.
இவர்களெல்லாம் என்ன,வெறும் காளான்கள்.
பொறுத்தது போதும்,பொங்கியெலுவோம் தமிழர்களே,
பாடம் கற்பிப்போம் இந்த தனெந்திரனுக்கும்,அவர்தன் கைக்கூலிகளுக்கும்.
போராட்டம் ஓயாது,
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்.
28.7.08
வேண்டாம் தனேந்திரன்
இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற வேட்கையோடு புறப்பட்ட 5 தலைவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலும்,1 தலைவர் அந்நிய தேசத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் இவ்வேளையில் இந்த்ராஃபின் பெயரை பயன்படுத்தி சில நயவஞ்சக சுயநலவாதிகள் தங்களின் சுயநலங்களை நிவர்த்தி செய்துக்கொள்வதை காண்கையில் மனம் வெம்புகிறது.
தூய்மையான போராட்டம்,சிதைந்து விடுமோ என்ற தவிப்பு நவம்பர் 25 பேரணியில் கலந்துக்கொண்ட எந்த தமிழனுக்கும் வருவது இயல்புதான்.
ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் ஒரே குரலில் கொடுங்கோல் பாரிசான்(பாசிஸான்) ஆட்சியையும்,ஒத்தூதும் மஇகாவையும் மலேசியாவின் 12வது பொதுத்தேர்தலில் எதிர்த்து நின்றது.நமது சகோதர இனங்களான மலாய்,சீன சமூகங்களின் ஆதரவோடும் பாரிசானின் மூன்றில் இரண்டு பெரும்பானமையை முறித்தோம்.அப்பொழுதும் யார் இந்த்ராஃப் தலைவர்கள் என்று பார்க்கவில்லை இந்த சமூகம்.உரிமைக்காக சிறைவாசம் ஏற்றிருக்கும் ஐவரைத்தான் நினைத்தது இந்த சமூகம்.
பதவி பித்து
இவர்தான் இந்த்ராஃபின் தலைமைத்துவம் என்பது போல் செயல்படும் தனேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் நிபோங் திபால் ஆலயம் ஒன்றில் புரிந்த ஆர்ப்பாட்டங்கள் மலேசிய தமிழ் பத்திரிக்கையில் பக்கம்,பக்கமாய் வெளிவந்ததே.
இவருடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக இந்தராஃபின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றது என்பதே உண்மை.சுயநலம் தலைத்தூக்கி, இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தினால்தான் தோற்றது மஇகா.ஒரு மனிதனின் சுயநலப்போக்கால்,ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலான் இந்த்ராஃப் தோற்றுவிடக் கூடதென்பதுதான் எமது எதிர்பார்ப்பு
இந்த்ராஃப் ஆதரவாளர்கள் பலரின் மத்தியில் நிலவும் கருத்து இது.இப்படி கூறாதவர்கள்,இந்த்ராஃப் ஆதரவாளர்கள் என்பதி விட தனேந்திரன் ஆதரவாளர்கள் என்பதுதான் உண்மை.
வேண்டாம் சுயநலம்,வேண்டாம் தனேந்திரன்....
7.7.08
அமைச்சரை சந்திக்க மறுத்தார் உதயா.....

- அமைச்சரின் நோக்கம் ஒன்றுதான்,இந்த்ராஃப் தலைவர்கள் தாங்கள் மாறிவிட்டதாக கூறி விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என் கோரினர் என்ற பரப்புரை செய்யலாம்.
- இந்த்ராஃப்-இன் போராட்டத்தில் இருக்கும் உண்மையை நான் அறிவேன்,ஒரு போதும் இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நான் வருந்தியதில்லை.
- இதற்கு முன்னர்,இதே அமைச்சர் இந்த்ராஃப் மீது பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.மக்கள் மத்தியில் இந்த்ராஃப் ஒரு தேசவிரோத அமைப்பு என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
- எனது இந்த போராட்டமானது,கடந்த 51 வருடங்களாக இனவாத அம்னோ அரசாங்கத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு,தொடர்ச்சியாக காலனித்துவப்படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படும் நீதி போராட்டம்.இதற்காக அனைத்து தியாகங்களையும் செய்ய நான் தயார்.
இந்த்ராஃபின் ஆதராவாளர்கள் அனைவரும் தங்களது போராட்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நாம் செய்யும் இந்த சேவையை எண்ணி நாம் பெருமைக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கெதிராக பாவிக்கப்பட்டிருக்கும் கொடுங்கோல் இசா சட்டம், எவ்வாறெல்லாம் இந்த நாட்டு இந்தியர்களை அம்னோ அரசாங்கம் தொடர்ந்து நசுக்குகிறது என்பதை வெளி உலகத்திற்கு படம் பிடித்து காட்ட வேண்டும். போராட்டம் ஒயாது."
இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நீதி கேட்டு மலேசியாவின் கோலாலம்பூர் சாலைகளில் குவிந்த இந்தியர்களின் பேரணியை ஏற்பாடு செய்ததன் வழி,நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த்ராஃப் தலைவர்கள் ஐவர்,உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த்வொரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த்ராஃப் அமைப்பையும்,அதன் தலைவர்களையும் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று அம்னோ அரசாங்கம் அறிவித்திருந்தது.உரிமைப்போராளிகளை சிறையில் அடைத்ததால் வெகுண்ட இந்திய சமுதாயம்,இம்முறை தேர்தலில் எதிர்கட்சிகளின் பக்கம் சாய்ந்ததால்,அம்னோ அரசாங்கம் 6 மாநிலங்களையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பதிவில்,இரங்கராஜ நம்பியின் கொள்கை பிடிப்பைக் கண்டு வியந்தேன்.தற்காலத்தில் நம்பியைப் போல் பிடிப்புள்ள மனிதர்கள் இருப்பார்களா என்று வியந்தேன்.
இருக்கவே,இருக்கிறார் எங்கள் உரிமைப்போராளி உதயக்குமார்.
அவரின் போராட்டம் ஒயாது,அவரை விடுவிக்க சொல்லி நாங்கள் நடத்தும் போராட்டமும் ஒயாது.எங்கள் இலக்கெல்லாம் ஒன்றுதான்,மலேசிய திருநாட்டில் இந்திய சமுதாயம் மற்ற இனங்களுக்கு நிகராக தலைநிமிர வேண்டுமென்பதே.உதயாவைப் போல் கொள்கை பிடிப்புள்ள தலைவன் எங்களை வழிநடத்தும் வரை எங்கள் போராட்டம் தோற்காது!!
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்!!
6.7.08
இரங்கராஜன் நம்பி.......ஓர் உரிமைப்போராளி!!

தமிழ் திரையுலகை உலக் பரிணாமத்திற்குக் கொண்டுச்சென்ற உலகநாயகன், தசாவதாரத்தில் எடுத்திருக்கும் பத்து அவதாரங்களில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமானது,முதன்முதலில் தோன்றும் இரங்கராஜ நம்பியின் கதாபாத்திரம்தான்.
தனதுரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவன் இந்த இரங்கராஜ நம்பி!!
சிதம்பரத்தில் இருந்து கோவிந்தராஜ பெருமாளின் மூலவர் சிலையை பெயர்த்தெடுக்க ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.தன் உயிரினும் மேலாக தாம் நேசிக்கும் இறைவனை யாரும் நெருங்காமல் தடுக்கிறான் இரங்கராஜ நம்பி.
"சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம்,கர்வம் தவிர்க்க சொல்" என்று மன்னனின் மதவெறியையும்,சைவ கர்வத்தையும் இடித்துரைக்கிறான். படைகளை வரதராஜ பெருமாளின் சன்னிதானத்திற்குள் ஏவி இரங்கராஜ நம்பியை கைது செய்கிறான் மன்னன்.வரதராஜ பெருமாளின் சிலயையும் பெயர்த்தெடுக்கிறான் மன்னன்!!இறுதிவரை அதை எதிர்த்து போராடி தோற்றும் போகிறான் இரங்கராஜ நம்பி.
கட்டுண்டு கிடக்கும் நம்பிக்கு மன்னன் இறுதி வாய்ப்பொன்றும் அளிக்கிறான். ஓம் நமசிவாய என்று கூறி உனது பாவங்களை போக்கிக்கொள் என்று உயிர்பிச்சையிடுகிறான்.தன் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைவனை,கண்ணீர் ததும்ப தொட்டு கும்பிட்டு;
"ஓம் நமோ நாரயணா"
என்று கதறுகிறான் இரங்கராஜ நம்பி!! வைணவர்களை அடக்கி ஒடுக்க நினைத்த மன்னனுக்கு சவால் விடும் நம்பியையும்,அவனுயிர் வரதராஜ பெருமானையும் கடலில் இறக்கிவிட ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்கன்.தில்லையிலிருந்து சமுத்திரம் வரையிலும் நம்பியை சிதையிலிட்டு இழுத்து வருகிறார்கள்.நம்பி அப்பொழுது உதிர்க்கும் சொற்கள்...
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது!!
இல்லை என்று சொன்ன பின்பும்-இன்றி அமையாது!!
23.5.08
எங்கே செல்கிறது இந்த்ராஃப்.....???

தேர்தலுக்கு முன்பு ஜசெகாவின் ஆலோசகர்,ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு லிம் கிட் சியாங் அவர்கள் கூறினார்,இந்தியர்கள் ஆதரவு முழுமையாக கிடைத்தால் 62 தொகுதிகள் எதிர்கட்சி வசமாகும் என்று.ஆனால் தேர்தலில் இன்னும் போனஸாக 20 தொகுதிகள் சேர்த்து 82 தொகுதிகளில் மக்கள் கூட்டணி வென்றது.இந்த வெற்றிக்கு இந்த்ராஃபின் எழுச்சியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்த்ராஃபின் போராட்டம் தேர்தலோடு முடிந்த ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதே சமுதாய ஆர்வலர்களின் கருத்தாகும்.இந்த்ராஃபின் போராட்டம் பொதுத்தேர்தலோடு முடிந்து விடவில்லை.தொடர்கின்றது.......
அந்த தொடர்ச்சி எங்கே,எதை நோக்கி செல்கின்றது என்பதிப்பற்றிதான் இந்த ஆய்வுக்கட்டுரை.
மார்ச் 8 அரசியல் சுனாமிக்கு பிறகு,5 மாநிலங்களை கைப்பற்றியது மக்கள் கூட்டணி.தேசிய முன்னணியை முழுமையாக எதிர்த்த இந்த்ராஃபின் ஒரிங்கிணைப்பாளர்கள் என்று பாரைசாற்றிக்கொள்ளும் சிலர் தொடர்ந்தார் போல் மக்கள் கூட்டணி வெற்றி விழாக்களில் கலந்துக்கொண்டனர். இதெல்லாம் வெற்றி களிப்பிற்காக மட்டுமல்ல,மற்றுமொன்றையும் எண்ணத்தில் வைத்துதான்.
இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பு பட்டவொர்த்தில் மையமிட்டிருந்தது போல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.பினாங்கில் மொத்த ஆட்சி மையமும் தங்களை கேட்டே நடப்பது போலவும் காட்டிக்கொள்ளப்பட்டது.