11.2.08

முக்கிய அறிவிப்பு....

நண்பர்களே,

மலேசியாவின் 13வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால்,நாட்டின் அரசியல் சூழ்நிலை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இம்முறை நடைப்பெறும் தேர்தலானது மக்கள் சக்தி எழுச்சிக்குப் பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால்,தமிழர்களின் முக்கிய தேர்தலாகவும் அமைந்துள்ளது.

இத்தேர்தலில் பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் பேராசிரியர் இராமாசாமி அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பினாங்கு மாநில ஜசெகவிலிருந்து தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்திருப்பதால்,எந்நேரத்திலும் நான் பினாங்கு செல்ல நேரிடலாம்.அரசியல் பணி காரணமாக எனது இலக்கிய பணிகளில் சற்று தேக்கம் எற்படலாம்.

அதிலும் முக்கியமாக,எனது கவிதையும்(http://www.kavithaiyum.blogspot.com/) வலைப்பதிவில்தான் எழுத்துகள் சற்றுக் குறையும்.

இன்று இரவு (12-02-2008) தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிய வருவதால்,எனது தேர்தல் பணிகள் இன்றிலிருந்து தொடங்கலாம். ஆகவே,எனது கிறுக்கல்களிலிருந்து உங்களூக்கு சிறு விடுதலை.தினமும் கிறுக்க முடியவில்லையெனினும்,2-3 நாட்களுக்கு ஒரு தடவையாவது கிறுக்கி உங்களை இம்சிப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து தேர்தல் பற்றிய உடனடி செய்திகள்,அறிவிப்புகள் ஆகியவையே இந்த ஒரு மாதத்திற்கு முக்கியத்துவம் பெரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆகவே,அரசியல் வாடை பிடிக்காதவர்கள் சற்று பொறுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

வாழ்க மக்கள் சக்தி;
ஒங்குக மக்கள் குரல்!!

1 comment:

Sathis Kumar said...

நண்பரே, சின்னத் திருத்தம்.. வரப்போகின்றத் பொதுத்தேர்தல் நாட்டின் 12வது பொதுத்தேர்தல்..