5.2.08

புலிகளோடு தொடர்பாமே,ஆராயலாமே!!

ஹிண்ட்ராஃபிற்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பாம்!!
சந்தேகிக்கிறார்களாம்!!

நேரடி தொடர்புகள் ஏதும் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்,
ஆனாலும் சில ஒற்றுமைகள் உள்ளன,அவை என்ன எனப்தை ஆராய்வோமே!!

போராட்டம்....
விடுதலை புலிகள் - ஆயுதப்போராட்டம்
ஹிண்ட்ராஃப் - அகிம்சை போராட்டம்
முதல் விடய்த்தில் எந்த ஒரு தொடர்பும் இல்லை!!

போராட்டத்திற்கான காரணம்....
விடுதலை புலிகள் - இனவாதம்,இன அழிப்பை எதிர்த்து
ஹிண்ட்ராஃப் - இனவாதம்,மறைமுக இன அழிப்பப எதிர்த்து
இந்த விடயத்தில் ஒற்றுமை இருக்கிறது.ஸ்ரீ லங்க அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை நேரடியாக மேற்கொள்கிறது.ம்லேசிய அரசாங்கம்,இன அழிப்பை மறைமுகமாக செயல்படுத்துகிறது.இனவாதம் இரண்டு தேசங்களிலும் தலைவிரித்து ஆடுகிறது.சிறுபான்மை தமிழர்கள்,இரண்டு நாடுகளிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்.ம்லேசியாவில் இனவாதமும்,இன் அழிப்பும் மிதமான நிலையில் உள்ளது என்பதால்தான்,போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறுகிறது!!

போராடும் இனங்கள்.......
விடுதலை புலிகள் - ஈழத்தமிழர்கள்
ஹிண்ட்ராஃப் - மலேசியத்தமிழர்கள்
இங்கும் ஒற்றுமை உள்ளது.இரண்டு நாடுகளிலும் போராடுவது ஒரே இனம் என்பதால்,இரண்டு அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதென்றால்,அல்-கய்டா பயங்கரவாதிகளும்,மலேசிய பெரும்பான்மை இனத்தவர்களான மலாய்க்காரர்களும் ஒரே மதம் என்பதால்,ம்லேசிய அரசாங்கத்திற்கும்,அல்-கய்டாவிற்கும் தொடர்பு உள்ளதா?!இது போன்ற கருத்துகள் எற்றுக்கொள்ள முடியாதவையாகும்!!

போரட்டத்தின் தலைமை.....
விடுதலை புலிகள் - மேதகு தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.
ஹிண்ட்ராஃப் - அண்ணன் உதயக்குமார் அவர்கள்
இரு தலைவர்களுமே தைரியத்தின் முழு உருவங்கள்.போரட்டத்தின் வழிமுறைகள் வேறாக இருந்த போதிலும்,இவர்களை நினைத்தாலே எதிரிகளின் வயிற்றில் புளி கரையும்.தலைவர் பிரபாகரனின் போர் உத்திகளுக்கு எப்படி சிங்களம் பயந்து அலறுகிறதோ,அதேபோல் அண்ணன் உதயக்குமார் அவர்க்ளின் போரட்ட உத்திகளை கண்டு அம்னோ அரசும்,அதன் கூட்டணி கட்சிகளும் அலறுகின்றன,அதனால்தான் அவரை சிறையில் அடைத்தனர்!!

கருதுகோள்.....
ஆயுதம் ஏந்தி சுதந்திர தேசம் கேட்டு போராடும் புலிகளையும்,அகிம்சை வழியில் அடிப்படை உரிமைகளை கேட்டு போராடும் ஹிண்ட்ராஃபையும் தொடர்பு படுத்துவது அபத்தமானது என்று தெரிந்தும் மலேசிய இனவாத அரசு,அதனை செய்துள்ளது.இதன் மூலம் அந்த ஐவரையும் சிறையில் அடைக்கலாம்.ஆனால்,அவர்கள் ஏற்படுத்திய சிந்தனை புரட்சியை ஒன்றும் செய்துவிட முடியாது!!

தங்களுடைய போராட்டத்தை திசைதிருப்பி தங்களை வன்முறை விரும்பிகள் என சித்தரிக்கப் பார்க்கும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஹிண்ட்ராஃபின் ஆதரவளர்கள் வன்முறைக்கு திரும்பினால்,நாடு என்ன ஆகும்?!!தங்கள் தலைவர்களின் வேண்டுகோளை மதித்துதான் அவர்கள் அமைதி காக்கிறார்கள்.அதனால்தான் நாடு தழுவிய நிலையில் பிரார்த்தனை கூட்டங்கள் நடுத்துகிறார்கள்.அதையும் பொறுக்காமல்,குறையும்,கிண்டலும் கூறி வருகிறார்கள் சிலர்.ஆனாலும் அமைதி ஒன்றே நம் வழியென்று நாங்கள் நம்புகின்றோம்.போற்றுவார் போற்றட்டும்,தூற்றூவார் தூற்றட்டும்,எல்லாம் இறைவனுக்கே,என்று சென்று கொண்டிருப்போம்.

அவர்களால் முடிந்ததெல்லாம் குறைகூறல்களும்,கீழறுப்பகளும்தான்.
ஏனென்றால் அர்சாங்கம்தான் அவர்கள் பக்கம்,
ஆண்டவன் நம்ம பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

1 comment:

Unknown said...

மக்கள் சக்தியின் பிராத்தனைக் கூட்டம்:

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நமது 5 மாமனிதர்களுக்காகவும் அவர்தம் குடும்பதினர்களுக்காகவும் கூட்டுப்பிராத்தனை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செயப்பட்டுள்ளது :

திகதி : 07 / 02 / 2008
நேரம்: காலை மணி 9.00 - மதியம் 1.00 வரை.
இடம்: முனிஸ்வரர் ஆலயம்
தாமான் டேசா அமான், 6வது மைல்,
தெலுக் இந்தான் - சிம்பாங் அம்பாட் சாலை,
தெலுக் இந்தான்.

இப்பிராத்தனையில் சுமார் 1000 பேர் கலந்துக் கொள்வார்கள் என்று எதிற்ப்பார்க்கப்படுகிறது.இப்பிராத்தனையில் அனைவரும் தவராது கலந்துச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

சிறுதொண்டன்,
நா.சுப்பரமணியம்.
சித்தியவான்.