23.2.08

வேண்டாம் பாரிசான்!!!

வேண்டாம் தேசிய முன்னணி!!

ஏன் வேண்டாம்?

கடந்த 13 வருடங்களாக பிறை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இராஜபதி ஒரு வருடத்தில் எத்தனை முறை நம் தொகுதிக்கு வந்திருப்பார்?ஒரு மாதத்திற்கு ஒரு முறையேனும் வந்திருப்பாரா??ஏதாவது ருக்குன் தெத்தாங்கா நிகழ்வு என்றால் தலை காட்டுவார்..அவ்வளவுதான்!!
ஒரு மக்கள் பிரதிநிதியின் வேலை அவ்வளவுதானா??நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்!!


1995 பொது தேர்தலின் போது கம்போங் தெலுக்-விற்கு வருகை தந்த டத்தோஸ்ரீ சாமிவேலு கூறினார்.
"உங்கள் அனைவருக்கும் வீட்டுக்கு வீடு,தரை வீடு வாங்கி தருவதற்கு நான் பொறுப்பு!"
ஆனால் அந்த வருட கடைசியிலேயே நாமெல்லாம் கம்போங் தெலுக்,பிறை தோட்டத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கொண்டேனா வீடுகளில் அடைக்கப்பட்டோம்.அதன் பிறகுதான் நாம் இன்று இருக்கும் இந்த வீடுகள் கட்டப்பட்டன.சாமிவேலுவின் மொழியில் இதுதான் தரை வீடுகளோ?! இன்று வாக்குகள் கேட்டு வரும் கிருஷ்ணனோ,அல்லது இங்கு இயங்கும் மஇகாகாரர்களோ இதற்கு பதில் சொல்வார்களா??

1999இல் பொதுத்தேர்தல் வந்த பொழுது இராஜபதி மீண்டும் வந்தார்,"உங்களை சீக்கிரம் உங்கள் வீட்டில் குடிபுக வைக்கிறேன்,எனக்கு ஓட்டு போடுங்கள்!"என்று வந்தார்.நீங்களும் போட்டீர்கள்,மறு வருடமே வசதிகள் குறைந்த இந்த அடுக்கமாடி குடிசைக்கு நாம் மாற்றப்பட்டோம்.முதல் வருடம் தொடங்கி பல தொல்லைகள் நம்மை தொடர்கின்றன.குப்பைகளை கொட்ட ஒரு வழியில்லை,எங்கு பார்த்தாலும் குப்பை,கூளங்கள்.முதலில் இயங்கிய 3 மின்தூக்கிகளில்(lift) 2 சில மாதங்களில் நிறுத்தப்பட்டு,ஒன்றுதான் இயங்கியது.இது 2004 வரை....

2004 தேர்தல் வந்தது,மீண்டும் இராஜபதி வந்தார்,இரண்டு மின் தூக்கிகளை இயங்க வைத்தார்(ஓரிரு மாதங்களில் அதுவும் போனது,வேறு கதை),உடனே ஒட்டு போட்டு அவரை வெல்ல வைத்தீர்கள்.மீண்டும் நல்ல (தூங்கும்)சேவை செய்தார்,இப்பொழுது,"நான் நிறைய (தூங்கும்)சேவை செய்து விட்டேன்,விலகிக்கொள்கிறேன்,"என்று சென்று விட்டார்.

இப்பொழுது அவர் வழியில் இன்னொரு மஇகாகாரர் வந்து,"எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் நானும் நல்ல சேவை செய்வேன்."என்கிறார்.
"இப்பொழுது அரவே ஒடாத மின் தூக்கியை நான் ஓட வைக்கிறேன்,எனக்கு ஓட்டு போடுங்கள்"என்று வீர வசனம் பேசுகிறார்.(சாமிவேலு கட்சியை சேர்ந்தவராயிற்றே,நன்றாய் வசனம்தான் பேசுவார்)எத்தனை நாட்களுக்கு ஓடும்,இரண்டு மாதம்,மூன்று மாதம்??அவ்வளவுதான்,இன்று போனவன் 5 வருடம் கழித்துதான் வருவான்!!மீண்டும் ஒரு லிஃப்ட் நாடகம் நடக்கும்,மறுபடியும் வெற்றி பாரிசானுக்கே!!!

ஐயா,நாமெல்லாம் மனிதர்கள்தானே?
இவர்கள் நம்மை ஆட்டு மந்தைகளைப் போல்தான் இது வரையிலும் நடத்தி வந்தனர்,இனிமேலும் நாம் இவர்களை நம்பலாமா??

வெறும் லிஃப்டுக்கும்,50வெள்ளி பணத்துக்கும்,ஒரிரு கைலிகளுக்கும் உங்கள் வாக்குகளை அங்கு போட்டு விட்டு அடுத்த 5 வருடங்களுக்கு கஷ்டபட வேண்டும் என் நம் தலையில் எழுதி உள்ளதா???
அல்லது நமது நெற்றியில்தான் "இளிச்சவாயர்கள்" என்று எழுதியுள்ளதா?
யோசியுங்கள்;பாரிசானை(மஇகா) நம்பி ஏமந்தது போதும்!!
மாற்று முண்ணனிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்!!!

இந்த பிரச்சனையை சட்ட நடவடிக்கை வழி தீர்த்திருக்க முடியும்,எந்த மஇகா தலைவரும், இந்த தொகுதியின் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினருக்கோ, மாநிலத்தின் முதல்வராக இருந்து இன்று நம் தொகுதியிலேயே நமது வாக்குகள் வேண்டி காத்திருக்கும் கோ சூ கூனுக்கோ அக்கறையில்லை.தேர்தல் வந்தவுடன் திடிர் பாசம் நம் மீது பொத்துக்கொண்டு வருகிறது!!

நம்பாதீர்கள்........
பொய்யர்களை நம்பாதிர்கள்!!!
பாரிசானை நம்பாதிர்கள்!!
உங்கள் வாக்கு யாருக்கு வேண்டுமானலும் விழலாம்,பாரிசான் வேட்பாளருக்கு மட்டும் விழ்க்கூடாது!!!

No comments: