23.2.08

பிறையில் தேர்தல் களம்....

பிறையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.திடீர்,திடீர் மாற்றங்கள் பல நிகழ்ந்தது பிறை தொகுதியில்தான்.
சாமிவேலுவிற்கு சில பாடங்கள் கற்றுக்கொடுத்தது நம் தொகுதி;எதிரணியின்(மாற்று முண்ணனி) நேர்மையை சோதிக்க வைத்ததும் நம் தொகுதிதான்.

சரி இப்பொழுது தொகுதியின் முக்கிய விடயத்திற்கு வருவோம்;
யாருக்கு நமது வாக்குகள்??


ஏன் L.கிருஷ்ணனுக்கு வாக்களிக்க கூடாது......

இவர் தேசிய முன்னணி(மஇகா) வேட்பாளர்.

தேசிய முண்ணனியை பொறுத்த வரை அவர்கள் இந்தியர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.கடந்த 25 நவம்பர் 2007 அன்று தலைநகரில் உரிமைகளை கேட்டு ஒன்று கூடிய நமது மக்களை கண்ணீர் புகை கொண்டும்,இரசாயன நீர் கொண்டும் தாக்கியவர்கள் இதே பரிசான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மலேசிய போலிசார்தான்.அதோடு மட்டுமல்லாமல் பத்துமலை திருத்தலத்தின் வாசற் கதவுகளை அடைத்து விட்டு அங்கிருந்த ஆயிரகணக்கான நம் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் இந்த பாரிசான் ஆட்சிதான்.அதோடு நின்று விடாமல் 31 தமிழர்கள் மீது கொலைக முயற்சி குற்றஞ்சாட்டியதும் இந்த பாரிசான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சட்டத்துறைதான்

No comments: