13.2.08

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.....

நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து,தேர்தல் ஆணையம் இன்று பொதுத்தேர்தலுக்கான நாளை அறிவித்தது.தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைவரான, அப்துல் ரஷிட் அவர்கள் இந்த தகவலை இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி விட வேண்டும் என்பதை மலேசிய அரசியலமைப்பில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே நட்டின் 12வது பொதுத்தேர்தல் எப்ரல் 13 தேதிக்கு முன்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.(ஏப்ரல் 15க்கு பிறகு முன்னாள் துணைப்பிரதமர் அன்வார்,தேர்தலில் போட்டியிட முடியுமென்பது குறிப்பிடத்தக்கது)

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர் அவர்கள்,பிப்ரவரி 24ஆம் தேதியை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாக அறிவித்தார்.அதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள முடியும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக 12 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொதுதேர்தலானது,மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 24க்கு பிறகுதான் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியுமென்றாலும்,
கடந்த சில மாதங்களாகவே,மறைமுக பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் விளக்க,இன்று தொடங்கி 22 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில்தான்,வருகிற 16ஆம் தேதி,இந்தியர்கள் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முன் ஒன்று கூட விருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 இந்து உரிமை பணிப்படை தலைவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள இந்த பேரணி நடத்த்ப்படுகிறது.இந்த பேரணிக்கு முறையாக விண்ணப்பித்தும்,காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய வாக்காளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற விவாதம் ஒரு புறம் தொடர்ந்து நடக்கையிலே,இந்த பேரணியினால்,இந்திய வாக்களர்களின் சிந்தனையில் ஏதாவது மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் கூறமுடியும்.மலேசிய காவல்துறை இம்முறை இந்தியர் பேரணியை எப்படி கையாளுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிப்ரவரி 16ஆம் நாள் நடக்கப்போவதுதான்,மார்ச் 8ஆம் தேதிக்கு அடித்தளம் என்று கூறலாம்.மீண்டும்,மீண்டும் நாம் ஒற்றுமையைக் காட்டுவோம்.நமது குரல் தொடர்ந்து ஓங்கட்டும்,நாம் நிச்சயம் வெல்வோம்!!

மக்கள் சக்தி வெல்லும்.

No comments: