4.2.08

காந்தியும்தான் போராடினார்....


காந்தி போராடினார்,
அகிம்சைவாதி என்றனர்!!
சுதந்திரம் தன்னை தந்தனர்!!

உதயா அண்ணனும் போராடினார்,
தீவிரவாதி என்றனர்!!
சிறைவாசம்தனைத் தந்தனர்!!

ஏனிந்த பாகுபாடு??
குழப்பத்தில் சூடேறுகிறது என் மண்டையோடு!!
புரிந்து விட்டது,காரணம் தெரிந்து விட்டது,
தமிழ்பட வசனம் ஒன்றுதான் நெஞ்சில் பட்டது!!
காந்தி போராடியது வெள்ளைக்காரனிடத்தில்,
உதயா அண்ணன் போராடுவது கொள்ளைக்காரனிடத்தில்!!

-சதீஸ்-

ஒழிக இனவாத தேமு அரசு,
வாழ்க ம்க்கள் சக்தி,
ஓங்குக மக்கள் குரல்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

பின்குறிப்பு :
இது என் முதல் பிரசுர கவிதை,இதனை தனது வலைபதிவில் பிரசுரித்த நண்பர் சதீஷ்குமாரின் பெருந்தன்மைக்கும்,என்னை எழுத சொல்லி ஊக்கமளித்ததற்கும் நன்றி.தொடரட்டும் அவரின் தமிழ் பணி.
நண்பர் சதிஷ்குமாரின் வலைப்பதிவு முகவரி :
http://www.olaichuvadi.blogspot.com/

No comments: