24.1.10

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...?!

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...?!
காற்றைக்குடிக்கும் தவரமாகி, காலம் கழிப்பதுவோ.....?!
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை, மன்னன் ஆளுவதோ...?!
தாய்தின்ற மண்ணே..!!

தமிழர் காணும் துயரம் கண்டு, தலையை சுற்றும் கோளே, அழாதே...!!
என்றோ ஒரு நாள் விடியும் என்றே, இரவை சுமக்கும் நாளே, அழாதே..!!
நுற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் துங்கும் வாளே, அழாதே..!!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ, என்னோடு அழும் யாழே, அழாதே...!!

நெல்லாடிய நிலம் எங்கே..??
சொல்லாடிய அவை எங்கே..??
வில்லாடிய களம் எங்கே...??
கல்லாடிய சிலை எங்கே...??
தாய்த்தின்ற மண்ணே.... இது பிள்ளையின் கதறல்.... ஒரு பேரரசன் புலம்பல்....!!!
- வைரமுத்து; ஆயிரத்தில் ஒருவன் -