30.5.09

தலைவர் பிரபாகரன் நிச்சயம் 5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார்....

தமிழீழ தேசிய போராட்டத்தின் நெடுகிலும், தலைவர் பிரபாகரன் பல இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகளை குவித்துள்ளார். தமிழீழ தேசிய போராட்டத்தை உற்று கவனித்து வருபவர்கள் இதனை வெகுவாக அறிவார்கள். உலகத்தில் உள்ள நாடுகள் எல்லாம், நாடில்லா தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் இலங்கை இனவெறி அரசூக்கு தோள்கொடுத்து உதவிய நான்காம் கட்ட ஈழப்போரில், புலிகளுக்கு ஏற்பட்டது பின்னடைவுதான் என்ற பொழுதிலும், புலி பதுங்குவது பாய்வதற்கு என்பதுதான் நமக்கு நன்றாக தெரியும்.

பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று அறிவிப்பதன் மூலம், உளவியல் பலவீனத்தை புலிப்போராளிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை சரணடைய வைத்து விடலாம் என்று நம்புகிறது இலங்கை இனவெறி அரசு. இதற்கிடையில், புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனும் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பிற்கும், இந்திய உளவுத்துறையான (RAW)ராவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அனைத்துலக காவல்துறையான இண்டர்போலால் தேடப்படுபவர்களின் பட்டியலில் க.பத்மநாபன் சேர்க்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் வலுக்கிறது.

எது எப்படியிருப்பினும், தலைவர் உயிரோடுதான் உள்ளார்,5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பர் என்று உலகம் முழுவதும் பரந்துக்கிடக்கும் தமிழர்களும் நம்புகிறார்கள். முன்பு, தமிழீழ-இலங்கை அரசுகளுக்கான அமைதிப்பேச்சுகளில் பங்குபெற்றவரும், இன்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ள பேராசிரியர் இராமசாமி அவர்களும் அவ்வாறே கூறுகிறார். அவரின் அறிக்கை...(
இங்கே சொடுக்கவும்)

பேராசிரியர் அவர்களைப் போலவே, ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகிய தமிழ்நாட்டு தலைவர்களும் தலைவர் பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர். ஆகவே,ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் முன்னெடுக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. உலகத்தமிழர்களான நாம், தலைவரின் கரத்தை பலப்படுத்தி, நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இழப்புகளை கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போர் தமிழ் தேசியத்திற்கு வழி ஏற்படுத்த உறுதுணையாக இருப்போமாக.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்...

25.5.09

மரணத்தை வென்ற மாவீரன்......பிரபாகரன்


இன்று முற்பகல், புலிகளின் அனைத்துலக பிரிவுகளுக்கான செயலாளர் கா.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியானதை, நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

உலக தமிழர்களுக்கெல்லாம், ஒரே தலைவனாக இருந்த பிரபாகரன், அவரது கடைசி நிமிடங்களில் கூட தனது தாய் மண்ணான ஈழத்தையும், மக்களையும் தனியே விட்டு செல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டதாக பத்மநாபனின் அறிக்கை கூறுகிறது. தனது கடைசி மூச்சு வரை தனது மக்களுக்காகவே வழ்ந்த மாமனிதன் பிரபாகரன் மட்டுமே.

நேற்றுதான், பட்டவொர்த் நகரில், பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக்கிடக்கும் மர்ம முடிச்சுகள் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடத்தினோம். நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு சில மணித்துளிகள் இருக்கும்பொழுது, பத்மநாபன் அவர்களின் மூலமாக தலைவரின் மரண செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. நெஞ்சம் வெடித்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு. எந்த தலைவனின் மரண செய்தி பொய்யென்று நாம் அறிவிக்கப்போகின்றோமோ,அந்த செய்தி உண்மையென்று உறுதிப்படுத்தப்படும்பொழுது எப்படியிருக்கும்?!

நிகழ்வில் முன்னதாக பேசிய இரண்டு பேச்சாளர்களும், பிரபாகரன் மரண செய்தியில் தெரியும் முரண்பாடுகளை விவரமாக விவாதித்தனர். அடுத்து பேச வந்த பேராசிரியர் இராமசாமி அவர்களோ, பிரபாகரனின் அண்மைய தகவல்கள் எதையும் நேரடியாக கூறாமல், விடுதலைப்புலிகளின் அறிவிப்பிற்கு காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். தலைவரின் மரண செய்தியானது, பேராசிரியர் அவர்களை பெரிதும் பாதித்திருந்தது என்பதை அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே அறிவர். கண்கள் கலங்கிய பேராசிரியரை பார்ப்பது அதுவே முதல் முறை என்று பலர் என்னிடம் கூறினர்.

தோழி பவனேஸ்வரியின் எழுச்சிமிகு கவிதை, பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட பெண்ணியம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ் பெண்களென்றாலே, சினிமா மாயையிலும், தொலைகாட்சி தொடர்களிலும் மூழ்கிக்கிடப்பவர்கள் என்ற கூற்றையெல்லாம், அறவே பொய்ப்பித்தது தோழி பவனேஸ்வரியின் தைரியம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நிறைய பெண்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் கனவான, கௌரவமான தமிழின உணர்ச்சி இன்னும் மறையவில்லை என்ற ஆறுதல் எனக்குள் ஏற்பட்டது.

எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது, எனது நெஞ்சம் எவ்வாறு விம்மிக்கொண்டிருந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழினத்தின் கேவலமான சாபக்கேடு, கொலைஞன் கருணாநிதியை கண்டித்தேன். கலைஞர் கருணாநிதியை நான் "கொலைஞர்" என்று கூறியதில் சிலருக்கு வருத்தம். யார் என்ன சொன்ன போதிலும், என்னுடைய கருத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். கருணாநிதி என்ற கொலைஞன், தமிழினத்தின் துரோகி; எட்டப்பனின் வாரிசு!!!

எனது எண்ணக்குமுறல்களில் நான் கூறியவற்றில் மிக முக்கியமான கருத்து.
பிரபாகரன் மரணத்தை வென்ற மாவீரன் என்பதுதான்.

இந்த பூமிப்பந்தில் கடைசித்தமிழன் உள்ள வரை, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பிரபாகரன் வாழ்ந்துக்கொண்டிருப்பாரே அன்றி, ஒரு பொழுதும் அவருக்கு மறைவு கிடையாது. மரணத்தையெல்லாம் வென்று, மக்கள் மனதில் என்றும் வாழும் காவல் தெய்வமாக பிரபாகரன் இருப்பார் என்பதே உண்மை.

ஆகவே, பிரபாகரன் மறைவு, வீரமரணம் என்ற செய்தியெல்லாம் கண்டு தமிழர்கள் கலங்கக்கூடாது. பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட கனவை எப்படி நனவாக்குவது என்பதே நமது ஒட்டு மொத்த குறிக்கோளாக இருக்க வேண்டும். மீண்டும் தலையெடுக்கப்போகும் ஐந்தாம் கட்ட ஈழப்போரில், நம்மால் ஆன உதவிகளையெல்லாம் செய்து, தமிழர் படையை வெற்றிக்கொள்ள செய்ய வேண்டும்.

தமிழர்தமை காக்க வந்த தமிழ்புலியே,
தமிழர் நெஞ்சமெல்லாம் நீ தந்த உரமிருக்கும்!!

கண்ட தேசம் கனவாகிப் போவதில்லை,
மலர்ந்துவிடும் வெகு விரைவில் தமிழீழம்!!

தமிழர் மனமெல்லாம் நிறைந்திருக்கும் தலைமகனே,
ஓர்பொழுதும் மரணம் என்பது உமக்கில்லை!!

பூமிதனில் கடைசி தமிழன் உள்ளவரை,- அவர்தம்
நெஞ்சில் நீ வாழ்வாய் எப்பொழுதுமிறவாமல்!!

வாழ்க தமிழினம்!! வாழ்க பிரபாகரன்!!
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்!!

20.5.09

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப்போரளிகளுக்கும் வீர வணக்க நிகழ்வோடு, தமிழீழ தேசியத்தலைவர் தளபதி வே.பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக் கிடக்கும் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் விளக்கக்கூட்டம். நான்காம் கட்ட ஈழப்போரில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதேவேளை, தளபதி பிரபாகரன் "இறப்பு" செய்தியில் உள்ள மர்மங்களையும் பற்றி நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள் விளக்கமளிப்பர்கள். நிகழ்வின் விவரம் பின்வருமாறு :

நாள் : 24-05-2009
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
இடம் : டேவான் ஸ்ரீ மாரியம்மன், பட்டவொர்த்.
நேரம் : மாலை 7.00 மணிக்கு மேல்

பேச்சாளர்கள் :
சமூக சேவகர் க.முருகையன்
எழுத்தாளர் சை பீர் முகம்மது
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி

தமிழ் நெஞ்சங்களே திரண்டு வாருங்கள்!!

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளார் : பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!



இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது.

முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன.

கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தலைவர் பற்றிய காணொளிகள்.. சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப வெளியிடப்படுகின்றன. அவருடைய முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்ரி சேர்ஜரிக் முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர்.

அதுமட்டுமன்றி நேற்று நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்றுதான் மீட்கப்பட்டதாம் என்பதும்.. நாணயக்கார நேற்று நாம் அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்றதும்.. கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிரிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்பதற்கு இது நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.


1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டுதான் செத்தவரோ?

4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????


அண்மைய உறுதிப்படுத்தப் படாத தகவல் :
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.
''மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்'' என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.

நன்றி : தமிழ்வின்.காம் (tamilwin.com)
: தட்ஸ்தமிழ்.காம் (thatstamil.com)

8.5.09

இலங்கை விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடம்


மலேசியாவின் இரட்டை வேட அரசாங்கத்தின் தலைவர்!!

உலக அரங்கில் எங்கே மனித அவலங்கள் நடந்தாலும், உடனே அதற்கு எதிராக குரல் எழுப்ப மலேசியா அரசாங்கம் தயங்கியதில்லை. தென்னாப்பிரிக்காவில் அப்பர்தேய்ட் எனப்படும் இனவெறி தலைவிரித்தாடிய போது பொதுநலவாய(காமென்வெல்ட்) அமைப்பிலிருந்து தென்னப்பிரிக்காவை நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்ததே மலேசியா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். போஸ்னியா, கொசொவோ போன்ற பிராந்தியங்களில் இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மலேசிய அரசு மிகக்கடுமையாக அவற்றை கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பாலஸ்தீன விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேல் போய், இஸ்ரேல் நாட்டுடன் எந்தவொரு தூதரக உறவுகளும் இல்லை என்ற அளவுக்கு மலேசியாவின் வெளியுறவு கொள்கை மனிதாபிமானத்தை முன்னிறுத்தியுள்ளது. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதனி நேரடியாகவே மலேசியா எதிர்த்தது. அதேபோல், பாலஸ்தீனம், போஸ்னியா, கொசொவோ, பிலிப்பின்ஸ், லெபனான் என்று உலகில் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டிக்கிறது மலேசிய அரசாங்கம். ஐரோப்பிய் கண்டத்தில் உள்ள நாடுகளில் நடக்கும் படுகொலைகள் மலேசிய அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியும் போது, நமது ஆசிய கண்டத்திலேயே உள்ள ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலைகள் மட்டும் தெரியவில்லை. இது மலேசிய தமிழர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மனிதாபிமான விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றுகின்றது.

இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை கண்டும் காணாதது போல் இருக்கும் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை என்னவென்று சொல்வது??

அண்மையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற அவசரக்கூட்டத்தின் விவாதத்தில் கலந்துக்கொண்ட பினாங்கு மாநில துணை முதல்வர், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை நிறுத்துமாறு இலங்கை அரசையும் வற்புறுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த இராய்ஸ் யாத்தீம், இலங்கையில் நிலைமைகளை தாங்கள் உற்று கவனிப்பதாகவும், ஈழத்தமிழர்களின் மீது மலேசிய தமிழார்களின் கரிசணையை கருத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இராய்ஸ் யாத்திம் வெளியுறவு அமைச்சிலிருந்து விலகும் வரை அதைப்பற்றி பேசவேயில்லை. தமிழர்கள், இன்று கேட்பார்கள் நாளை மறந்து விடுவார்கள் என்ற நினைப்புப்போல!!

மலேசிய அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் மஇகாவோ, ஏதோ இவர்கள் மனு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பதைப்போல் மனுக்கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கூட கொடுத்தனர். அமைச்சரவையில் மலேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழும் வேலையில் அதனுடைய விடையும் நமக்கு தெரிந்தே உள்ளது. கடந்த காலங்களில் மலேசியாவில் உள்ள தமிழர்களின் நிலை பற்றியே இந்த "பிரதிநிதிகள்" என்ன செய்துக்கொண்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் மலேசிய அரசு கொலைவ்வெறியன் மகிந்தாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருக்குமா?? அடிக்கடி சிங்கள காடையர் அமைச்சர்கள் மலேசியாவிற்கு வந்து புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பதாகக் கூறுவார்களா?? ம இகா மலேசியத்தமிழர்களுக்கு மட்டும் தீங்கிழைக்கவ்வில்லை, ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலைகளை நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி கண்டித்த மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை ஒப்புக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலஸ்தீனர்களின் துன்பத்தை புரிந்து ௧0 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மலேசிய அரசு, ஈழத்தில் பட்டினியால் சாகும் எம் தமிழர்களை நினைத்துக்கூட பார்க்கவில்லை. (பினாங்கு மாநில அரசு மட்டுமே, 15000 ரிங்கிட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு இன்னும் அதிகமாக தர விரும்பிய போதும், சட்ட சிக்கல் காராணமாகவே அதிக பட்சமாக 15000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
இதுவெல்லாம் மலேசிய அரசாங்கம், மனிதாபிமான விடயத்தில் இரட்டை வேடம் ஆடுவதை புலப்படுத்துகிறது.

கொசொவோவில் செத்தால் அவன் மனிதன்; போஸ்னியாவில் செத்தால் அவன் மனிதன், பாலஸ்தீனத்தில் செத்தாலும் மனிதன்; ஈழத்தில் சாவுபவன் மட்டும் மாடா?? கொசொவோ,போஸ்னியா,பாலஸ்தீனத்தில் துன்பப்பாடுவோரோடு மத அடிப்படையிலான தொடர்பு உள்ளதனால்தானே, மலேசியாவிற்கு அவர்களின் மீது அவ்வளவு அக்கறை??!! மலேசியாவில் வாழும தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களோடு இரத்த உறவே உள்ளதே, அதை புரிந்துக்கொள்ள இந்த முட்டாள் அரசாங்கத்தால் முடியவில்லையா?? அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முட்டாள் மலேசிய இந்திய காங்கிரஸ்காரனால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா??

காங்கிரஸ்க்காரன் எங்கிருந்தாலும் அவனை செருப்பால் அடிக்க வேண்டும்; அது இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், அல்லது மலேசிய இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், பொத்தம் பொதுவாக காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரித்தான்!!

இரட்டை வேடம் போடும் மலேசிய அரசே, உடனடியாக இலங்கை அரசாங்கத்தை போரை நிறுத்த வற்புறுத்து. மலேசிய வெளியுறவுத்துறையின் துணையமைச்சராக இருக்கும் தமிழனே, உனது சீன முதலாளிகளை திருப்தி படுத்துவதில் மட்டும் குறியாக இருக்காதே. உன்னைப்போல் ஒரு தமிழன்தான் அங்கு ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கிறான், முடிந்தால் அவனுக்கு உதவப்பார்!! எதற்கும் உருப்படாத சாதியைப் பிடித்துக்கொண்டு ஆடாதே!!!

தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா??

தமிழனின் உயிர் அவ்வளவு மலிவா??

தமிழனின் கோபம் தெரியுமா?? அவன் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா??
கடந்த மார்ச்8 தேர்தல் நினைவில் உள்ளதுதானே??

எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; எங்கள் ஈழத்தமிழர்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்!!