4.12.08

தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்


சுதந்திர சுவாசம்....
இதற்காக நாம் இழந்தவைதான் எத்தனை,எததனை....

எமது சரித்திரத்தை அழிக்க - யாழ்நூலகத்தை எறித்தான்!

எமது பெண்ணினத்தை ஒடுக்க - அவர்தம் கற்பை கலைத்தான்!!

எமது எதிர்காலத்தை அழிக்க - எமதுகுழந்தைகளை கொன்றொழித்தான்!!

சமாதானத்தை ஒழிக்க - தமிழ்செல்வனை அழித்தான்!!

தமிழீழத்தை இல்லாமல் ஆக்க -எண்ணிலடங்கா தமிழனை அழித்தான்!!

எதிரி எதை அழித்தினும் - எங்கள் சுதந்திர தாகத்தை அழிக்க இயலாது!!

ஈழ மண்ணில் எம் தமிழன் புதைக்கப்படவில்லை; - விதைக்கப்படுகிறான்!!

சிந்திய உதிரம்;
உதிர்ந்த மாவீரர்கள்;
கிளர்த்தெழுந்த தேசியம்;
எழுதிய கவிதை;

இவை எதுவும் வீணாகப்போவதில்லை!!

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........

27.11.08

தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்......


உலக தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் மிகவும் கவலையாக உற்று நோக்கப்படும் விடயம் எதுவெனில், ஸ்ரீ லங்கா படைகள் கிளிநோச்சியை வசப்படுத்தி விடுமா என்பதுதான்.தமிழன் என்றாலே அடிதான் வாங்குவான் என்று உலகமே நினைத்து நம்மை ஏளனப்படுத்திய போது, தமிழனுக்கு அடிக்கவும் தெரியும் என்று காட்டியது ஈழத்தமிழன்தான்.தங்கள் மீது திணிக்கப்பட்ட இனவெறி போக்கை, கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்காரவாதத்தை அகிம்சை முறையில் எதிர்த்து துவண்டு போன தமிழன்தான் ஈழத்தமிழன்.

துவண்டு போனவன் விழுந்து போய் விடவில்லை; எழுந்து நின்றான்!!

மாவீரர்கள்........

சிங்கள பேரினவாதத்தை ஆயுதமேந்தி எதிர்க்க துணிந்து, தமது இன்னுயிர்களை சுதந்திர வேட்கைக்காக துறந்த எமது மாவிரர்களை இவ்வேளையில் நினைத்து பார்க்கிறேன். காதல் தோல்வியில் உயிரை வெறுத்து, உயிர்விடும் ஜென்மங்களுக்கு மத்தியில், தாயக மண்ணின் சுதந்திரத்திற்காக,தனது நாளைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று வேட்கையோடு உயிரை தியாகம் செய்யும் இவர்கள் மாவீரர்கள் மட்டுமல்ல,மாமனிதர்களும் கூட. ஈழத்தின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை நீத்த ஒவ்வொரு தமிழ் மறவனும் அந்த புண்ணிய பூமியில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்!! அந்த விதையிலிருந்த தோன்றப்போகும் விருட்சங்கள்,சிங்கள் பேரினவாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!

பெண் புலிகள்......

எமது பண்டைய மறத்தமிழச்சிகள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர் என்று தமிழர்கள் எப்பொழுதும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. பண்டைய தமிழச்சிகளை நாம் பார்த்தது கிடையாது, ஆனால் கண்டிப்பாக அவ்வாறுதான் எமது பண்டைய தமிழ் பெண்கள் இருந்திருப்பார்கள் என்பதை இன்றைய தமிழ் மறவத்திகளைப் பார்க்கும் போது திண்ணமாகிறது. இன்றைய தமிழ் பெண்கள் புலியை முறத்தால் விரட்டவில்லை; தாங்களே புலியாகி,எதிரியை கொன்றொழிக்கின்றனர்.

எமது ஈழத்தமிழ் பெண்ணினம்,சிங்கள அரசின் பேரினவாத பிடியில் சிக்கி, தங்கள் உயிரை விட மேன்மையானதாக போற்றிக் காக்கும் கற்பைக் காப்பாற்ற கையில் எடுத்தது முறத்தையல்ல,நெருப்பைக் கக்கும் AK 47-ஐ.

நமது பண்பாட்டை ஆட்டம் 100 வகை, 200 வகை என்று சீரழிக்கும் பெண்களுக்கு மத்தியில்,சனிக்கிழமை வந்தால்,போதையிலும் கும்மாளத்திலும் கூடிக்கழிக்கும் பெண்களுக்கு மத்தியில், பண்பாட்டை காக்கும் தமிழச்சிகளையும், தாய்மண்ணின் சுதந்திரம் காக்க கையில் ஆயுதம் எந்திய புலிப்பெண்களையும் பார்க்கையில் எமது தமிழினத்தின் பண்பாடும்,மரபும் அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்து விடாது என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

தமிழினத்தலைவன்........

உலகத்தில் உள்ள தமிழருக்கெல்லாம், யார்தான் தலைவர் ??இராசேந்திர சோழனுக்குப் பிறகு அந்த தனித்தன்மை மிகுந்த தமிழன் ஒருவன் இருக்கிறானென்றால், அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
ஒரு சாரார்,கலைஞரை உலகத் தமிழரின் தலைவர் என்று கூறினாலும், அதில் எமக்கு உடன்பாடில்லை. பக்கம் இருக்கும் தேசத்தில் தமிழரை இன அழிப்பிலிருந்து காப்பற்ற முடியாமல்,அரசியல் காரணங்களுக்காக சூழ்நிலை கைதியாகிக் கிடக்கும் கலைஞரை நினைத்து உலகத்தின் எந்த மூலையில் உள்ள தமிழனும் பொறுமுவானே தவிர, பெருமைக் கொள்ள மாட்டான்.

தமிழர் என்றால் அடிமைகள் என்றும் ஏமாளிகள் என்றும் வெள்ளையன் குறித்து விட்டு சென்றுள்ள கூற்றை,உலகில் வாழும் தமிழர்களெல்லாம் நிருபித்து,சாசனம் எழுதிக்கொடுக்காமல் பல விஷயங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் அடிமை விலங்கை உடைத்து, தன்மானத்தை காக்க, வந்த தமிழர் தலைவன் பிரபாகரன் மட்டுமே. தமிழன் எங்கு போனாலும் அடிதான் வாங்கினான், திரும்பக்கொடுத்தது தமிழீழத்தில் மட்டும்தான்.

இராசேந்திரன் காலத்தில்,முப்படைகளை திரட்டி கம்போஜம் வரை வெற்றிக் கொண்டான் என பெருமை மட்டும்தான் நமக்கு மிஞ்சும் என்றிருந்த வேளையில், தரைப்படை,கடற்படை,வான்பாடை என்று நவீன வளர்ச்சியின் தேவைக்கேற்ப முப்படைகள் கண்டு தமிழரின் பெருமையை நிலைநிறுத்தியது பிரபாகரன்தான். அந்த இராசேந்திரன் கொண்டு சென்றது புலிக்கொடிதான் ; இன்றைய தமிழீழ இராச்சியத்தின் சின்னமும் புலிக்கொடிதான்.

வேட்கை விடுவதில்லை.........

பூநகரியை பிடித்து விட்டோம், கிளிநோச்சியை நெருங்கி விட்டோம், புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள் படைகளின் ஆணவத்திற்கு என்றுமே தாம் அடிபணிய போவதில்லை என்பதை 2008 மாவீரர் உரையில் தலைவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். வலிந்து திணிக்கப்பட்ட போரை, துணிந்து எதிர்த்து, வெல்வதற்கு தயாராக உள்ளனர் தமிழ் புலிகள். மிகச்சிறந்த போர் வல்லுனரான பிரபாகரனின் ராணுவ நகர்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சிங்கள் இராணுவம் தவிக்கப்போகும் காலம்,மிக அண்மையில் என்று நமது உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளதை நானும் பிரதிபலிக்கிறேன்.

சுதந்திர ஈழம் மலரும்..........

தமிழீழ சுதந்திரத்தை முன்னிறுத்தி நடைபெறும் உரிமைப்போரில்,தமிழர் கரம் வலுப்பெறப்போகும் நாள் வெகு தூரமில்லை.

அந்நாளை எதிர்கொள்ள உலகத் தமிழர் அனைவரும் கட்சி,மத,சாதி வேறுபாடுகளை மறந்து, சுதந்திர தமிழீழத்தை உலக நாடுகள் அங்கிகரிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் எழுப்பிடல் வேண்டும்.

கண்டனக்கூட்டத்திற்கு கூப்பிட்டால் மறுத்தளித்து விட்டு,ஈழத்தமிழர் ஆதரவு பேரணி என்ற பெயரில் கட்சி கோசங்கள் போன்ற கேவலமான அரசியலெல்லாம் இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் வேண்டாமென்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

தந்தை செல்வாவின் ஜனநாயக போரட்டத்தில் தொடங்கி, தியாகி திலிபனின் மறைவில் கொழுந்து விட்டெறிந்து, மாவிரர்களின் ஈகத்தால் தொடர்ந்தும் அணையாமல் எறிந்து கொண்டிருக்கும் சுதந்திர தீ, சிங்கள பேரினவாதத்தை எரித்து விடும் நாள் தூரம் இல்லை.

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........

27.10.08

எதற்கய்யா தீபாவாளி கொண்டாடனும்??மானமுள்ள தமிழர்களிடத்தில் ஒரு கேள்வி.

ம்
எதற்காக தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்??

ஈழத்தில் எமது மக்கள் சொல்லிலடங்கா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது தீபாவாளி என்ற பெயரில் ஓர் அனாவாசிய ஆர்ப்பாட்டங்கள் நமக்கு தேவைதானா??
ஒரு வேளை உணவு கூட இன்றி பசியிலே நமது குழந்தைகள் அங்கே வாடிக்கொண்டிருக்கும் போது,நாம் மட்டும் இங்கே கோழி,ஆடு என்று விழுங்குவதற்காகத்தான் இந்த தீபாவாளி ஒரு சாக்கா??
மழைக்குக்கூட ஒதுங்க இடமில்லாமல், மர நிழலிலும்,சாலை ஓரங்களிலும் பொழுதுகளை கழித்து,பாம்பு கடிக்கு ஆளாகி எமது தமிழன் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போது,நமது வீடுகளை சுற்றியும் வண்ண விளக்குகள் பொருத்தி ஒரு கொண்டாட்டம் தேவைதானா??

அங்கே எமது குழந்தைகள் விமான குண்டு வீச்சுக்கு அஞ்சி, பள்ளிக்கு செல்லாமல் பதுங்குக்குழிகளில் ஒழிந்துக் கொண்டிருக்கும் பொழுது,நாம் இங்கே வானவெடிகளையும் மத்தாப்புகளையும் சுழற்றி விளையாடுவது நியாயமா??

நமது தமிழர் மரபுப்படி,குடும்பத்தில் மரணம் சம்பவித்து விட்டால்,அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தவொரு பெருநாள்களையும் கொண்டாடாமல் துக்கம் அனுசரிப்பது முறை. ஈழத்தில் நமது சகோதரனும்,சகோதரியும், நமது தாய்மார்களும், நமது குழந்தைகளும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் செத்துகொண்டிருக்கும் பொழுது இங்கே எந்தவொரு சலனமுமில்லாமல் தீபாவாளி என்ற பெயரில் கண்டதையும் தின்று, கண்டபடி உடை அணிந்து, மது மயக்கத்தில் திளைத்திருக்கும் நாம் தமிழர் மரபுவழி வந்தவர்களா??

நாம் தீபாவளியை எப்படி கொண்டாடினாலும் சரி, ஈழத்தில் அழிந்துக்கொண்டிருக்கும் எமது தமிழர்களை இந்த வேளையில் சற்று நினைத்துப் பார்ப்போம்!!

23.10.08

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.

கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்

18.10.08

ஈழத்தமிழருக்காக ஒன்றிணைந்த தமிழ் நெஞங்களே....,நன்றி...நன்றி...நன்றி

கடந்த 17ஆம் தேதி,பிறை ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலய முன்புறம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான கண்டன கூட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம் என்றாலும்,அந்நிகழ்வின் விவரங்களை தத்தம் வலைப்பதிவுகளிலும்,அகப்பக்கங்களிலும் வெளியிட்டு மகத்தான ஆதரவை நல்கிய தமிழ் நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.

எமது நிகழ்வின் விவரங்களை விளம்பரப்படுத்தியிருந்த ஒவ்வொரு தமிழருக்கும் இவ்வேளையில் நன்றி.

மலேசிய வலைப்பதிவாளர்கள்,அகப்பக்கங்கள் மட்டுமின்றி,சில அனைத்துலக தமிழ் அகப்பக்கங்களும் நமது நிகழ்வின் விவரங்களை வெளியிட்டிருந்ததைக் கண்டு நாம் பெரிதும் மனம் மகிழ்ந்தோம்.

பாவேந்தரின், "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு" என்ற வரிகள்தாம் எம் நினைவுக்கு வந்தன.கடல் நம்மை பிரித்தாலும்,உணர்வு நம்மிடையே வலுவாய் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

வலைப்பதிவுகள்,அகப்பக்கங்கள் மட்டுமின்றி,கனேடிய தமிழ் வானொலி ஒன்றும் எமது நிகழ்வைப் பற்றி தமது செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் உள்ள தமிழ் தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு நிகழ்வைப் பற்றி வினவியதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட அரசியல் தலைவரும்,நமது நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட தடையை விவரித்ததோடு மட்டுமல்லாமல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்வைப் பற்றியும் கூறியுள்ளார்.

இன்று (18-10-2008) ஒன்றுகூடிய ஜசெக ஜாலான் பாரு,பிறை கிளையின் செயற்குழு ஈழத்தமிழர் ஆதரவு நிகழ்வை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு,நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். பினாங்கில் உள்ள தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளும் இந்நிகழ்வுக்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் ஈழத்தமிழருக்காக ஒரே குரலில் ஒலித்த அனைத்து தமிழுள்ளங்களுக்கும் நன்றி.


*17ஆம் தேதி நிகழ்வை வெளியிட்ட வலைப்பதிவுகள்/அகப்பக்கங்கள் :

http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_16.html

http://olaichuvadi.blogspot.com/2008/10/blog-post_9323.html

http://www.malaysiaindru.com/?p=5693

http://www.puthinam.com/full.php?2e4ZTH6cb3bfbCR34d2WXvD2a02K6JBe4d47Qp8c00agtTRBde2dC0cn2cc0AfYU3e

http://www.paristamil.com/tamilnews/?p=16025

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=5820&Itemid=9

http://www.seithy.com/briefEventDetail.php?event_id=75&language=tamil

http://nanavuhal.wordpress.com/2008/10/11/indian-malaysian-politics/

http://tamiluyir.blogspot.com/2008/10/blog-post_16.html

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/f2bf628df266dc71/b3fe9e1554f87b11?show_docid=b3fe9e1554f87b11

(எவருடைய வலைப்பதிவோ/அகப்பக்கமோ விடுப்பட்டிருந்தால் தயைக்கூர்ந்து மன்னிக்கவும்.)

16.10.08

மிக முக்கிய அறிவிப்பு.....ஈழ தமிழர் ஆதரவு போராட்டம் - தள்ளிவைப்பு

அன்புடைய தமிழ் நெஞ்சங்களே,

இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்
திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்வலைப்பதிவில் (மேலே காணப்படுவதைப்போல்) அறிவிக்கப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று முதல் இந்த்ராஃப் எனப்படும் இந்து உரிமை பணிப்படையை அரசு தடை செய்துள்ளதை நாம் அறிவோம்.ஈழத்தமிழருக்கான ஆதரவு போரட்டத்தை இந்த்ராஃப் ஆதரவு போராட்டம் என்று ஆதரவு கூட்டத்தை சீர்குலைக்க ஒர் சில தரப்பினர் முயற்சிப்பதாக எமக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்களை அடுத்தே,இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது.

மீண்டும் துரோகம்!!
தமிழனுக்கு எப்பொழுதுமே தமிழன்தான் துரோகம் புரிவான் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.ஈழ தமிழரின் நலம் காக்க அப்பேற்பட்ட அரசியல் எதிரிகளான தமிழக அரசியல் கட்சிகளே ஒன்றிணைந்து விட்ட போதிலும்,இது வரையிலும் தங்களை மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று பிதற்றிக்கொண்டவர்கள் ஈழ தமிழருக்காதரவான போரட்டத்தைப் பற்றி காவல் துறைக்கு தவறான தகவல்களை தந்து,அவ்வற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.(சில தமிழின துரோகிகள் தந்த தவறான தகவல்களால்,காவல்துறை என்னை 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியது,விசாரணையின் இறுதியில் ஈழ தமிழர் ஆதரவு போரட்டத்தை வேறோரு நாளுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வை தள்ளி வைப்பதற்கு பயம் காரணமல்ல;கவனம்தான் காரணம்,தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்கவே நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது)

தடைகள் தற்காலிகமே;
ஈழத்தமிழருக்கு ஆதரவான கவனயீர்ப்பு கூட்டத்தை எப்படியேனும் நடத்தி விட வேண்டும் என்ற வேட்கை முன்பை விட இப்போதுதான் அதிகமாகியுள்ளது.எதிர்வரும் 24ஆம் தேதி,அதாவது இன்றிலிருந்து ஒரே வாரத்தில்,ஈழத்தமிழருக்கான ஆதரவு கூட்டம் பினாங்கு மாநிலத்தில் மையமிட்டுள்ள பல்வேறு தமிழ் சார்புடைய இயக்கங்களின் ஆதரவோடு மிகப்பெரிய அளவில்,பட்டவொர்த் நகரில் நடத்தப்படுமென்பதை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.நிகழ்வின் முழு விவரங்களும்,எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

எமது அறிக்கைக்கு மதிப்பளித்து தத்தம் வலைப்பதிவுகளில் வெளியிட்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும்,மலேசியா இன்று இணயத்தளத்திற்கும் எமது தாழ்மையான நன்றிகள். அதேவேளையில்,இந்த தள்ளிவைப்பு அறிக்கையையும் தயைக்கூர்ந்து தாங்கள் வெளியிடுவீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.

எதிர்பாராவிதமாக நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதற்கு பெரிதும் வருந்துகிறோம்.துரோகங்களின் விளைவுதான் இந்த தள்ளி வைப்பு என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

அன்புடன்,

சத்தீஸ் முணியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி,
ஜாலான் பாரு,பிறை கிளை.

14.10.08

மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்!!!

அன்புடைய மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களே,

எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம்,இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றை ஜசெக,ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வை பற்றிய அறிவிப்பு செய்தியை தங்களது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தமிழர்களின் கண்ணிரை துடைக்க ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை செய்வோமாக.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்!! நிகழ்வின் விவரம் பின்வருமாறு :-

இடம் : பிறை,ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
தேதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

அன்புடன்,

சத்திஸ் முனியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி
ஜாலான் பாரு கிளை,பிறை.




Stop Genocide of Tamils in Sri Lanka

DAP,Jalan Baru Branch has organized a protest meeting to condemn the Sri Lankan Goverment genocide of Eelam Tamils.Unlike the Tamilnadu leaders who were tight-lipped for all this while though they're just 18km away from Eelam,let us gather and show our concern to our Tamil brothers & Sisters there.DAP MP's and leaders will give speeches condemning the killing of innocent people.The event will take place as follow :-

Place : Infront of Jalan Baru,Muniswaran Temple,Perai
Date : 17-10-2008 ( Friday )
Time : 8.00 pm onwards

Dear Tamilians,Let us together condemn the Brutality against our beloved Eelam Tamils.
for further inquiries, call Satees at 016-4384767

24.9.08

மே 13......ஒரு அறிமுகம்--2

ஒரு சமுகவியல் ஆராய்ச்சியாளர் என்ற முறையில்,இந்நூலின் ஆசிரியர் மே 13 இனக்கலவரத்தை அரசியல்,பொருளாதார ரீதியில் நோக்குகிறார். அவருடைய ஆய்வின் படி,மே 13 கலவரம், திடிரென்று ஏற்பட்ட இன கொந்தளிப்பல்ல; இக்கலவரம் திட்ட்மிட்டு அரங்கேற்றப்பட்ட கொடுரம் என்பதை சில ஆவணங்களின் மூலம் உறுதி படுத்த முடிந்துள்ளது. பல்லின சமுதாயம் ஒன்று கூடி வாழும்போது இனங்களுக்கிடையான உறவு எப்பொழுதும் பதற்றமாகவே இருக்கும் என்பது தவறான கண்ணோட்டமாகும். இனங்களுக்கிடையான பதற்றங்களை ஆய்வு செய்கையில்,குறிப்பிட்ட அரசாங்கத்தின் ஈடுபாட்டையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல நாடுகளின் சரித்திரம் இதற்கு தக்க சான்றாக அமையக்கூடும்.ஆசிரியரின் ஆய்வு படி,மே 13 இனக்கலவரமானது, ஒரு திட்டமிடப்பட்ட "அதிகார பறிப்பு"க்கான முன்னோட்டம் என்று கூறுகிறார்.இவ்வதிகார பறிப்பானது,பழமைவாதம் மிகுந்த மலாய் பிரிவினடமிருந்து, நாட்டின் வளங்களை பொருளாதார இலாபத்திற்காக பங்கிட்டுக் கொள்ளும் (CAPITALIST) பிரிவினர் நடத்தியதாகும்.பழைய கலாச்சாரம் மிகுந்த மலாய்க்காரர்களின் பிரதிநிதியான துங்குவிடமிருந்து அதிகாரத்தை புதிதாக தலையெடுத்த பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர் திட்ட்மிட்டு பறித்தனர்.இவ்வதிகார பறிப்பின் தாக்கம்தான்,மலேசியாவின் அரசியலிலும் பொருளாதாரத்துறையிலும் இன்று வரை நீடிக்கிறது.இவ்வதிகார பறிப்பின் விளைவுதான்,புதிய பொருளாதார கொள்கை (NEP);இவ்வதிகார பறிப்பின் மூலம்,பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களின் பொருளதாரத்தை வளப்படுத்திக் கொண்டதோடு,அரசியலிலும் தங்களின் பிடியை இறுக்கினர்.



இவ்வதிகாரப் பறிப்பை பற்றி துங்குவும் கூறியுள்ளார் :-

“ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.”

சுப்கி லத்தீப்,இக்காலகட்டத்தில் நிருபராக இருந்தவர்;அவர் 1977இல் அவர் கீழ்வருமாறு கூறியுள்ளார் :

-மே 13 இனக்கலவரம் திடிரென்று ஏற்பட்ட இனக்கொந்தளிப்பல்ல! இச்சம்பவமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.இத்திட்டத்தை தீட்டியவர்கள் யாரென்பதை தெளிவாக கூற முடியவில்லை.ஆனாலும்,ஒட்டு மொத்த கண்ணோட்டத்தையும் வைத்து பார்த்தால்,மே 13 கலவரமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று.மே 13 கலவரத்திற்குப் பின்,துங்குவின் அதிகாரமானது அதற்கு பின் மழுங்கி விட்டதெனவே கூற வேண்டும்.அதற்கு பிறகும் துங்கு,பிரதமராகவும்,அம்னோ தலைவராகவும் இருந்த பொழுதும், அவர் அதிகார சின்னமாக மட்டுமே இருந்தார், அதிகாரம் அவரிடத்தில் இல்லை!” சுப்கி லத்தீபின் கருத்தானது 1977இல் வெளியிடப்பட்டது.அவரது கருத்துக்கு ஆதரமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ள ஆவணங்களே இருந்துள்ளன.

இந்நூலின் முதல் பகுதி,மலேசியாவில் இன அரசியலுக்கு வித்திட்ட “கப்பல் கூட்டணி”யின் உதயத்தைப்பற்றி ஆராய்கிறது.கப்பல் கூட்டணியானது,சுதந்திரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது.காலனித்துவ ஆட்சியாளர்களான பிரிட்டிசாரின் ஆசியைப் பெற்றது.சுதந்திரத்திற்குப் பின்பு,இக்கூட்டணியின் கொள்கைகளின் விளைவே இன ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது.இந்த இன ரீதியான கண்ணோட்டம்தான் அறுபதுகளின் அரசியல்,சமூகவியல்,பொருளாதார வித்தியாசங்களுக்கு அடிப்படை என்பது திண்ணமாகும்.




முதல் பாகத்தில் பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினரின் திடீர் தோற்றமும்,1969இல் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றிய விதத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.மே 13 கலவரமானது,மலேசியாவின் அரைச்யல்,ஒரு மிகையான அரசியல் நிலையிலிருந்து,மலாய்க்காரர்களை முன்னிலைப்படுத்திய அரசியலுக்கு மாற வித்திட்டது.இதன் வழி பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களுடைய நோக்கத்தை சாதித்துக்கொள்ள தொடங்கினர்.அரசாங்க நிறுவனங்கள்,மலாய் உழவர்களுக்கு கடன்,ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை ,அவர்களின் நோக்கத்தை சாதித்துக் கொள்வதற்கான சாதனமாக அமைந்தன.புறநகர் மேம்பாட்டை முன்னிலைப்படுத்தும் நிறுவனங்களும்,வங்கிகளின் மூலமும் இவர்கள் பெரும் இலாபம் அடைந்தனர்.துங்கு அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களுடைய பொருளாதார நோக்கம் ஈடேறாது என்பதால்தான்,திட்டமிட்டு துங்குவிடமிருந்து அதிகார பறிப்பு நிகழ்த்தப்பட்டது.

1960ஆம் ஆண்டுகளில்,காலனித்துவ ஆட்சிக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட சில அரசாங்க கொள்கைகள்,நடவடிக்கைகள் மக்கள் மத்தியில்,குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர்,விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி கல்வி,உபகார சம்பளம்,தொழில் உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்) போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் ஒரு தலைபட்சமான நிலைப்பாடுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் அதிருப்தியடைந்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நிலவிய அரசாங்கத்திற்கெதிரான அதிருப்தியானது,1969 பொதுத்தேர்தலில் ந்திரொளித்தது.அதுவரை ஆட்சியை இறுகப்பிடித்திருந்த அம்னோவின் அதிகாரத்திற்கும் 1969 பொதுத்தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர், இவ்வேளையில் “மலாய் அதிகாரத்துவம்” என்ர கொள்கையை அறிமுகப்படுத்தி அம்னோவின் ஆளுமையை நிலைநிறுத்தியதோடு, அம்னோவிற்குள்ளும் துங்குவின் அதிகாரத்தை கைப்பற்றினர்.

இரண்டாம் பகுதியில் 1969 பொதுத்தேர்தலை ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். 1969 பொதுத்தேர்தலில்,எதிர்கட்சிகள் ஒரு ஒப்பந்த நிலையிலான கூட்டணியை அமைத்து “கப்பல் கூட்டணியை” எதிர்த்தன.பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே,கப்பல் கூட்டணி சுதந்திரத்திற்கு பின்பு முதன்முறையாக பலத்த சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அதோடு மட்டுமல்லாமல்,ஒரு சில மாநிலங்களையும் எதிர்கட்சிகல் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்த வேளையில்,எதிர்கட்சிகளின் வெற்றி பேரணிகளே ஒரு பயங்கரமான இனக்கலவரத்திற்கு அடிப்படை காரணம் என் கூறப்படுவதை,அர்சியல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

-தொடரும்-


அடுத்த பாகத்தில் :-

இரகசியமாக்கப்பட்ட ஆவணங்கள்

- 1969 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நமக்கு கிடைத்த தகவல்கள்களில் பெரும்பாலனவை, அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும், தணிக்கைகளுக்கும் மத்தியில் பல உண்மைகள் மறைக்கப்பட்ட தகவல்கள் என்பது தெரிய வருகிறது.

- 1969 இன் இனக்கலவரத்தின் போது மலேசிய அரசாங்கத்தின் “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்ற கண்துடைப்பு நாடகத்துக்கு பிரிட்டிஷ் போன்ற மேற்கு நாடுகளும் துணை போயுள்ளன.

15.9.08

மே 13......ஒரு அறிமுகம்

“இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!”

“மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!”


மே 13,நமது சுதந்திர மலேசியாவின் கரை படிந்த அத்தியாயம்.இந்த மே 13 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நாம் படித்து வந்த சரித்திர கோப்புகள் எல்லாம் பொய் என்பதை சுவாராம் இயக்குனர்,குவா கியா சுங் அவர்களின் "மே 13,1969 மலேசிய கலவரத்தைப் பற்றிய இரகசிய ஆவணங்கள்" ( May 13, Declassified documents on Malaysian Riots 1969" என்ற புத்தகத்தை படித்த பிறகு அறிய முடிகிறது.இந்த மே 13 புத்தகம்,மலாய் மொழியிலும், ம்ஆங்கில மொழியிலும் மட்டுமே உள்ளது. உண்மைகளைக் கூறும் இந்நூல் தமிழில் வெளிவர வேண்டும் என்பதுதான் என் அவா.அதற்கான முதல் முயற்சியாக இந்நூலின் அறிமுக பாகத்தை தமிழில் மொழி பெயர்த்து இவ்வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.மே 13 பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்......


அறிமுகம்
அதிகாரப்பூர்வ சரித்திர படிவங்கள் உண்மையா?
கடந்த 2006 ஆம் ஆண்டு மத்தியில்,சில மலேசியர்கள் எழுப்பிய அதிருப்தி குரலை நாம் கேட்க முடிந்தது.இந்த அதிருப்தி குரல்களுக்கு காரணம், மலேசிய ஆரம்ப பள்ளி பாடபுத்தகங்களில்,1969 இனக்கலவரத்தைப் பற்றியும், மலேசியர்களின் இனங்களுக்கிடையான உறவைப் பற்றியும் கூறப்பட்டிருந்த தகவல்கள்தான்.1969 பொதுத்தேர்தலில்,நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியின் பெரும்பான்மையை குறைத்ததனாலும்,சில மாநிலங்களின் ஆட்சியை கைப்பற்றியதாலும்தான் மே 13 இனக்கலவரம் நிகழ்ந்தது என்று ஒட்டுமொத்த பழியையும் எதிர்கட்சிகளின் மீது சுமத்தப்பட்டதை பெரும்பாலான மலேசியர்கள் நம்பவில்லையென்பதையே இந்த அதிருப்தி குரல்கள் நமக்கு உணர்த்தியது.
இந்த அதிகாரப்பூர்வ சரித்திரத்தின் படி,இது போன்ற கலவரங்கள் ஆளுங்கட்சியின் பெரும்பான்மை சரியுமானால் மீண்டும் சாத்தியம் என்பது போலவும் பாட புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது.1969 முதற்கொண்டு ஆளும் தரப்பு இதைக்கூறித்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. மலேசிய சுதந்திரம் அடைந்த பொழுது வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 153வது பாகத்தின் படி,மலாய்க்காரர்களுக்கு நிலம்,அரசாங்க வேலை வாய்ப்புகள், ஒரு சில வணிகங்களுக்கான உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்), உபகாரச்சம்பளம்,கடனுதவி மற்றும் சில கல்வி உதவிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால்,1969க்குப் பின் உருவாக்கப்பட்ட தேசிய ஆளுமை மன்றம் (National Operational Council) மலாய் அதிகாரத்துவம்(Ketuanan Melayu) என்ற கொள்கையை வடிவமைத்தது.இதன் மூலம்,மற்ற இனங்களுக்கு அநீதியான அரசாங்க கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.மலேசிய அரசியலமைப்புக்கு முற்றும் புறம்பான இந்த மலாய அதிகாரத்துவ கொள்கையானது இனவாத கொள்கையாக மட்டுமின்றி, ஒரு அநியாயமான கொள்கையுமாகும்.
ஆகவே, மலேசிய சரித்திரத்தை திருத்தி எழுதுமாறு ஒர் சில தரப்பினர் எழுப்பும் கோரிக்கையின் நியாயம்,சுதந்திரமான அறிவுமயத்தின் கட்டாயமாகும். மலேசியாவின் சரித்திரத்தைப் பற்றி பேசுகையில்,பல பகுதிகளைப் பற்றி சந்தேகங்களும், எதிர் விவாதங்களும் நிலவுகின்றன. அவற்றில் குறிப்பாக, இரண்டாம் உலகப்போர், சுதந்திரப்போரட்டம், அவசரக்காலம், முக்கியமாக 1969 மே 13 இனக்கலவரம் ஆகியவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ சரித்திர பதிவுகள் பெரும் விவாதத்திற்குள்ளாகின்றன.
மே 13 நூலின் எழுத்தாளர், தனது முனைவர் நிலை பட்டப்படிப்புக்காக அவசரக்காலத்தைப் பற்றி ஆய்வொன்றை மேற்கொண்டார்.1983இல்,அவரின் ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.இம்முறை, மே 13 1969 இனக்கலவரத்தை நூலாசிரியர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.மே 13 சம்பவத்தைப் பற்றி இதுவரை நமக்கு கூறப்பட்டு வந்த அனைத்துமே இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என்றே கூற வேண்டும்.மலேசியாவின் சரித்திரத்தில் மிக மோசமான இச்சமபவத்தைப் பற்றிய உண்மை தகவல்கள் இதுவரையில் மலேசியர்களுக்கு சொல்லப்படவில்லை. ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இதுவரை மே 13 சம்பவம் விவரிக்கப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் இந்த அதிகாரப்பூர்வ சரித்திரத்தை சாமன்ய மக்கள் மறுக்கும் நிலை இப்பொழுது தோன்றியுள்ளது.
மே 13 இனக்கலவரம் நடந்து முடிந்த பிறகு, அச்சம்பவத்தைப் பற்றி விவாதிப்பதற்குக் கூட மக்களிடையே ஒரு வித அச்சம் நிலவியது. இவ்வாறான அச்சத்தை முன்னிறுத்தியே மக்களை தமது பிடிக்குள் வைத்திருப்பதையே ஆளும் தரப்பு விரும்பியது.ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும்,ஆளும் கூட்டணியின் பெரும்பான்மை குறையக்கூடும் என்ற நிலை ஏறபடும் பொழுதும் “மே 13” என்ற பேய்க்கதை கட்டவிழ்த்து விடப்படும்.ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழக்குமானால், மீண்டும் ஒரு இன்க்கலவரம் வெடிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்படுத்தப்படும். இந்த அச்ச உணர்வை முன்வைத்துதான்,எதிர்கட்சிகள் பலமான கூட்டணியை அமைத்திருந்த 1990 பொதுத்தேர்தலிலும்,1999இல் மலாய்க்காரர் அல்லாதோரின் பொது உரிமையைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போதும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அரசு தனது வெற்றியை நிலை நிறுத்தியது.

மிக அண்மையில்,2006ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையும் இதற்கு விதிவிலக்கல்ல.மீண்டும் இன்வாதம் முன்னிறுத்தப்பட்ட காட்சிகள் இந்த அம்னோ பொதுப் பேரவையில் இடம்பெற்றன. அம்னோ இளைஞரணி தலைவர்,கிரிஸ் கத்தியை மேலே உயர்த்திக்காட்டி, அக்கத்திக்கு முத்தமிட்டார்.இச்செயலானது சமுக பொது உரிமைகளை பற்றிய கேள்விகளை எழுப்புபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என கூறப்பட்டது.அம்னோவின் ஆளுமையைப் பற்றி கேள்வி எழுப்பினால், மீண்டும் மே 13 நடக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படது.அதற்கு பிறகு பேசிய ஒவ்வொரு அம்னோ பேராளரும் இனவாதத்தை முன்னிறுத்தியும், மலாய்க்காரார் அல்லாதோருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும் பேசினர்.அவர்களின் உரைகளின் சாரம்சம் கீழ்வருமாறு :-

மலாக்கா பேராளர்,ஹஸ்னோர் சிடாங் உசேன் பேசுகையில்,
“இன உரிமையையும்,மதத்தையும் காக்க,அம்னோ உயிர்களை அடமானம் வைக்கவும்,இரத்ததில் குளிக்கவும் ஒரு போதும் தயங்காது!” என்றார்.

பெர்லிஸ் பேராளர் ஹஷிம் சூபோ பேசுகையில், “இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!” என்றார்.

தெரங்கானு அம்னோ இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர்,ரசாக் இட்ரீஸ் பேசுகையில், “மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!” என்றார். (ஆதாரம் : மலேசியாக்கினி,22.11.2006)

- தொடரும் –

அடுத்த பாகத்தில் :

இன அரசியலும்,வர்க்கப் பிரிவினையும்

- இனக்கலவரத்தை தூண்டியது யார்?

- NEP இன் அறிமுகம்

- “ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.” - துங்கு

12.9.08

மீண்டும் ஓப்பராசி லாலாங் II??

மீண்டும் ஒரு ஓப்பராசி லாலாங் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.....24 மணி நேரத்துக்குள் 3 இசா கைதுகள்....

ராஜா பெட்ரா

பிரபல வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா,சின் சியு டேய்லி நிருபர்,செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரும்,கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும்,சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான தெரெசா கோக் ஆகியோர் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்


செபூத்தே எம்.பி தெரேசா கோக்

ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.


சின் சியூ நிருபர் தான் ஹூன் சேங்
ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.

அன்வார் தலைமையிலான மக்கள் கூட்டணி எவ்வேளையிலும் ஆட்சியை கைப்பற்றலாம் என்பதால்,மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி ஆட்சியில் நீடிக்க துடிக்கிறது,முட்டாள் தேசிய முன்னணி தலைமைத்துவம்.

21 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு,இப்பொழுது இருக்கும் நிலை வேறு என்பதை மறந்து இவர்கள் செயல்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடும் தேசிய முன்னணி,இனவாதத்தை ஆதரிக்கின்றது,இன மோதல்களை உருவாக்க அடி போடுகிறது என்ற கூற்று நிருபணமாகியுள்ளது.

அம்னோவின் தலை முதல் கால் வரை இனவாத விஷம் உள்ளது.
அந்த விஷத்தை பல வேலைகளில் அம்னோவின் தலைவர்கள் கக்கி வந்துள்ளதை நாம் அறிவோம்.இந்த விஷ கக்கல்களுக்கெல்லாம் ஆரம்பமாக அமைந்தது 1969 மே 13 இனக்கலவரம்.

சுவாராம் இயக்குனர் இருவர் எழுதியுள்ள மே 13 என்ற புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ள பல உணமைகள் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மே 13 இனக்கலவரத்துக்கு முழுக்காரணம் ராசாக் மற்றும் மாகதீர் போன்ற ராசாக் ஆதரவாளர்கள் என்பதை இப்புத்த்கம் விவரிக்கின்றது.
துங்குவை பதவியில் இருந்து விலக்குவதற்காக ராசாக & மகாதீர் கூட்டணி நடத்தியதுதான் மே 13 இரத்தக் கலவரம்.
துங்குவிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு அப்பாவி மக்களைக் கொன்றது அம்னோவின் இரண்டாம் தலைமுறை தலைமைத்துவம்.

அதன் பிறகு,கலவரத்தை காட்டியே மக்களை ஏமாற்றி வந்தது அம்னோ.

1987, அம்னோவிற்குள் மீண்டும் பதவி போராட்டம்......
துங்கு ராசாலி மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்.
மகாதீர், சீனர்களுக்கும்,மலாய்க்காரர்களுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி அப்பொழுது கடவிழ்த்து விட்டதுதான் ஒப்பராசி லாலாங்.

இப்பொழுது 2008 இல், அம்னோ தலைமைத்துவத்தை மட்டுமல்ல, நாட்டின் தலையெழுத்தே மாற்றப்படப்போவதை தடுப்பதற்காக அம்னோ ஏற்படுத்தப் பார்க்கும் பதற்றம்,இந்த இசா கைதுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சீனர்கள் இந்த நாட்டில் வெறும் குடியேறிகள் என்று சொல்லிவிட்டு அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காத அம்னோவின் டத்தோ அகமாட்டுக்கு வெறும் 3 ஆண்டுகள் அம்னோவிலிருந்து இடைநீக்கம்.

அந்த இனவெறியனின் இனவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பத்திரிக்கை நிருபருக்கு இசா சட்டம்.

என்ன நியாயம் இது??

சகோதர இனத்தை கீழ் தரமாக விமர்சிக்கும் ஒருவனுக்கு எந்த தண்டனையும் இல்லை.

அவனின் இனவாத முகத்திரையைக் கிழித்த நிருபருக்கு இசா சட்டம்.

உண்மைகளை அம்பலபடுத்தும் வலைப்பதிவாளருக்கு இசா சட்டம்.

அம்னோவின் அடக்குமுறைகளை எதிர்க்கும் எதிர்கட்சி தலைவர் ஒருவருக்கு இசா சட்டம்.

எங்கள் இனத்தின் உரிமையைக் கேட்டதற்காக எங்கள் உரிமைப் போராளிகளுக்கு இசா கைது.

இதுதான் அம்னோவின் தத்துவம்.

உண்மையை கூறுபவர்கள்,எழுதுபவர்கள்,அம்னோவின் அராஜாகத்தை எதிர்ப்பவர்கள்தான் தேசத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், அவர்களுக்கு கிடைப்பது விசாரணை இல்லா தடுப்புக்காவல்!!

இனவாதத்தை உதிர்ப்பவன்,கிரிஸ் கத்திக்கு முத்தமிடுபவன்,சகோதர இனத்தை அவமதிப்பவன்,இவர்களுக்கெல்லாம் பதவியும் பட்டமும்!!
அம்னோவின் அராஜகம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது....
இசா கைதுகள் மேலும் தொடரலாம்.....
மக்களின் உரிமைக்குரலவளையை நெறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அம்னோ மூடர்கள்.
அராஜகத்துக்கு அஞ்சாமல்,உரிமைக்காக இந்நாட்டின் மக்கள் வெகுண்டெழுந்து அம்னோவின் இனவாதத்தை விரட்டியடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
மக்கள் குரல் நிச்சயம் வெல்லும்!!!!

9.9.08

எப்பிங்காம் தமிழ்பள்ளி நிலம் விழுங்கப்பட்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது.....

எப்பிங்காம் தமிழ்பள்ளிக்கு தனியார் நிறுவனம் வழங்கிய நிலம்,சாமிவேலு பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதைக் காட்டும் பத்திரம்.
இதுவொரு புதிய செய்தி;ஆனாலும் அதிர்ர்ச்சியான செய்தியில்லை.....
கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்;ஆனாலும் சாமிவேலுவா கொக்கா,கழுவுற நீருல,நழுவுற மாதிரி தப்பிச்சிடுவான் மனுசன்.
தமிழ்பள்ளிகளுக்கெல்லாம் தாம்தான் காவலன் என்பதைப் போல் காட்டிக்கொள்ளும் தானைத்தலைவன் செய்திருக்கும் வேலையைப் பார்த்தீர்களா??
இன்னும் கொஞ்சம் ஏமாந்தால்,இந்த சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சுருட்டி விற்றுவிடுவார்கள் மஇகாகாரர்கள்.
அங்கு கடித்து,இங்கு கடித்து,தமிழ்பள்ளிகளைக் கடித்துள்ளார் சாமி.
இப்பொழுது புதிதாக எழுந்திருக்கும் கேள்வி.....
கூலிமில் உள்ள ஒரு தமிழ்பள்ளிக்கு கத்ரி இதற்கு முன்பு ஒதுக்கிய நிலம் என்ன ஆனது என்பதுதான்.
இந்த நிலம் சாமிவேலுவின் பெயரிலோ,டத்தோ சரவணன்(முன்னாள் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்) பெயரிலோ இரூந்தலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு,பினாங்கு மாநிலத்தில்,பத்துகவான் தமிழ்பள்ளிக்கு பினாங்கு மேம்பாட்டு நிறுவனம்(PDC) வழங்கிய 3 இலட்சம் வெள்ளி நன்கொடை, தேர்தல் முடிந்து பல மதங்களுக்கு பிறகே பள்ளியின் கட்டட மேம்பாட்டுக் குழுவிடம் வழங்கப்பட்டது.வழங்கியவர் முன்னாள் அட்சிக்குழு உறுப்பினர்.ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும்போது வழங்கப்பட்ட பணம், தேர்தலில் தோற்ற பிறகு வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை. இம்மூன்று இலட்சம் வெள்ளியானது தேர்தலின் போது குறிப்பிட்ட தலைவரின் தேர்தல் செலவுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேப்போல்தான் அசாட் தமிழ்பள்ளி விவகாரமும்.நிலமே ஒதுக்காமல் நிலத்தை ஒதுக்கி விட்டோம்,மான்யத்திற்கு காத்திருக்கிறோம் என்றெல்லாம் வசனம் பேசினார்கள். பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசமி அவர்கள் ம இகா தலைவர்கள் கூறுவது போல அசாட் தமிழ்பள்ளிக்கு எந்த நிலமும் முன்னாள் தேசிய முன்னணி அரசால் ஒதுக்கப்படவில்லையென்ற உண்மையை வெளிபடுத்தினார்,அதோடு மட்டுமல்லாமல் மஇகா-காரர்களின் தமிழ்பள்ளி நாடகத்தை அம்பளப்படுத்தினார்.அதோடு மட்டுமில்லாமல் சாமிவேலுவை தமிழ்பள்ளி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற ஒரு அழ்ந்த அறிக்கையையும் வெளியிட்டார்.
சாமிவேலுவும் அவரின் சகாக்களும் தமிழ்பள்ளியை வைத்து நடத்தும் நாடகங்களை ஒவ்வொன்றாக நமது மக்கள் கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவர்.
தொடர்ந்து காத்திருப்போம்,
இந்த திருடர்களின் திருட்டுக்களை மேலும் அறிய!!!

14.8.08

தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?!

தமிழர் சரித்திரம்,வழி நெடுகிலும் பற்பல சிறந்த வீரதீரங்களையும், சாதனைகளையும் கண்டது.தமிழரின் சரித்திரம் தலைச்சிறந்த சரித்திர நாயகர்களை தன்னகத்தேக் கொண்டது.அவர்களுள்,மாமல்லன் என அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன்,இராஜராஜன் எனப்பட்ட அருள்மொழிவர்மன்,அவரின் புதல்வன் இராஜேந்திர சோழன்,ஆகியோர் தமிழக வராலாற்றில் மட்டுமின்றி தமிழரின் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்கள். அதிலும் இராஜேந்திர சோழன் கடாரம்,கம்பூச்சியம்,சாவகம் என் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் புலிக்கொடியை பறக்கவிட்டு,தமிழர் புகழ் உலக வரலாற்றிலும் நிலைத்து நிற்க செய்தவர்.இதையெல்லாம் அறியும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தலைத்தூக்கும்ம்.அதே வேளையில், இராஜராஜ சோழனை பற்றியோ,இராஜேந்திர சோழனை பற்றியோ, மாமல்லனைப் பற்றியோ பேசும்பொழுது,யார் அவர்கள் என்று ஒரு தமிழன் கேட்டால்,என்னவென்று சொல்வது??

ஆனால்,அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.

இன்றுள்ள நாம்,கல்கியின் பார்த்திபன் கனவையோ,பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம்.ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ,பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால்,கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர,பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள்.இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்??
ஒவ்வொரு தமிழனுக்கும்,தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

எனது பாட்டன்,பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான்.மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து,தமிழினத்தின் பூர்வீகம்,அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான்.சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.


இந்தோனேசியா,ஜாவாவில் அமைந்துள்ள பிரம்பனன் ஆலய தொகுதி

500-600 வருட சரித்திர பின்னணியைக் கொண்ட மலாய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் நமது மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு மேல்நிலைப் பள்ளி வரையில் பயில்கின்றனர். மாற்றாரின் குறுகிய சரித்திரத்தை பயிலும் நம் தமிழன்,நமது நெடுநீண்ட சரித்திரத்தை பயிலாமல் மறக்க விட்டது,கல்வியமைச்சில் தமிழ் பாடப்பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் நமது இன அதிகாரிகளின் தவறா??
தமிழன் சரித்திரம் படித்தால் தலை நிமிர்ந்து விடுவான், தலை நிமிர்ந்தால் நமது பதவிக்கு ஆப்பு வந்துவிடும் என்று கண்டும் காணாமல் விட்ட சமுதாயத்தின் அரசியல் தலைவர்களின் தவறா??
தமிழ் சரித்திரம் கொண்டே தமிழரை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்று உணராமல் விட்டுவிட்ட தமிழ் வழி இயக்கங்களின் தவறா??
யார் தவறு??

நாளை தலையெடுக்கப்போகும் நம் தமிழன்,சரித்திரம் தெரிந்த, தனித்தன்மையுடைய தமிழனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா.
அவ்வாறு ஒரு சரித்திரம் தெரிந்த தமிழினத்தை எப்படி உருவாக்குவது??என்பதுதான் தற்போது நம்மிடம் நிலவும் கேள்வி,இந்த கேள்விக்கு ஒரே பதில்;தமிழ் பள்ளிகளின் மூலம் என்பதுதான்.

தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் வரலாறும் ஒரு பாடமாக கற்றுகொடுக்கப் பட வேண்டும்.இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் தமிழரின் வரலாறு புரியும் வண்ணம் தமிழ் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும்.உதாரணத்திற்கு,அறிஞர் மு.வ-வின் பாவை விளக்கு நவீனம் தற்பொழுது எஸ்.டி.பி.எம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. அறிஞர் மு.வ-வின் சமுதாய கருத்துகள் மாணவர்களுக்கு தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.ஆனால், அதே வேளையில் இன அடையாளம் அழியாமல் இருக்க வேண்டுமெனில், சரித்திரமும் முக்கியமல்லவா? ஆகவே,கல்கியின் பொன்னியின் செல்வனையோ, பார்த்திபன் கனவையோ,சிவகாமி சபதத்தையோ அல்லது மற்ற தமிழ் சரித்திர அற்ஞர்களின் நவீனத்தையோ புதிதாக பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

இடைநிலை,மேல்நிலை கல்வியை விட அடிப்படைக்கல்வியான ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் சரித்திரம் சேர்க்கப்பட்டால்தான்,மிக சிறப்பாக அமையும்.

"தமிழ்ப்பள்ளியில் தமிழர் சரித்திரம்"
சாத்தியமா??
எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது??
யார் பொறுப்பேற்பது??

அடுத்த பதிவில் அலசலாம்.

- தொடரும் -


*பின்குறிப்பு :
நண்பர்களே,தமிழ் பள்ளியில் தமிழர் சரித்திரம் போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

9.8.08

ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் மலேசிய தமிழர்கள் - முழுமையாக

இக்கட்டுரையானது,பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி அவர்களால் சில வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தமிழாக்கம் மட்டுமே எமது.

நன்றி : தமிழ்கனேடியன்.காம்
thanks :
http://www.tamilcanadian.com/

தமிழீழம்
தமிழ் தேசியம்;இதுதான் நீண்டதொரு போராட்டத்தை மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழீழ போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது.புலிகளின் தலைவர் பிரபாகரன் பலமுறை கூறியுள்ளார்,"ஈழம் உருவாகும் நாளதான்,உலக தமிழினத்தின் வெற்றி நாள்" என்று.புலிகளின் இந்த கருத்தானது உலக அரங்கில் தமிழீழ போராட்டத்துக்கு பலமானதொரு அடித்தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.இந்த கருத்தின் மூலம்தான் உலகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் மத்தியில் தமிழீழத்திற்கான ஆதரவு பெருகியுள்ளது.சிங்கள இனவாதத்தை எதிர்த்து போராடும் புலிகளுக்கு,வெறும் மானசீக ஆதரவு என்பதைவிட, பொருளாதார, அறிவுசார் ஆதரவும் இந்த கூற்றின் மூலமே பெருகியுள்ளது என்பது உண்மையாகும். மலேசிய தமிழர்கள் என்று பார்த்தோமானால், தமிழீழம் உருவாவதை இவர்கள் பெரிதும் ஆதரிக்கிறார்கள்.

மலேசிய தமிழர்கள்,பிரிட்டிசாரால் சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டவர்கள்.மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் தமிழர்கள்,அதாவது 17 இலட்சம் பேர்.இவர்களில் மிக சிறுபானமையாக உள்ளோர்,இலங்கையிலிருந்து (சீலோன்) பிரிட்டிசாரால் அலுவலக வேலைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள், இவர்களை சீலோனிஸ் என்றும் யாழ்ப்பாண தமிழர்கள் என்றும் அழைக்கிறார்கள்.இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும்-இலங்கை வம்சாவளியினருக்கும் பொதுவில் ஒரு வேறுபாடு நிலவி வந்தது.பொருளாதார, சமூக பின்னணியில் இந்த வேறுபாடு அமைந்திருந்தது.பெரும்பாலான இலங்கையர்கள், தோட்டப்பாட்டாளிகளான தமிழர்களிடம் பழகுவதில் இருந்து விலகியிருந்தனர்.பாட்டாளி தமிழர்களோ, இலங்கைத்தமிழர்கள் காலனித்துவ பிரிட்டிஷ் முதலாளிகளிடம் வைத்திருந்த விசுவாசத்தை சுட்டிக்காட்டி அவர்களிடம் நெருங்கவதில் இருந்து தவிர்த்து வந்தனர்.

ஈழப்போரால்,தற்பொழுது பெரும்பாலான இலங்கையர்கள்(சீலோனிஸ்) தங்களை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். நெடுங்காலமாக மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும், இலங்கை வம்சாவளி தமிழர்களுக்கும் இடையில் நிலவிவந்த வேறுபாட்டை ஈழப்போர் கலைந்துள்ளது என்றே கூற வேண்டும்.இந்த வேறுபாடானது தற்பொழுதும் நிலவுகின்ற போதிலும்,இன அடையாளத்தின் பேரில் இந்த இரு வேறு வம்சாவளி பின்னணியைக் கொண்ட தமிழர்கள் ஒன்றாகியுள்ளனர்.

ஆரம்பக்காலங்களில்,இலங்கை வம்சாவளி தமிழர்கள் ஈழப்போராட்டத்துக்கு தனியாளாகவோ,குழுக்களாகவோ பொருளாதார ஆதரவை வழங்கி வந்தனர். இந்திய வம்சாவளி தமிழர்களின் ஈழ போரட்டத்துக்கான ஆதரவு, மலேசியாவில் தமிழீழ போராட்டத்துக்கான ஆதரவில் புதியதோர் பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ போரட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது வெளிப்படையாகவே உள்ளது.உலக தமிழர் புனர்வாழ்வு நிதியமைப்பு போன்ற அமைப்புகளின் உதயமானது, ஈழப்போராட்டத்துக்கு மலேசிய தமிழர்களிடம் உள்ள ஆதரவை வெளிப்படுத்துகிறது.

ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது பல வடிவங்களில் மலேசிய தமிழர்களின் மத்தியில் பிரபலமாகியுள்ளது. கருத்தரங்குகள்,நிதி சேகரிப்பு நிகழ்வுகள்,பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமாகியுள்ளது. மலேசியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பெருநாள்,தைப்பூசத்திருநாள் ஆகும்.ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருநாள் கொண்டாடப்படும்பொழுதும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடும் கோலாலம்பூரில் உள்ள பிரபல ஆலயத்தில் ஈழ அகதிகளுக்காக நிதி சேகரிப்புகள்,கையேடு வழங்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு ஆலய நிர்வாகம் தனியாக ஓர் இடத்தை ஒதுக்கித்தரும்.ஈழப்போரைப்பற்றிய குறுந்தகடுகளும் இவ்வேளையில் விற்கபடும்.

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம்,ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய இடமொன்றை பிடித்துள்ளது.இனவாத இலங்கை அரசின் பொய்யுரைகளை மலேசிய தமிழர்கள் பெரிதுப்படுத்துவதில்லை. அண்மையக்காலமாக ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு பெருகியுள்ளதே தவிர,குறையவில்லை.

மலேசிய தமிழர்கள் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதற்கு மிக முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஈழத்தமிழர்களைப் போலவே மலேசிய தமிழர்களும் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தால் பிழிந்தெடுக்கப் பட்டவர்களே.இவர்களுக்கு,தங்களது ஈழ சகோதரர்கள் படும் இன்னல்கள் புரிகின்றது. தங்களைப்போலவே அநீதி இழைக்கப்பட்டவர்களாக பாட்டாளி மலேசிய தமிழர்கள்,ஈழத்தமிழர்களைப் பார்க்கிறார்கள். இதனால்தான்,நடுத்தர வர்க்கத்தைவிட இவர்கள் தமிழீழ போரட்டத்தை அதிகமாக ஆதரிக்கிறார்கள். மலேசிய தமிழ் இளையோர் மத்தியில்,புலிகளின் தலைமையின் மீது ஓர் அசைக்க முடியாத பற்று உள்ளது.அதிலும்,புலிகளின் தலைவர்,பிரபாகரன் அவர்களை ஓர் நாயகனாக பார்க்கிறார்கள். பிரபாகரனின் படத்தை பெரும்பாலான தமிழர்களின் வீட்டில் சர்வ சாதரணமாக பார்க்கமுடிகிறது.கடந்த காலங்களில்,ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழ ஆதரவு போரட்டங்களின் போது,பிரபாகரனின் படத்தை இளையோர்கள் ஏந்தியிருந்தது, மலேசிய காவல் துறைக்கு கோபத்தை உண்டுப்பண்ணியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது காரணம்,மலேசிய தமிழர்கள் மத்தியில் நிலவும் அரசியல்,பொருளாதார,சமூக பின்னடவுகள்.இந்நாட்டை வளமாக்க உழைத்து உருகுலைந்து போன தமிழினத்தை மலேசிய அரசாங்கம் ஒரு பொருட்டாக கருதாது.மற்ற இனங்களைப்போல்,தமிழினம் எந்தவொரு துறையிலும் தலைத்தூக்க முடியவில்லை. பெரும்பானமை மலாய் இனத்தை அரசாங்கம்,தனது கொள்கைகளின் மூலம் மிக பாதுக்காப்பாக வைத்துள்ளது.சீனர்களோ,பொருளாதார வளத்தைக்கொண்டுள்ளனர். தமிழர்களோ,உழைத்து ஓடானதுதான் மிச்சம் என்ற நிலை நிலவுகிறது. பொருளாதரத்தில்தான் பின்னடைவு என்றால்,வேலை வாய்ப்புகளிலும் அப்படிதான்.அரசு துறைகளிலோ,தனியார் துறைகளிலோ தமிழர்களை மிக குறைவாகவே வேலைக்கு எடுக்கின்றனர்.

மலாய் இனத்துக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கும் கொள்கைகளை கொண்டுள்ளதுதான் மலேசிய அரசின் கொள்கைகள்.இந்த கொள்கைகளின் மூலம் அனைத்து துறைகளில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.கலாச்சாரத்திலும் அரசின் தலையீடு தலைத்தூக்கியுள்ளது.வழிபாட்டுத்தளங்களைக் கூட இழக்க வேண்டிய நிலையில் உள்ளது மலேசிய தமிழினம்.சமுதாய தலைவர்கள் என்று தங்களை பாறைசாற்றிக்கொண்டவர்களோ,தங்கள் சமுதாயத்திற்காக எந்தவொரு அநியாயத்தையும் தட்டிக் கேட்காமல அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே உள்ளனர்.பெரும்பானமை மலாய் இனத்தோரிடம் அனுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தங்களது சுயநலத்தை மட்டுமே பேணி வந்துள்ளனர்;சமுதாய நலனை மறந்தே விட்டிருந்தனர் இந்த சமுதாயத்துரோகிகள்.இது போன்றதொரு சூழ்நிலையில்,உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான இளைய தமிழர்கள் தங்களுடைய மானசீக இயக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மூன்றாவது காரணம்,புலிகளின் தன்னலமற்ற போரட்டத்தின் மீது தமிழர்களுக்கு உள்ள ஈர்ப்பு.புலிகள் இயக்கத்தின் போராட்டம்,புலி உறுப்பினர்களின் கட்டுக்கோப்பு,அவர்களின் வெற்றிகள் மலேசிய தமிழர்களின் மத்தியில் புலிகள் இயக்கம் பிரபலமாக மிக முக்கிய காரணங்கள்.மலேசியத் தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறார்கள்,இதற்கு காரணம்,உலக அரங்கில்,தமிழர்கள் என்றாலே புலிகள் என்ற கருத்து நிலவுவதால்.

புலிகளின் தலைமைத்துவத்தின் மீது ஓர் அபரீதமான பற்றைக் கொண்டுள்ளனர் மலேசிய தமிழர்கள்.இதற்கு முக்கிய காரணம்,மலேசியாவில் நெடுங்காலமாக கோலேச்சி வரும் தமிழ் தலைவர்களின் சுயநல தன்மையும், முற்போக்கில்லா சிந்தனையும்தான்.மலேசிய தமிழர்களின் தலைவர்கள்,என்று தங்களை பாறைசாற்றிக்கொள்ளும் தலைவர்கள்,தங்களின் சுயநலத்தை முன்படுத்தி சிறுபான்மை தமிழர்களின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.ஆளும் பெரும்பான்மை மலாய் கட்சியோடு சேர்ந்து கொண்டு,சொந்த இனத்திற்கு சொந்தமான அனைத்தையும் தங்களின் பதவி சுகத்திற்காக விற்றே விட்டிருந்தனர்.ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்,காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டதிலிருந்து மலேசிய தமிழ் சமூகம் அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம்.மலேசிய தமிழர்களின் பொதுநலனை காக்க குறிப்பிட்டு சொல்லும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, எந்தவொரு இயக்கங்களோ செயல்படவில்லை.தங்களது சுயநலனுக்காக மொத்த இனத்தையும் கூறு போட்டனரே தவிர,உரிமைகளை மீட்டெடுக்க,அநீதியை எதிர்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.சொந்த இனத்தின் உரிமைகளை விட்டுகொடுத்து விட்டு மலேசியாவின் ஆளும் கட்சியின் இனவாத அரசியலுக்கு ஆதரவளித்தார்களே அன்றி,மலேசிய தமிழ் சமுதாயத்தின் அரசியல்,பொருளாதார,சமூக மேம்பாட்டைப் பற்றி யாரும் கேட்கவும் இல்லை,அதற்காக கவலைப்படவும் இல்லை.

மலேசியாவில் வாழும் தமிழர்களில் ஏறக்குறைய 75 சதவீதம் பேர்,குறைந்த அல்லது நடுத்தர வருமானத்தை பெருபவர்கள்.இவர்களில் பெரும்பாலோர், தோட்டப்புறங்களிலும் புறநகர் பகுதியிலும் வாழ்கிறார்கள்.மலேசிய தமிழர்களின் சொத்துடமை,வெறும் 1.5 சதவீதம் மட்டுமே;இதிலும் பெரும் பகுதி பாட்டாளி தமிழ் வர்க்கத்தைப் பற்றியோ,அவர்களின் போரட்டத்தைப் பற்றியோ கவலைப்படாத பணக்கார தமிழர்களையே சேரும்.

மொத்தத்தில்,ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தமிழர்கள் சுரண்டப்பட்டனர், ஏமாற்றப்பட்டனர்.இனிவரும் காலங்களில் இந்த சுரண்டல்களும் ஏமாற்று நாடகங்களும் தொடருமானால்,மலேசிய தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை வேறுவிதமாக அமையக்கூடும்.ஒரு முன்னாள் அரசியல்வாதி கூறியதைப் போல்,"தமிழர்கள் நாங்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல",என்ற கூற்றுக்கேற்ப எதுவும் சாத்தியம்.அண்மையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ் கலாச்சார நிகழ்வின் போது ஒரு மாணவரின் உரையும் இதைத்தான் பிரதிபலிக்கிறது. அம்மாணவர் கூறினார், "இனியும் எங்களின் கல்வி,கலாச்சார சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கம் கண்மூடித்தனமாக நடந்துக்கொள்ளுமானால்,எங்களுக்கு வேறு வழியில்லை, எங்களுக்கென்று தனிக்கொடி பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை."

31.7.08

இந்த்ராஃபின் விலை வெறும் 5 இலட்சம்தானா??

சில மணி நேரங்களுக்கு முன் எனக்கு கிடைத்த ஒரு குறுந்தகவல்,இப்படி சொல்கிறது.......

இந்தியர்களின் சாபக்கேடு மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் RS.தனேந்திரன், இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.இந்த்ராஃப் ஆதரவாளர்களை மஇகாவில் இணைப்பதற்கு 500,000(5 இலட்சம்) ரிங்கிட்டை மலேசிய இந்தியர்களின் சாபக்கேடான S.சாமிவேலு விடமிருந்து பெற்றுள்ளார்.5 வீரர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் போது,இந்த புல்லுருவி சொந்த இனத்தை விலைபேசியுள்ளான். பட்டவொர்த் மகாமரியம்மன் ஆலய வெள்ளி இரத நன்கொடையை கையாடல் செய்த இந்த பச்சோந்தி இப்போது,ஈப்போவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது.தனேந்திரனோடு சேர்ந்து இந்த துரோகத்தை இழைத்துள்ள இன்னும் சிலர்,பின்வருமாறு, G.அசோகன்,G.முகுந்தன் மற்றும் மலேசியாக்கினி நிருபர் ஆதி.வீரங்கன் ஆகியோர்.இந்திய சமுதாயத்தின் துரோகிகளே,அம்மன் உங்களை நரகத்துக்கு அனுப்புவாளாக.

ஆங்கிலத்தில்,

The Indian dillema lurks it ugly head again.National Coordinator of HINDRAF, RS.Thanendran has betrayed d Indians by accepting 500,000 bribe fr d Great Indian Robber,S.Samy Vellu,to get HINDRAF supporters to join d rest of d thieves in MIC.What a shame?5 heroes languishing in jail & dis scumbag sells out his race.Having cheated silver chariot fund of d Mahamariamman Temple Butterworth,Thanenthiran is in hiding in Ipoh.His chronies who hv also recieved money fr Samy vellu include G.Asokhan,G.Mukunthan & Malaysiakini reporter Athi.Veeranggan.Taritors of d Indian comnty,may Amman Shakthi burn u to hell.

இதனால்தான் இவ்வளவு நாளும்,மக்கள் கூட்டணி அரசாங்கத்தை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர் இந்த நன்றி மறந்த நரிக்கூட்டத்தினர்.

தனேந்திரன் இதையெல்லாம் செய்யக்கூடிய ஆள்தான் என்று முன்பிலிருந்து ஒரு பேச்சு இருந்த போதிலும்,உதயா அண்ணனுக்காக பல ஆதரவாளர்கள், அடக்கி வாசித்தனர்.இனிமேலும் அமைதியாய் இருந்தால்,நாளைக்கே உள்ளே உள்ள 5 பேரும் பணம் வாங்கி விட்டன்ர் என்பார் தனேந்திரன்.

தாங்கள் கேட்ட பதவியை மக்கள் கூட்டணி அரசு தரவில்லை என்றதும், கொள்கை என்பதையே விற்றுவிட்ட இவர்களெல்லாம்,பணத்துக்காக் சொந்த ம....... , தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம் என்று பார்க்கிறேன்.

இனிமேலும் இந்திய சமுதாயம் பொறுத்தல் கூடாது.
இந்திய சமுதாயத்துக்கு துரோகம் இழைப்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.சாமிவேலுவுக்கே பாடம் கற்பித்துள்ளோம் நாம்.
இவர்களெல்லாம் என்ன,வெறும் காளான்கள்.

பொறுத்தது போதும்,பொங்கியெலுவோம் தமிழர்களே,
பாடம் கற்பிப்போம் இந்த தனெந்திரனுக்கும்,அவர்தன் கைக்கூலிகளுக்கும்.

போராட்டம் ஓயாது,
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்.

28.7.08

வேண்டாம் தனேந்திரன்

உரிமைப்படைகளின் அணிவகுப்பு

இந்த்ராஃப்....

இந்நாட்டு இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புறப்பட்ட புயல்.
உரிமைக்காக போராடும் தைரியத்தை ஒவ்வொரு மலேசிய தமிழனுக்கும் தந்த மாபெரும் இயக்கம்.
இந்நாட்டு இந்தியர்களின் தலைவிதியை மாற்ற வந்த தன்னலமற்ற 5 தலைவர்களின் பாசறை.
மலேசிய அரசியலேயே புறட்டிப்போட்ட சரித்திர இயக்கம்.

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற வேட்கையோடு புறப்பட்ட 5 தலைவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலும்,1 தலைவர் அந்நிய தேசத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் இவ்வேளையில் இந்த்ராஃபின் பெயரை பயன்படுத்தி சில நயவஞ்சக சுயநலவாதிகள் தங்களின் சுயநலங்களை நிவர்த்தி செய்துக்கொள்வதை காண்கையில் மனம் வெம்புகிறது.

தூய்மையான போராட்டம்,சிதைந்து விடுமோ என்ற தவிப்பு நவம்பர் 25 பேரணியில் கலந்துக்கொண்ட எந்த தமிழனுக்கும் வருவது இயல்புதான்.
அந்த வகையில் எனக்கும் அந்த தவிப்பு மேலோங்கியே உள்ளது.
யார் உண்மையில் இந்த்ராஃப் தலைவர்??
நவம்பர் 25 பேரணியில் யார் இந்த்ராஃப் தலைவர் என்று பார்க்காமல் கலந்துக்கொண்டனர் இந்நாட்டு இந்தியர்கள்.இந்த்ராஃப் பேரணியை ஏற்பாடு செய்தார்கள் என்ற குற்றத்திற்காக ஐந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டப் பொழுது,இந்நாட்டு இந்தியர்கள் இந்த ஐவரையே தங்கள் மானசீக தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர்.தானைத்தலைவன்,தானே தலைவன் என்று பிதற்றிக்கொண்ட மூத்த அரசியல்வாதியை சென்ற இடத்திலெல்லாம் அடிக்காத குறையாக விரட்டினர் எம்மக்கள்.தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் சிறிதுமில்லாமல்,ஒரு நாட்டின் அமைச்சர் என்றும் பாராமல் எங்கு சென்றாலும் விரட்டியடித்தனர் எம்மக்கள்.அதற்கு ஒரே காரணம்,ஐந்து உரிமைப்போராளிகளின் மீது கொண்ட பற்றுதான்.

ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் ஒரே குரலில் கொடுங்கோல் பாரிசான்(பாசிஸான்) ஆட்சியையும்,ஒத்தூதும் மஇகாவையும் மலேசியாவின் 12வது பொதுத்தேர்தலில் எதிர்த்து நின்றது.நமது சகோதர இனங்களான மலாய்,சீன சமூகங்களின் ஆதரவோடும் பாரிசானின் மூன்றில் இரண்டு பெரும்பானமையை முறித்தோம்.அப்பொழுதும் யார் இந்த்ராஃப் தலைவர்கள் என்று பார்க்கவில்லை இந்த சமூகம்.உரிமைக்காக சிறைவாசம் ஏற்றிருக்கும் ஐவரைத்தான் நினைத்தது இந்த சமூகம்.

பதவி பித்து
ஐந்து மாநிலங்களை மக்கள் கூட்டணி பிடித்த பிறகு,தங்களை இந்த்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு பலர்,மாநில அரசாங்கம் வழங்கும் நகராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவிக்கு அடிப்போட்டனர்.சிலர் வெற்றி பெற்றனர்,சிலருக்கு ஏமாற்றம் மட்டுமே.
சிலர் பதவி கிடைக்கவில்லை என்றதும் மகஜரெல்லாம் கூட கொடுத்தனர். எம்மக்களின் உரிமையைக்கொடு என்று கேட்ட இந்த்ராஃப்-தான் பதவியைக் கொடு என்று கையேந்தி நிற்குமா??நீ தரும் விடுதலை வெறும் பிச்சையைப் போன்றது என்று விடுதலைக்கு கெஞ்சாமல்,போராட்டத்தின் கொள்கையில் உறுதியோடு இருந்து, உள்துறை அமைச்சரை சந்திக்க மறுத்த உதயாவின் வழிவந்ததுதான் இந்த இந்த்ராஃபா??
வழிமாற வேண்டாம் தோழர்களே.....
கொடுங்கோன்மையை எதிர்த்து விட்டு,அந்த கொடுங்கோலை புரிந்தவர்களிடமே பல்லிழித்து தஞ்சமடைவதை என்னவென்று சொல்வது?
எங்கள் 5 உரிமைப்போராளிகளை விடுவிக்கும் வரை உன்னோடு சமரசம் இல்லை!! இப்படித்தான் கூறுவான் எந்தவொரு சமுதாயப்பற்றுள்ள தமிழனும்.

இந்தியர்களின் தலைவிதியை மாற்ற வந்த இந்த்ராஃபை ஏமாற்று வேலைக்காரர்கள் என்பான் குடிபோதைக்கு (விஸ்கி) பெயர்போன அரசியல்வாதி,அவனை எதிர்த்து பேசிய நமது சகாவைத் தட்டிக்கொடுக்காமல், அந்த மானம் கெட்ட அரசியல்வாதியிடம் மன்னிப்பு கேட்பதுதான் தேசிய ஒருணைப்பாளரின் வேலையா??என்ன கொடுமை இது...???
கொடுங்கோல் பாரிசானை நாடு முழுவதும் எதிர்ப்போம் என்பதுதான் இந்த்ராஃபின் பொதுத்தேர்தலின் முடிவு,ஆனால் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டியவர் பாகான் டாலாம் தொகுதியில் நிறுத்தப்பட்டால் மட்டும்,அந்த தொகுதியில் மஇகாவிற்கு ஆதரவாம்.இதுதான் கொள்கைப்பிடிப்பா??
தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால்,மக்கள் சக்தியின் பெயரை உபயோகித்து கூட்டம் போடுவார்களாம்,அதில் நாமெல்லாம் போய் அமர்ந்து, ஆமாம்,ஆமாம்,நீங்கள் சொல்வதுதான் சரி என்று தலையாட்டி வர வேண்டுமாம்.தன்னலம் கருதாமல்,சமுதாயத்திற்காக சிறை சென்ற ஐவரின் விடுதலை வேண்டி எற்பட்டதுதான் மக்கள் சக்தி."மக்கள் சக்தி" என்ற சொல்லைக்கூட தங்களுடைய சுயநலத்திற்காக யாரும் உபயோகிக்கக்கூடாது என்பதுதான் எம்முடைய கொள்கை.அவ்வாறு யார் உபயோகித்தாலும் எதிர்ப்போம்.அவ்வாறு நாம் எதிர்க்கையில்,"இவன் இந்த்ராஃப் இல்லை" என்று சொல்வாராம் தனேந்திரன்,அதை சொல்ல யார் இவர்??
(தனேந்திரனின் அறிக்கை --> www.malaysiakini.com/news/86506 )
"மக்கள் சக்தி வேறு முக்கியமான வேலையே இல்லையா??
யாருக்கு எந்த கோவில் தலைவர் பதவி தருகிறார்கள் என்பதுதான் முக்கியமா?
இப்பொழுது 1905 இந்து அறவாரிய சட்டத்தை எதிர்ப்பது மிக முக்கியமா?1948 உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பது முக்கியமா??
ஐந்து தலைவர்களை பற்றி பேசுங்கள்,அவர்களை பிரிந்து தவிக்கும் அவர்களது குடும்பத்திற்கு உதவப்பாருங்கள்!!
அதைவிடுத்து பதவியில்லை என்றதும்,மக்கள் சக்தியின் பெயரையும், இந்த்ராஃப் பெயரையும் இழுக்காதீர்கள்.இந்த்ராஃப் என்பதும்,மக்கள் சக்தி என்பதும் ஒரு இயக்கம் என்பதைவிட ஓர் உணர்ச்சி!!
உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தோன்றிய உணர்ச்சி,அவ்வுணர்ச்சிதான் நவம்பர் 25ஆம் தேதி,கோலாலம்பூர் தெருக்களில் தென்பட்டது.மற்றவரை குறை கூறுவதல்ல இந்த்ராஃப்; உண்மைக்காகவும்,உரிமைக்காகவும் குரல் கொடுப்பதுதான் இந்த்ராஃப்."

இவ்வாறுதான் பினாங்கில் நடந்த ஒரு கருத்தரங்கில்,ஏற்பாட்டளர்களை பார்த்துக் கூறினேன் நான்.
கோபம் வந்துவிட்டது தனேந்திரனுக்கு.....
மலேசியகினியில் அறிக்கை விடுத்திருக்கிறார்,நான் இந்த்ராஃப் ஆதரவாளர் இல்லையாம்!!
நவம்பர் 25 பேரணியில்,கோலாலம்பூர் தெருக்களில் குவிந்த இலட்சக்கண்க்கான இந்த்ராஃப் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் தனேந்திரனுக்கு தெரியுமோ??
இவர் எதற்காக பினாங்கில் உள்ள கோம்தாருக்கு ஏறி,ஏறி இறங்கினார் என்று எனக்கு தெரியும்,ஊருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும்.

இவர்தான் இந்த்ராஃபின் தலைமைத்துவம் என்பது போல் செயல்படும் தனேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் நிபோங் திபால் ஆலயம் ஒன்றில் புரிந்த ஆர்ப்பாட்டங்கள் மலேசிய தமிழ் பத்திரிக்கையில் பக்கம்,பக்கமாய் வெளிவந்ததே.

இவருடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக இந்தராஃபின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றது என்பதே உண்மை.சுயநலம் தலைத்தூக்கி, இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தினால்தான் தோற்றது மஇகா.ஒரு மனிதனின் சுயநலப்போக்கால்,ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலான் இந்த்ராஃப் தோற்றுவிடக் கூடதென்பதுதான் எமது எதிர்பார்ப்பு

சுயநலம் தலைதூக்கி,கொள்கை மறந்துவிட்டவெரெல்லாம் தன்னை இந்தராஃபின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் தகுதியை இழந்து விட்டனர்.அதிலும் மிக முக்கியமாக,நேரத்திற்கேட்ப கூற்றை மாற்றிக்கொள்ளும் தனேந்திரனுக்கு இந்த்ராஃபை உரிமைக்கொண்டாட எந்த ஒரு தகுதியுமில்லை.

இந்த்ராஃப் ஆதரவாளர்கள் பலரின் மத்தியில் நிலவும் கருத்து இது.இப்படி கூறாதவர்கள்,இந்த்ராஃப் ஆதரவாளர்கள் என்பதி விட தனேந்திரன் ஆதரவாளர்கள் என்பதுதான் உண்மை.

நமக்கு தெரிந்த உண்மைகள்,திரு.வேதமூர்த்தி அவர்களுக்கும் விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம்,அவரும் இவ்விடயத்தில் தீர்க்கமான் முடிவொன்றை எடுப்பார் என்றே நம்புவோமாக.

வேண்டாம் சுயநலம்,வேண்டாம் தனேந்திரன்....

போராட்டம் ஓயாது.......
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக் மக்கள் குரல்....

7.7.08

அமைச்சரை சந்திக்க மறுத்தார் உதயா.....


கடந்த சனிக்கிழமை கமுண்டிங் தடுப்பு முகாமுக்கு இந்த்ராஃப் தலைவர்களை சந்திக்க வந்த உள்துறை அமைச்சர் சையட் அமீட் அல்பாரை சந்திக்க மறுத்துள்ளார் உதயக்குமார் அவர்கள்.

உதயா அவர்கள்,தனது குடும்ப உறுப்பினர்களின் வழி தெரிவித்த செய்தியில் கூறியிருப்பதாவது :

"எனது போராட்டத்தின் நோக்கம் மிக தெளிவாக இருக்கிறது;எந்த காரணத்தை கொண்டும்,யாரிடமும் என்னை விரைவில் சிறையிலிருந்து விடுவிக்க சொல்லி கெஞ்ச நான் தயாராக இல்லை."

நாடுகடந்து வாழும் உதயக்குமாரின் சகோதரர் வேதமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

"மக்களுக்கு நான் ஏன் அமைச்சரை சந்திக்க மறுத்தேன் என்பது தெரிய வேண்டும்.அவற்றுள் மிக முக்கிய காரணங்கள்,பின்வருமாறு :
  1. அமைச்சரின் நோக்கம் ஒன்றுதான்,இந்த்ராஃப் தலைவர்கள் தாங்கள் மாறிவிட்டதாக கூறி விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என் கோரினர் என்ற பரப்புரை செய்யலாம்.

  2. இந்த்ராஃப்-இன் போராட்டத்தில் இருக்கும் உண்மையை நான் அறிவேன்,ஒரு போதும் இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நான் வருந்தியதில்லை.

  3. இதற்கு முன்னர்,இதே அமைச்சர் இந்த்ராஃப் மீது பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.மக்கள் மத்தியில் இந்த்ராஃப் ஒரு தேசவிரோத அமைப்பு என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

  4. எனது இந்த போராட்டமானது,கடந்த 51 வருடங்களாக இனவாத அம்னோ அரசாங்கத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு,தொடர்ச்சியாக காலனித்துவப்படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படும் நீதி போராட்டம்.இதற்காக அனைத்து தியாகங்களையும் செய்ய நான் தயார்.

இந்த்ராஃபின் ஆதராவாளர்கள் அனைவரும் தங்களது போராட்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நாம் செய்யும் இந்த சேவையை எண்ணி நாம் பெருமைக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கெதிராக பாவிக்கப்பட்டிருக்கும் கொடுங்கோல் இசா சட்டம், எவ்வாறெல்லாம் இந்த நாட்டு இந்தியர்களை அம்னோ அரசாங்கம் தொடர்ந்து நசுக்குகிறது என்பதை வெளி உலகத்திற்கு படம் பிடித்து காட்ட வேண்டும். போராட்டம் ஒயாது."

இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நீதி கேட்டு மலேசியாவின் கோலாலம்பூர் சாலைகளில் குவிந்த இந்தியர்களின் பேரணியை ஏற்பாடு செய்ததன் வழி,நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த்ராஃப் தலைவர்கள் ஐவர்,உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த்வொரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த்ராஃப் அமைப்பையும்,அதன் தலைவர்களையும் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று அம்னோ அரசாங்கம் அறிவித்திருந்தது.உரிமைப்போராளிகளை சிறையில் அடைத்ததால் வெகுண்ட இந்திய சமுதாயம்,இம்முறை தேர்தலில் எதிர்கட்சிகளின் பக்கம் சாய்ந்ததால்,அம்னோ அரசாங்கம் 6 மாநிலங்களையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பதிவில்,இரங்கராஜ நம்பியின் கொள்கை பிடிப்பைக் கண்டு வியந்தேன்.தற்காலத்தில் நம்பியைப் போல் பிடிப்புள்ள மனிதர்கள் இருப்பார்களா என்று வியந்தேன்.

இருக்கவே,இருக்கிறார் எங்கள் உரிமைப்போராளி உதயக்குமார்.

அவரின் போராட்டம் ஒயாது,அவரை விடுவிக்க சொல்லி நாங்கள் நடத்தும் போராட்டமும் ஒயாது.எங்கள் இலக்கெல்லாம் ஒன்றுதான்,மலேசிய திருநாட்டில் இந்திய சமுதாயம் மற்ற இனங்களுக்கு நிகராக தலைநிமிர வேண்டுமென்பதே.உதயாவைப் போல் கொள்கை பிடிப்புள்ள தலைவன் எங்களை வழிநடத்தும் வரை எங்கள் போராட்டம் தோற்காது!!

வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்!!

6.7.08

இரங்கராஜன் நம்பி.......ஓர் உரிமைப்போராளி!!


எனது உரிமைப்போர் வலைப்பதிவில் பொதுவாக நான் சினிமாவைப் பற்றி எழுதுவதில்லை!!

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அங்கமாக பார்ப்பவன் நான்;ரசனையின் உச்சநிலையை அடைவதின் மூலமே,ஒரு திரைப்படத்தை விமர்சிக்கமுடியும் என்பது எனது கருத்து.

மிக அண்மையில் நான் ரசித்த தமிழ் திரைப்படம், தசாவதாரம்.

வைணவக்கொள்கைகளை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்னைப்போன்றவர்களையும் வைணவத்தலைப்புடைய இப்படம் ஈர்த்து விட்டிருந்தது என்பதுதான் உண்மை.

கலைஞானி என்ற அடைமொழி தனக்கு சாலப்பொறுந்தும் என்பதை கமல் மீண்டும் நிருபித்துள்ளார்.தமிழ் திரைப்படத்துறையை உலக அளவுக்கு கொண்டுசென்றுள்ளார் கமல்.பத்து வேடங்களில்,பத்து வித்தியாசமான பரிணாமங்களை திரையில் காட்டியிருக்கிறார்.

உரிமைப்போர் என்ற இந்த வலைப்பதிவில் நான் சம்பந்தமில்லாமல் சினிமாவை இழுக்கவில்லை!!

தமிழ் திரையுலகை உலக் பரிணாமத்திற்குக் கொண்டுச்சென்ற உலகநாயகன், தசாவதாரத்தில் எடுத்திருக்கும் பத்து அவதாரங்களில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமானது,முதன்முதலில் தோன்றும் இரங்கராஜ நம்பியின் கதாபாத்திரம்தான்.

தனதுரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவன் இந்த இரங்கராஜ நம்பி!!

சிதம்பரத்தில் இருந்து கோவிந்தராஜ பெருமாளின் மூலவர் சிலையை பெயர்த்தெடுக்க ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.தன் உயிரினும் மேலாக தாம் நேசிக்கும் இறைவனை யாரும் நெருங்காமல் தடுக்கிறான் இரங்கராஜ நம்பி.

"சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம்,கர்வம் தவிர்க்க சொல்" என்று மன்னனின் மதவெறியையும்,சைவ கர்வத்தையும் இடித்துரைக்கிறான். படைகளை வரதராஜ பெருமாளின் சன்னிதானத்திற்குள் ஏவி இரங்கராஜ நம்பியை கைது செய்கிறான் மன்னன்.வரதராஜ பெருமாளின் சிலயையும் பெயர்த்தெடுக்கிறான் மன்னன்!!இறுதிவரை அதை எதிர்த்து போராடி தோற்றும் போகிறான் இரங்கராஜ நம்பி.

கட்டுண்டு கிடக்கும் நம்பிக்கு மன்னன் இறுதி வாய்ப்பொன்றும் அளிக்கிறான். ஓம் நமசிவாய என்று கூறி உனது பாவங்களை போக்கிக்கொள் என்று உயிர்பிச்சையிடுகிறான்.தன் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைவனை,கண்ணீர் ததும்ப தொட்டு கும்பிட்டு;

"ஓம் நமோ நாரயணா"

என்று கதறுகிறான் இரங்கராஜ நம்பி!! வைணவர்களை அடக்கி ஒடுக்க நினைத்த மன்னனுக்கு சவால் விடும் நம்பியையும்,அவனுயிர் வரதராஜ பெருமானையும் கடலில் இறக்கிவிட ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்கன்.தில்லையிலிருந்து சமுத்திரம் வரையிலும் நம்பியை சிதையிலிட்டு இழுத்து வருகிறார்கள்.நம்பி அப்பொழுது உதிர்க்கும் சொற்கள்...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது!!

இல்லை என்று சொன்ன பின்பும்-இன்றி அமையாது!!

தொல்லை தந்தபோதும் எங்கள்-தில்லை மாறாது!!
வீர சைவர்கள் முன்னாள்-எங்கள் வீர வைணவம் தோற்காது!!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்,மேற்கில் சூரியன் உதிக்காது!!
ராஜலஷ்மி நாயகன் சீனிவாசன்தான்;
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்!!
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ,ராஜர்தான்;
ராஜனுக்கே ராஜன் எங்கள் ரங்கராஜன்தான்!!

என்று தில்லையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட வரதராஜனை கிஞ்சித்தும் விட்டுக்கொடுக்காமல் கதறுகிறான் நம்பி!! தொடர்ந்து.......
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது!!
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது!!
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்;
வெண்ணிலாவை அது அனைத்திடுமா?!
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்;
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா?!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது;
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது!!!

என்றுமே தாம் கொண்ட கொள்கை மாறாது என்று மன்னனுக்கு இடித்துரைக்கிறான்.மேலும் உன்னால் இந்த சிலையைத்தான் பெயர்க்க முடியும் எங்கள் நெஞ்சுக்குள் வாழும் எங்கள் தெய்வத்தை அல்ல என்பதையும் கூறுகிறான் நம்பி!! "அரியும்,சிவமும் ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு" என்பதை போல்,தெய்வத்திற்கு சமயம் தெரியாது என்பதையும் இடித்துரைக்கிறான்.

இறுதியில் தனதுயிரும் மேலான வரதராஜனோடு கடலில் கலக்கிறான் நம்பி!!

இந்த நம்பியை நான் உரிமைப்போராளியாகத்தான் பார்க்கிறேன்.
தனதுரிமையை என்றுமே இழக்க விரும்பாத ஒருவன்!!
தனது ஆசாபாசங்களை கொண்ட கொள்கைக்காக விட்டுக்கொடுப்பவன்!!
உயிரே போனாலும்,மாற்றுக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவன்!!

இந்த நம்பியின் படைப்பு வெறும் கற்பனை என்று சிலர் சொல்கிறார்கள்;ஒரு முருகன் பாடல் நினவுக்கு வருகிறது,
"கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்,கந்தனே உனை மறவேன்"

எனது ஆய்வுகளின்படி நம்பி,உண்மை சரித்திர பாத்திரம்!!
கமலை பிடிக்காத சிலர்,சரித்திரத்தை மற்றிக் கூறுகிறார்கள்!!(இந்த விடயத்தில் யாரோடும் நான் விவாதத்துக்கு தயார்)

நம்பியை ஒரு வைணவன் என்று மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை!!

வைணவ சமயத்தை ஆரிய திணிப்பு என்று இதுவரை ஏற்றுக்கொள்ளாத என்னைப்போன்றோர் பலரும்,நம்பிக்கு நடந்த சம்பவம்,சைவ மன்னனின் தவறான அணுகுமுறையென்றே கூறுவர் என்று நம்புகிறேன்.

மன்னனின் தவறான சமய அனுகுமுறையே சோழப்பேரரசை மூழ்கடித்திருக்கும் என்பது எனது கருத்து!!
சோழக்குலத்தோன்றல்கள் யாரும் செய்யத்துணியாத கொடிய செயலை இரண்டாம் குலோத்துங்கன் செய்துள்ளான்!!

சோழர்கள்,இயல்பில் சைவ மத சார்புடையவர்கள் என்ற போதிலும்,ஒரு போதும் வைணவத்திற்கு எதிராக அவர்கள் நடந்தது இல்லை என்றே கூற வேண்டும்.பல சமய மக்களையும் சரிசமமாக ஆண்டவர்கள் சோழர்கள்.சைவத்திருத்தலங்களுக்கும்,வைணவத்திருத்தலங்களுக்கும்,புத்த விகாரங்களுக்கும் சரிசமமாக திருப்பணிகள் செய்துள்ளதை சோழ வரலாறு நெடுகிலும் காணலாம்.சோழர்களின் சமயசார்பற்ற ஆட்சியை குறிப்பிட்டு சொல்வதற்கு உதாரணமாக வீராணம் ஏரியைக் கூறலாம்.ஆரம்பக்காலத்தில் இவ்வேரியை வெட்டிய சோழன்,ஏரியை சுற்றி 108 விஷ்ணு ஆலயங்களை எழுப்பியதாக படித்த நினைவு.இவ்வேரியின் இயற்பெயரே "வீர நாரயண ஏரி" என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான குடும்ப பின்னணியைக் கொண்ட இரண்டாம் குலோத்தூங்கன் செய்த கொடிய காரியம் சோழ ஆட்சியில் ஓர் இருண்ட பாகம் என்றே நான் கருதுகிறேன்.

சமய அநீதியை எதிர்த்து போராடும் எந்த போராளியின் போராட்டமும் தோற்றதில்லை எனலாம்.மன்னனின் அராஜகத்தை எதிர்த்து போராடிய இரங்கராஜ நம்பி இறந்துதான் போனான்.ஆனால்,அவன் போராட்டத்தின் வழி தெய்வம் கண் திறந்ததோ என்னவோ,கொடுங்கோல் குலோத்தூங்கனுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் சரிந்தது.

இந்த நம்பியின் சரித்திரம் போல்தான் நம் கண் முன்னே இப்பொழுது நிகழ்வதும்.

எங்கள் ஆலயங்களை உடைத்தான்.......
எங்கள் தெய்வ விக்கிரகங்களை சிதைத்தான்........
தட்டிக்கேட்ட எங்கள் மக்களை இரத்தம் சொட்ட உதைத்தான்........
நியாயம் கேட்டோரை சிறையில் அடைத்தான்......

முடிவு.....

இறைவன் கற்பித்தான் பாடம்!!

6 மாநிலங்களை இழந்தான்,நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழந்தான்.

அரசாங்கத்தின் அராஜகத்துக்கு தெய்வம் க்ற்ப்பித்த பாடம்!!

இது தொடக்கம்தான்.....

அரசன் அன்று கொள்வான்,தெய்வம் நின்று கொள்ளும்!!!

இரங்கராஜ நம்பி கொலை சம்பவத்திற்கு பிறகு,ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் தனது முழு கீர்த்தியையும் இழந்தது!!

இங்கே 100 ஆண்டுகள் எல்லாம் ஆகாது;இன்னும் 1 மாதமோ,2 மாதமோ!!

எனது பார்வையில்......

இரங்கராஜ நம்பி,
உரிமைப்போராளிகளுக்கு முன்னோடி!!!

23.5.08

எங்கே செல்கிறது இந்த்ராஃப்.....???


இந்த்ராஃப்.......


மலேசிய இந்தியர்களின் வாழ்வில் புயலாய் புகுந்து,வசந்தத்தை தந்த இயக்கம்.


"உனதுரிமை இழக்காதே,பிறருரிமை பறிக்காதே" என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு போர்க்களத்தில் புகுந்த இவ்வியக்கத்தின் அசுர வளர்ச்சியை சற்றே மீழ்பார்வையிடுவோம்.
நவம்பர் 25ஆம் தேதி.......

எந்த மலேசிய இந்தியனும் இந்த நாளை தனது வாழ்வில் மறக்கவே மாட்டான்.

மலேசிய அரசியலில் ஏற்பட்ட ஒரு பயங்கர நடுக்கத்திற்கு மிக முக்கிய காரணம் இந்த "நவம்பர் 25" அதிர்வுதான்.இனவாத அம்னோ மலாய்க்கார சகோதரர்களை இந்தியர்களுக்கு எதிராக திருப்பிவிட முயன்ற வேளையில், அன்வார் இப்ராகிம்,ராஜா பெட்ரா போன்ற முற்போக்கு சிந்தனைக் கொண்ட மலாய்க்காரர்கள் இந்த்ராஃபின் போரட்டத்திற்கான காரணத்தை உணர்ந்து ஆதரித்ததால்தான் ஒரு இனக்கலவரம் தோன்றாமல் போனது.

இந்த்ராஃபை நசுக்கும் முதல் முயற்சியில் தோல்வியடைந்த இனவாத அம்னோ,தொடர்ந்து தனது "இந்த்ராஃப் நசுக்கும்" முயற்சியில் கையிலெடுத்தது கொடுங்கோல் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை(இசா).சமூக அநீதியை எதிர்க்கும் இந்த்ராஃபை நசுக்க அம்னோ அரசு ஒப்ராசி லாலாங்-கை போன்ற இசா கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.இந்த்ராஃபை தேசிய அச்சுறுத்தல் என்று காரணம் ஒன்றையும் முன் வைத்தது.இந்த இசா கைதானது,நாடாளவில் உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை கூட்டங்களுக்கு வழிவகுத்தது.இந்த பிரார்த்தனை கூட்டங்களானது நீண்ட நாள் பாரிசான் விசுவாசிகளான இந்தியர்கள் மத்தியில் மாபெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதன் விளைவு,மார்ச் 8 அரசியல் சுனாமி.

தேர்தலுக்கு முன்பு ஜசெகாவின் ஆலோசகர்,ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு லிம் கிட் சியாங் அவர்கள் கூறினார்,இந்தியர்கள் ஆதரவு முழுமையாக கிடைத்தால் 62 தொகுதிகள் எதிர்கட்சி வசமாகும் என்று.ஆனால் தேர்தலில் இன்னும் போனஸாக 20 தொகுதிகள் சேர்த்து 82 தொகுதிகளில் மக்கள் கூட்டணி வென்றது.இந்த வெற்றிக்கு இந்த்ராஃபின் எழுச்சியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்த்ராஃபின் போராட்டம் தேர்தலோடு முடிந்த ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதே சமுதாய ஆர்வலர்களின் கருத்தாகும்.இந்த்ராஃபின் போராட்டம் பொதுத்தேர்தலோடு முடிந்து விடவில்லை.தொடர்கின்றது.......

அந்த தொடர்ச்சி எங்கே,எதை நோக்கி செல்கின்றது என்பதிப்பற்றிதான் இந்த ஆய்வுக்கட்டுரை.

மார்ச் 8 அரசியல் சுனாமிக்கு பிறகு,5 மாநிலங்களை கைப்பற்றியது மக்கள் கூட்டணி.தேசிய முன்னணியை முழுமையாக எதிர்த்த இந்த்ராஃபின் ஒரிங்கிணைப்பாளர்கள் என்று பாரைசாற்றிக்கொள்ளும் சிலர் தொடர்ந்தார் போல் மக்கள் கூட்டணி வெற்றி விழாக்களில் கலந்துக்கொண்டனர். இதெல்லாம் வெற்றி களிப்பிற்காக மட்டுமல்ல,மற்றுமொன்றையும் எண்ணத்தில் வைத்துதான்.


இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பு பட்டவொர்த்தில் மையமிட்டிருந்தது போல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.பினாங்கில் மொத்த ஆட்சி மையமும் தங்களை கேட்டே நடப்பது போலவும் காட்டிக்கொள்ளப்பட்டது.

ஒருநாள்,அனைத்து வட்டார ஒருங்கிணைபாளர்களையும் அழைத்து பேசினார் அந்த தேசிய ஒருங்கிணைப்பாளர்."தேர்தலில் வென்று விட்டோம்,இனி நமது சன்மானங்களை பெற்றுக்கொள்வோம்" என்பது போல் சென்றது அந்த கலந்துரையாடல்.பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களை,"இராமசாமி அதை சொன்னார் செய்யவில்லை.இராமசாமி இதை சொன்னார் பேச்சையே காணோம்" என்பது போல் சென்றது அந்த கலந்துரையாடல்.ஒருமையில் அவரைப்பற்றி பேசவில்லை என்றாலும்,அவருடைய கல்வி தகுதியான "பேராசிரியர் அல்லது PROFESSOR" என்ற அடைமொழியை அவர்கள் உபயோகிக்காததை கண்டு நான் சற்று ஆதங்கப்பட்டேன்.பேராசிரியர் நடவடிக்கைகளை தற்காத்தும் பேசினேன். உடனே,குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளர் தாளம் மாற்றி வாசித்தார்.பேராசிரியர் இராமசாமி என்று கூற தொடங்கி விட்டார்.

அதன் பிறகு நடந்த கலந்துரையாடல்களுக்கு எனக்கு அழைப்பில்லை.இந்த கட்டத்தில்தான் தலைத்தூக்கியது போராட்டம்.என்ன போராட்டம்.....

பதவி போராட்டம்........

பினாங்கில் உள்ள 4 புகழ்பெற்ற ஆலயங்களை நிர்வகிப்பது பினாங்கு இந்து அறப்பணி வாரியமாகும்.பினாங்கு மாநில அரசின் கீழ் செயல்படும்,இந்த வாரியத்திற்கு சொந்தமாக 125 மில்லியன் சொத்துகள் உள்ளது.இந்த வாரியத்திற்கான தலைமை பொறுப்பை எதிர்பார்த்தார் குறிப்பிட்ட இந்த்ராஃப் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஒருவர்.அவரது கனவில் விழுந்தது அடி.பினாங்கு மாநில அரசு,வாரியத்தின் தலைவராக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர்,தனசேகரன் அவர்களை வாரிய தலைவராக அறிவித்தது.இந்த சட்டமன்ற உறுப்பினரும் பட்டவெர்த்தை சேர்ந்தவர் என்பதால்,பட்டவெர்த்தில் இயங்கிய மக்கள் சக்தி இரண்டானது.இந்த்ராஃப் தேசிய ஒருங்கிணைப்பாளர் பக்கம் ஒரு மக்கள் சக்தியும்,சட்டமன்ற உறுப்பினர் பக்கம் ஒரு அணியும் நின்றது.தலைவர் பதவிதான் போச்சு,வாரிய உறுப்பினர் பதவியாது மிஞ்சும் என்று நம்பியிருந்த தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு மேலும் ஓர் அடி. இந்த்ராஃபின் நிதியில் முறைக்கேடு என்ற காரணத்தை சுட்டி இவருக்கு வாரிய உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து இவர் கேட்டது,செனட்டர் பதவி.இவரின் விசுவாசிகள் சிலர் நாளிதழ்களின் வழி இவரின் ஆசையை வெளிபடுத்தினர்.ஒரு கலந்துரையாடலில் நான் கலந்துக்கொண்டபோது,இவரின் தீவிர விசுவாசி ஒருவர் செனட்டர் பதவியை அண்ணனுக்கே தர வேண்டும் என்று அடித்து பேசினார்.செனட்டர் பதவிகளுக்கு இந்த்ராஃபின் 5 தியாகிகளே தகுதியானவர்கள் என்று நான் அங்கே வாதிட்ட பொழுது,சிலர் அதனை ஏற்றுக்கொண்டனர்;சிலர் விடாப்பிடியாக தங்கள் அண்ணனே செண்ட்டர் பதவிக்கு தகுதியான்வர் என்று வாதிட்டனர்.இதுதான் இந்த்ராஃபா??

தொடர்ந்து இவர் அடிப்போட்டது,நகராண்மைக்கழக உறுப்பினர் பதவிக்கு!!

அதுவும் கிடைக்காத போதுதான்,இந்தியர்களுக்கு பேராசிரியர் இராமசாமி எதுவும் செய்யவில்லை என்று ஒரு முட்டாள்தனமான அறிக்கையை விடுத்தனர்.பினாங்கு இந்தியர்கள் அந்த முட்டாள்தனமான அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும்,பேராசிரியர் அவர்கள் அந்த அறிக்கையை வெளியிட்டோருக்கு சரியான பதிலடி கொடுத்ததும்.பேச்சு மூச்சே காணோம்.

ஆகக்கடைசியாக எதுவும் சரி வராததால்,தானே ஓர் இயக்கம் ஆரம்பித்து, அதற்கு தானே தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு அமைதியாகி விட்டார் இந்த ஒருங்கிணைப்பாளர்.அண்மையில்,அந்த இயக்கத்தின் சார்பாக ஒரு மாபெரும் நிகழ்ச்சி ஒன்றையும் படைத்திருந்தார்.அதற்கு பதிலடியாக மக்கள் சக்தியின் அதிருப்தி பிரிவும் அண்மையில் ஜசெக சார்பாக மற்றுமொரு நிகழ்வை படைத்திருந்தது.

மேற்குறிப்பிட்ட தேசிய ஒருங்கிணைப்பாளரின் விசுவாசிகள் அடிக்கும் கொட்டமும் தாங்க முடியவில்லை.JKKK பதவி முதற்கொண்டு நகராண்மைக்கழக உறுப்பினர் பதவி வரைக்கும் அனைத்திற்கும் போராடுகிறார்கள்.ஆனால் இந்த்ராஃபின் உண்மை போராட்டத்தை மறந்து விட்டனர்!!

இப்பொழுது உதயக்குமார் பற்றியோ,மற்ற நாலவரை பற்றியோ பேச்சையேக் காணோம்!!

இப்பொழுது இவர்களுக்கு முக்கியமெல்லாம்,பதவியும்,பட்டமும்தான்!!!

உண்மையான இந்த்ராஃப் போராட்டததை இவர்கள் மறந்து விட்டதை காட்டும் விதம் அமைந்திருப்பதுதான்,வசந்தக்குமார் அவர்களின் மனைவி விக்னேஸ்வரி அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை!!


-தொடரும்-