5.1.09

கணைகள் வீசும் பெண்......

ஈழத்தமிழர் தினம் இனவெறி போரால் படும் இன்னல்களை இங்குள்ள தமிழர் அறியாமல், தினமொரு கனவில் திளைத்திருப்பதை கண்டு பலமுறை எனது நெஞ்சம் வெம்பியிருக்கின்றது. அதிலும் பண்பாட்டை காக்க வேண்டிய பெண்களை பற்றிதான் எனக்கு மிக அதிகக்கவலை எனலாம்.

அங்கே ஆயுதம் கையிலெடுத்து போராடும் எமது பெண் புலிகளையும், இங்கே குடி,கும்மாளம் என பொழுதை கழிக்கும் ஒரு சில தமிழ் பெண்களையும் ஒப்பிட்டு பார்த்து பல முறை வருந்தியிருக்கிறேன்.

பண்பாடு, பாரம்பரியம் என்று இன்றும் நமது பெண்கள் பலர் வாழ்கிறார்கள் என்பதிலும் ஓரளவு திருப்தி. நமது தமிழ் பெண்களின் அபரீத வளர்ச்சி, சிந்தனை முதிர்ச்சியைக் கண்டு பெரிதும் உவகைக் கொண்டதெல்லாம் உண்டு.

பாரதி கண்ட புதுமைப்பெண் வெறும் கனவு அல்ல, இன்று நிரந்தர நிஜமாகியுள்ளது. அதிலும், பாரதியின் புதுமைப்பெண் என்று கூறிக்கொண்டு, தவறான பாதையில் செல்லும் சிலரும் உண்டு. அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம்.

பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற காலக்கட்டத்தை கடந்து, இன்று பிரபாகரன் கண்ட புலிப்பெண் என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தில் மட்டும்தான் "பிரபாகரன் கண்ட புலிப்பெண்கள்" இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, எனது அருமை அக்காவின் மூலம் அறிமுகமானவள் இந்த கணைகள் வீசும் பெண். எனது தமக்கையின் வழி அறிமுகமான ஒரு பெண் வலைப்பதிவரைப் பற்றிதான் மேற்கூறிய நீண்ட நெடிய விளக்கம்.

கணைகள்.... என்ற வலைப்பதிவை காண நேரிட்டப்பொழுது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன்னை
அடைத்துக்கொள்ளாமல், இலக்கியம், அரசியல், தகவல் பரிமாற்றம் என்று புகுந்து விளையாடும் இந்த பதிவரின் ஈழத்தைப் பற்றிய கவிதைகள், உரைவீச்சுகள்தான் எனது ஆச்சரியத்திற்கு காரணம். நமது தாய் திருநாட்டில் ஈழப்போராட்டத்தை அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உரிமையைக் கேட்டு போராடும் எமது தமிழ் புலிகளை மானசீகமாக ஆதரிக்கும் இந்த பெண் பதிவரைக் கண்டதில் உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

போர்... என்றாலே "நாங்கள் அதை வெறுக்கிறோம்" எனும் பெண்களுக்கு மத்தியில், தேவியில்லாப் போரையும் உரிமைப்போரையும் வித்தியாசப்படுத்தத் தெரிந்தவர் இந்த பதிவர் என்பதுதான் சிறப்பு.
இவரின் படைப்பில் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பிட்ட பதிவு பின்வருமாறு...

"இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!"

"என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!"


"நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!"

இதே கோபத்தோடுதான் ஈழ்த்தில் எமது பெண்கள் கைகளில் ஆயுதம் ஏந்துகின்றார்கள். இந்த பெண் கையில் கணினியின் தட்டச்சு கிடைத்து விட்டது. கோபம் கொப்பளித்தாலும், அது நியாயமான கோபம் என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து கிடையாது.

இந்த கோபமெல்லாம் இதேப்போல் படைப்புகளாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. இந்த பெண் வலைப்பதிவரின் படைப்புகளை கவனிக்க கீழ்காணும், இணைய முகவரியை சுட்டுங்கள் :-



கணைகள் என்ற வலைப்பதிவில் வெறும் பூவிலான கணைகளை மட்டும் வீசாமல், அடிக்கடி இதுபோன்ற ஏவுகணைகளையும் வீச வேண்டும் என்பது எனது ஆவல்.
வலைப்பதிவர் நண்பர்கள், இந்த் பிரபாகரன் கண்ட புலிப்பெண்ணின் கணைகளை தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமென்றும் முன்மொழிகிறேன்.

2.1.09

நெஞ்சே நீ கலங்காதே.....விழுவது எழுவதற்கே.....

இன்றைய தினம் தமிழ் நெஞ்சங்கள் பலருக்கு மனம் வெதும்பி போயிருக்கும்.
தனித்தமிழ் தேசம் ஒன்றை கொணர ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகுந்து, பத்தாண்டுகளுக்கு மேலாக, வன்னி பெருநிலத்தில் தனியொரு அரசை நிருவி தமிழர் தேசத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி, சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டதாக கொலைவெறியன் மகிந்த ராஜாபாக்சே அறிவித்துள்ளான்.

எவ்வளவுதான் வலுவோடு நெஞ்சம் இருந்தாலும், கண்ணில் பீறிட்டு வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை. தனித்தமிழ் தேசிய எழுச்சி இத்தோடு முடிந்து விடுமோ என்ற அச்சத்தில் வரும் கண்ணீர்தானே தவிர தோல்வி பயத்திலோ, சோகத்தினாலோ வரும் கண்ணீர் அல்ல.

புலிகள் இதைவிட மோசமான பின்னடைவுகளையெல்லாம் சந்தித்துள்ள போதிலும், அடுத்த சில மாதங்களிலேயே அசுர பலத்தோடு சிங்கள முகாம்களை தாக்கி மீண்டும் கிளர்த்தெழுந்துள்ளதை ஈழப்போர் வரலாற்று நெடுகிலும் நாம் கண்டு வந்துள்ளோம். இந்த முறை புலிகள் கடுமையான எதிர்ப்பு எதையும் முன்வைக்காமல் பின்வாங்கியுள்ளனர் என்பதை உற்று நோக்கும் போது, பாரிய இழப்புகளை தவிர்க்கும் தந்திரபோயம் என்றே கருத வேண்டியுள்ளது.

உலகின் தலைசிறந்த மரபுவழி போர்முறையை கையாளும் விடுதலை இயக்கம் என்று பெயர் பெற்றிருக்கும் புலிகளின் அடுத்த நகர்வு என்ன என்பதே இப்போதைய அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றி விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த அடுத்த சில மணி நேரத்திற்குள் இலங்கையின் வான்படை தளத்திற்கு அருகில் தற்கொலைத்தாக்குதல் ஒன்று நடந்திருப்பதை பார்க்கையில், புலிகள் தங்களது கொரில்லா வழிமுறை போரை தொடங்கி விட்டதையே காட்டுகிறது.

எது எப்படியிருப்பினும், உலக தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் துடித்து போயிருக்கும் இவ்வேளையில், புலிகள் மிக விரைவாக படை நகர்வுகளை மேற்கொண்டு சிங்கள இராணுவத்தின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தமிழனின் ஆவல்.

தமிழ் நெஞ்சமே.....
நீ கலங்காதே.....
விழுவது எழுவதெற்கே......

தமிழ் புலியே......
உனது பின்னால் உலகத்தமிழினம்.....
உயிரினும் மேலான எமது தேசத்தின் சுதந்திரத்தை மீட்டெடு!!