24.9.08

மே 13......ஒரு அறிமுகம்--2

ஒரு சமுகவியல் ஆராய்ச்சியாளர் என்ற முறையில்,இந்நூலின் ஆசிரியர் மே 13 இனக்கலவரத்தை அரசியல்,பொருளாதார ரீதியில் நோக்குகிறார். அவருடைய ஆய்வின் படி,மே 13 கலவரம், திடிரென்று ஏற்பட்ட இன கொந்தளிப்பல்ல; இக்கலவரம் திட்ட்மிட்டு அரங்கேற்றப்பட்ட கொடுரம் என்பதை சில ஆவணங்களின் மூலம் உறுதி படுத்த முடிந்துள்ளது. பல்லின சமுதாயம் ஒன்று கூடி வாழும்போது இனங்களுக்கிடையான உறவு எப்பொழுதும் பதற்றமாகவே இருக்கும் என்பது தவறான கண்ணோட்டமாகும். இனங்களுக்கிடையான பதற்றங்களை ஆய்வு செய்கையில்,குறிப்பிட்ட அரசாங்கத்தின் ஈடுபாட்டையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல நாடுகளின் சரித்திரம் இதற்கு தக்க சான்றாக அமையக்கூடும்.ஆசிரியரின் ஆய்வு படி,மே 13 இனக்கலவரமானது, ஒரு திட்டமிடப்பட்ட "அதிகார பறிப்பு"க்கான முன்னோட்டம் என்று கூறுகிறார்.இவ்வதிகார பறிப்பானது,பழமைவாதம் மிகுந்த மலாய் பிரிவினடமிருந்து, நாட்டின் வளங்களை பொருளாதார இலாபத்திற்காக பங்கிட்டுக் கொள்ளும் (CAPITALIST) பிரிவினர் நடத்தியதாகும்.பழைய கலாச்சாரம் மிகுந்த மலாய்க்காரர்களின் பிரதிநிதியான துங்குவிடமிருந்து அதிகாரத்தை புதிதாக தலையெடுத்த பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர் திட்ட்மிட்டு பறித்தனர்.இவ்வதிகார பறிப்பின் தாக்கம்தான்,மலேசியாவின் அரசியலிலும் பொருளாதாரத்துறையிலும் இன்று வரை நீடிக்கிறது.இவ்வதிகார பறிப்பின் விளைவுதான்,புதிய பொருளாதார கொள்கை (NEP);இவ்வதிகார பறிப்பின் மூலம்,பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களின் பொருளதாரத்தை வளப்படுத்திக் கொண்டதோடு,அரசியலிலும் தங்களின் பிடியை இறுக்கினர்.



இவ்வதிகாரப் பறிப்பை பற்றி துங்குவும் கூறியுள்ளார் :-

“ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.”

சுப்கி லத்தீப்,இக்காலகட்டத்தில் நிருபராக இருந்தவர்;அவர் 1977இல் அவர் கீழ்வருமாறு கூறியுள்ளார் :

-மே 13 இனக்கலவரம் திடிரென்று ஏற்பட்ட இனக்கொந்தளிப்பல்ல! இச்சம்பவமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.இத்திட்டத்தை தீட்டியவர்கள் யாரென்பதை தெளிவாக கூற முடியவில்லை.ஆனாலும்,ஒட்டு மொத்த கண்ணோட்டத்தையும் வைத்து பார்த்தால்,மே 13 கலவரமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று.மே 13 கலவரத்திற்குப் பின்,துங்குவின் அதிகாரமானது அதற்கு பின் மழுங்கி விட்டதெனவே கூற வேண்டும்.அதற்கு பிறகும் துங்கு,பிரதமராகவும்,அம்னோ தலைவராகவும் இருந்த பொழுதும், அவர் அதிகார சின்னமாக மட்டுமே இருந்தார், அதிகாரம் அவரிடத்தில் இல்லை!” சுப்கி லத்தீபின் கருத்தானது 1977இல் வெளியிடப்பட்டது.அவரது கருத்துக்கு ஆதரமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ள ஆவணங்களே இருந்துள்ளன.

இந்நூலின் முதல் பகுதி,மலேசியாவில் இன அரசியலுக்கு வித்திட்ட “கப்பல் கூட்டணி”யின் உதயத்தைப்பற்றி ஆராய்கிறது.கப்பல் கூட்டணியானது,சுதந்திரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது.காலனித்துவ ஆட்சியாளர்களான பிரிட்டிசாரின் ஆசியைப் பெற்றது.சுதந்திரத்திற்குப் பின்பு,இக்கூட்டணியின் கொள்கைகளின் விளைவே இன ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது.இந்த இன ரீதியான கண்ணோட்டம்தான் அறுபதுகளின் அரசியல்,சமூகவியல்,பொருளாதார வித்தியாசங்களுக்கு அடிப்படை என்பது திண்ணமாகும்.




முதல் பாகத்தில் பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினரின் திடீர் தோற்றமும்,1969இல் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றிய விதத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.மே 13 கலவரமானது,மலேசியாவின் அரைச்யல்,ஒரு மிகையான அரசியல் நிலையிலிருந்து,மலாய்க்காரர்களை முன்னிலைப்படுத்திய அரசியலுக்கு மாற வித்திட்டது.இதன் வழி பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர்,தங்களுடைய நோக்கத்தை சாதித்துக்கொள்ள தொடங்கினர்.அரசாங்க நிறுவனங்கள்,மலாய் உழவர்களுக்கு கடன்,ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை ,அவர்களின் நோக்கத்தை சாதித்துக் கொள்வதற்கான சாதனமாக அமைந்தன.புறநகர் மேம்பாட்டை முன்னிலைப்படுத்தும் நிறுவனங்களும்,வங்கிகளின் மூலமும் இவர்கள் பெரும் இலாபம் அடைந்தனர்.துங்கு அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களுடைய பொருளாதார நோக்கம் ஈடேறாது என்பதால்தான்,திட்டமிட்டு துங்குவிடமிருந்து அதிகார பறிப்பு நிகழ்த்தப்பட்டது.

1960ஆம் ஆண்டுகளில்,காலனித்துவ ஆட்சிக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட சில அரசாங்க கொள்கைகள்,நடவடிக்கைகள் மக்கள் மத்தியில்,குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர்,விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி கல்வி,உபகார சம்பளம்,தொழில் உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்) போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் ஒரு தலைபட்சமான நிலைப்பாடுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் அதிருப்தியடைந்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நிலவிய அரசாங்கத்திற்கெதிரான அதிருப்தியானது,1969 பொதுத்தேர்தலில் ந்திரொளித்தது.அதுவரை ஆட்சியை இறுகப்பிடித்திருந்த அம்னோவின் அதிகாரத்திற்கும் 1969 பொதுத்தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.பொருளாதார நோக்கமுடைய மலாய் பிரிவினர், இவ்வேளையில் “மலாய் அதிகாரத்துவம்” என்ர கொள்கையை அறிமுகப்படுத்தி அம்னோவின் ஆளுமையை நிலைநிறுத்தியதோடு, அம்னோவிற்குள்ளும் துங்குவின் அதிகாரத்தை கைப்பற்றினர்.

இரண்டாம் பகுதியில் 1969 பொதுத்தேர்தலை ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். 1969 பொதுத்தேர்தலில்,எதிர்கட்சிகள் ஒரு ஒப்பந்த நிலையிலான கூட்டணியை அமைத்து “கப்பல் கூட்டணியை” எதிர்த்தன.பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே,கப்பல் கூட்டணி சுதந்திரத்திற்கு பின்பு முதன்முறையாக பலத்த சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அதோடு மட்டுமல்லாமல்,ஒரு சில மாநிலங்களையும் எதிர்கட்சிகல் கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்த வேளையில்,எதிர்கட்சிகளின் வெற்றி பேரணிகளே ஒரு பயங்கரமான இனக்கலவரத்திற்கு அடிப்படை காரணம் என் கூறப்படுவதை,அர்சியல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

-தொடரும்-


அடுத்த பாகத்தில் :-

இரகசியமாக்கப்பட்ட ஆவணங்கள்

- 1969 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நமக்கு கிடைத்த தகவல்கள்களில் பெரும்பாலனவை, அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும், தணிக்கைகளுக்கும் மத்தியில் பல உண்மைகள் மறைக்கப்பட்ட தகவல்கள் என்பது தெரிய வருகிறது.

- 1969 இன் இனக்கலவரத்தின் போது மலேசிய அரசாங்கத்தின் “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்ற கண்துடைப்பு நாடகத்துக்கு பிரிட்டிஷ் போன்ற மேற்கு நாடுகளும் துணை போயுள்ளன.

15.9.08

மே 13......ஒரு அறிமுகம்

“இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!”

“மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!”


மே 13,நமது சுதந்திர மலேசியாவின் கரை படிந்த அத்தியாயம்.இந்த மே 13 இனக்கலவரத்தைப் பற்றி இதுவரை நாம் படித்து வந்த சரித்திர கோப்புகள் எல்லாம் பொய் என்பதை சுவாராம் இயக்குனர்,குவா கியா சுங் அவர்களின் "மே 13,1969 மலேசிய கலவரத்தைப் பற்றிய இரகசிய ஆவணங்கள்" ( May 13, Declassified documents on Malaysian Riots 1969" என்ற புத்தகத்தை படித்த பிறகு அறிய முடிகிறது.இந்த மே 13 புத்தகம்,மலாய் மொழியிலும், ம்ஆங்கில மொழியிலும் மட்டுமே உள்ளது. உண்மைகளைக் கூறும் இந்நூல் தமிழில் வெளிவர வேண்டும் என்பதுதான் என் அவா.அதற்கான முதல் முயற்சியாக இந்நூலின் அறிமுக பாகத்தை தமிழில் மொழி பெயர்த்து இவ்வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.மே 13 பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்......


அறிமுகம்
அதிகாரப்பூர்வ சரித்திர படிவங்கள் உண்மையா?
கடந்த 2006 ஆம் ஆண்டு மத்தியில்,சில மலேசியர்கள் எழுப்பிய அதிருப்தி குரலை நாம் கேட்க முடிந்தது.இந்த அதிருப்தி குரல்களுக்கு காரணம், மலேசிய ஆரம்ப பள்ளி பாடபுத்தகங்களில்,1969 இனக்கலவரத்தைப் பற்றியும், மலேசியர்களின் இனங்களுக்கிடையான உறவைப் பற்றியும் கூறப்பட்டிருந்த தகவல்கள்தான்.1969 பொதுத்தேர்தலில்,நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியின் பெரும்பான்மையை குறைத்ததனாலும்,சில மாநிலங்களின் ஆட்சியை கைப்பற்றியதாலும்தான் மே 13 இனக்கலவரம் நிகழ்ந்தது என்று ஒட்டுமொத்த பழியையும் எதிர்கட்சிகளின் மீது சுமத்தப்பட்டதை பெரும்பாலான மலேசியர்கள் நம்பவில்லையென்பதையே இந்த அதிருப்தி குரல்கள் நமக்கு உணர்த்தியது.
இந்த அதிகாரப்பூர்வ சரித்திரத்தின் படி,இது போன்ற கலவரங்கள் ஆளுங்கட்சியின் பெரும்பான்மை சரியுமானால் மீண்டும் சாத்தியம் என்பது போலவும் பாட புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது.1969 முதற்கொண்டு ஆளும் தரப்பு இதைக்கூறித்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. மலேசிய சுதந்திரம் அடைந்த பொழுது வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 153வது பாகத்தின் படி,மலாய்க்காரர்களுக்கு நிலம்,அரசாங்க வேலை வாய்ப்புகள், ஒரு சில வணிகங்களுக்கான உரிமங்கள் (லைசென்ஸ்/பெர்மிட்), உபகாரச்சம்பளம்,கடனுதவி மற்றும் சில கல்வி உதவிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால்,1969க்குப் பின் உருவாக்கப்பட்ட தேசிய ஆளுமை மன்றம் (National Operational Council) மலாய் அதிகாரத்துவம்(Ketuanan Melayu) என்ற கொள்கையை வடிவமைத்தது.இதன் மூலம்,மற்ற இனங்களுக்கு அநீதியான அரசாங்க கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.மலேசிய அரசியலமைப்புக்கு முற்றும் புறம்பான இந்த மலாய அதிகாரத்துவ கொள்கையானது இனவாத கொள்கையாக மட்டுமின்றி, ஒரு அநியாயமான கொள்கையுமாகும்.
ஆகவே, மலேசிய சரித்திரத்தை திருத்தி எழுதுமாறு ஒர் சில தரப்பினர் எழுப்பும் கோரிக்கையின் நியாயம்,சுதந்திரமான அறிவுமயத்தின் கட்டாயமாகும். மலேசியாவின் சரித்திரத்தைப் பற்றி பேசுகையில்,பல பகுதிகளைப் பற்றி சந்தேகங்களும், எதிர் விவாதங்களும் நிலவுகின்றன. அவற்றில் குறிப்பாக, இரண்டாம் உலகப்போர், சுதந்திரப்போரட்டம், அவசரக்காலம், முக்கியமாக 1969 மே 13 இனக்கலவரம் ஆகியவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ சரித்திர பதிவுகள் பெரும் விவாதத்திற்குள்ளாகின்றன.
மே 13 நூலின் எழுத்தாளர், தனது முனைவர் நிலை பட்டப்படிப்புக்காக அவசரக்காலத்தைப் பற்றி ஆய்வொன்றை மேற்கொண்டார்.1983இல்,அவரின் ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.இம்முறை, மே 13 1969 இனக்கலவரத்தை நூலாசிரியர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.மே 13 சம்பவத்தைப் பற்றி இதுவரை நமக்கு கூறப்பட்டு வந்த அனைத்துமே இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என்றே கூற வேண்டும்.மலேசியாவின் சரித்திரத்தில் மிக மோசமான இச்சமபவத்தைப் பற்றிய உண்மை தகவல்கள் இதுவரையில் மலேசியர்களுக்கு சொல்லப்படவில்லை. ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இதுவரை மே 13 சம்பவம் விவரிக்கப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் இந்த அதிகாரப்பூர்வ சரித்திரத்தை சாமன்ய மக்கள் மறுக்கும் நிலை இப்பொழுது தோன்றியுள்ளது.
மே 13 இனக்கலவரம் நடந்து முடிந்த பிறகு, அச்சம்பவத்தைப் பற்றி விவாதிப்பதற்குக் கூட மக்களிடையே ஒரு வித அச்சம் நிலவியது. இவ்வாறான அச்சத்தை முன்னிறுத்தியே மக்களை தமது பிடிக்குள் வைத்திருப்பதையே ஆளும் தரப்பு விரும்பியது.ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும்,ஆளும் கூட்டணியின் பெரும்பான்மை குறையக்கூடும் என்ற நிலை ஏறபடும் பொழுதும் “மே 13” என்ற பேய்க்கதை கட்டவிழ்த்து விடப்படும்.ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழக்குமானால், மீண்டும் ஒரு இன்க்கலவரம் வெடிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்படுத்தப்படும். இந்த அச்ச உணர்வை முன்வைத்துதான்,எதிர்கட்சிகள் பலமான கூட்டணியை அமைத்திருந்த 1990 பொதுத்தேர்தலிலும்,1999இல் மலாய்க்காரர் அல்லாதோரின் பொது உரிமையைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போதும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அரசு தனது வெற்றியை நிலை நிறுத்தியது.

மிக அண்மையில்,2006ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையும் இதற்கு விதிவிலக்கல்ல.மீண்டும் இன்வாதம் முன்னிறுத்தப்பட்ட காட்சிகள் இந்த அம்னோ பொதுப் பேரவையில் இடம்பெற்றன. அம்னோ இளைஞரணி தலைவர்,கிரிஸ் கத்தியை மேலே உயர்த்திக்காட்டி, அக்கத்திக்கு முத்தமிட்டார்.இச்செயலானது சமுக பொது உரிமைகளை பற்றிய கேள்விகளை எழுப்புபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என கூறப்பட்டது.அம்னோவின் ஆளுமையைப் பற்றி கேள்வி எழுப்பினால், மீண்டும் மே 13 நடக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படது.அதற்கு பிறகு பேசிய ஒவ்வொரு அம்னோ பேராளரும் இனவாதத்தை முன்னிறுத்தியும், மலாய்க்காரார் அல்லாதோருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும் பேசினர்.அவர்களின் உரைகளின் சாரம்சம் கீழ்வருமாறு :-

மலாக்கா பேராளர்,ஹஸ்னோர் சிடாங் உசேன் பேசுகையில்,
“இன உரிமையையும்,மதத்தையும் காக்க,அம்னோ உயிர்களை அடமானம் வைக்கவும்,இரத்ததில் குளிக்கவும் ஒரு போதும் தயங்காது!” என்றார்.

பெர்லிஸ் பேராளர் ஹஷிம் சூபோ பேசுகையில், “இஷாமுடின் உசேன் கிரிஸ் கத்தியை எடுத்து விட்டார்,உயர்த்தி விட்டார்,முத்தமிட்டு விட்டார்!எப்பொழுது அதை அவர் உபயோகிக்கப் போகிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்!” என்றார்.

தெரங்கானு அம்னோ இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர்,ரசாக் இட்ரீஸ் பேசுகையில், “மலாய்க்காரர்களின் ஆளுமையையும்,உரிமையைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்புக்கூடாது;அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், மலாய்க்காரர்கள் சினம் கொள்வர்;அப்படி சினம் கொள்கையில், கோலாலம்பூரில் மீண்டும் “மே 13” அரங்கேறும்!!” என்றார். (ஆதாரம் : மலேசியாக்கினி,22.11.2006)

- தொடரும் –

அடுத்த பாகத்தில் :

இன அரசியலும்,வர்க்கப் பிரிவினையும்

- இனக்கலவரத்தை தூண்டியது யார்?

- NEP இன் அறிமுகம்

- “ஹரோனும் அவர்களில் ஒருவர் – ஹரோன்,மகாதீர்,கசாலி ஷஃபி – இவர்களெல்லாம் இராசாக்கோடு சேர்ந்து என்னை வெளியேற்ற வேலை செய்தனர் – என் பதவியை அபகரிக்க.” - துங்கு

12.9.08

மீண்டும் ஓப்பராசி லாலாங் II??

மீண்டும் ஒரு ஓப்பராசி லாலாங் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.....24 மணி நேரத்துக்குள் 3 இசா கைதுகள்....

ராஜா பெட்ரா

பிரபல வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா,சின் சியு டேய்லி நிருபர்,செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரும்,கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும்,சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான தெரெசா கோக் ஆகியோர் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்


செபூத்தே எம்.பி தெரேசா கோக்

ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.


சின் சியூ நிருபர் தான் ஹூன் சேங்
ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.

அன்வார் தலைமையிலான மக்கள் கூட்டணி எவ்வேளையிலும் ஆட்சியை கைப்பற்றலாம் என்பதால்,மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி ஆட்சியில் நீடிக்க துடிக்கிறது,முட்டாள் தேசிய முன்னணி தலைமைத்துவம்.

21 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு,இப்பொழுது இருக்கும் நிலை வேறு என்பதை மறந்து இவர்கள் செயல்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடும் தேசிய முன்னணி,இனவாதத்தை ஆதரிக்கின்றது,இன மோதல்களை உருவாக்க அடி போடுகிறது என்ற கூற்று நிருபணமாகியுள்ளது.

அம்னோவின் தலை முதல் கால் வரை இனவாத விஷம் உள்ளது.
அந்த விஷத்தை பல வேலைகளில் அம்னோவின் தலைவர்கள் கக்கி வந்துள்ளதை நாம் அறிவோம்.இந்த விஷ கக்கல்களுக்கெல்லாம் ஆரம்பமாக அமைந்தது 1969 மே 13 இனக்கலவரம்.

சுவாராம் இயக்குனர் இருவர் எழுதியுள்ள மே 13 என்ற புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ள பல உணமைகள் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மே 13 இனக்கலவரத்துக்கு முழுக்காரணம் ராசாக் மற்றும் மாகதீர் போன்ற ராசாக் ஆதரவாளர்கள் என்பதை இப்புத்த்கம் விவரிக்கின்றது.
துங்குவை பதவியில் இருந்து விலக்குவதற்காக ராசாக & மகாதீர் கூட்டணி நடத்தியதுதான் மே 13 இரத்தக் கலவரம்.
துங்குவிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு அப்பாவி மக்களைக் கொன்றது அம்னோவின் இரண்டாம் தலைமுறை தலைமைத்துவம்.

அதன் பிறகு,கலவரத்தை காட்டியே மக்களை ஏமாற்றி வந்தது அம்னோ.

1987, அம்னோவிற்குள் மீண்டும் பதவி போராட்டம்......
துங்கு ராசாலி மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்.
மகாதீர், சீனர்களுக்கும்,மலாய்க்காரர்களுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி அப்பொழுது கடவிழ்த்து விட்டதுதான் ஒப்பராசி லாலாங்.

இப்பொழுது 2008 இல், அம்னோ தலைமைத்துவத்தை மட்டுமல்ல, நாட்டின் தலையெழுத்தே மாற்றப்படப்போவதை தடுப்பதற்காக அம்னோ ஏற்படுத்தப் பார்க்கும் பதற்றம்,இந்த இசா கைதுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சீனர்கள் இந்த நாட்டில் வெறும் குடியேறிகள் என்று சொல்லிவிட்டு அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காத அம்னோவின் டத்தோ அகமாட்டுக்கு வெறும் 3 ஆண்டுகள் அம்னோவிலிருந்து இடைநீக்கம்.

அந்த இனவெறியனின் இனவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பத்திரிக்கை நிருபருக்கு இசா சட்டம்.

என்ன நியாயம் இது??

சகோதர இனத்தை கீழ் தரமாக விமர்சிக்கும் ஒருவனுக்கு எந்த தண்டனையும் இல்லை.

அவனின் இனவாத முகத்திரையைக் கிழித்த நிருபருக்கு இசா சட்டம்.

உண்மைகளை அம்பலபடுத்தும் வலைப்பதிவாளருக்கு இசா சட்டம்.

அம்னோவின் அடக்குமுறைகளை எதிர்க்கும் எதிர்கட்சி தலைவர் ஒருவருக்கு இசா சட்டம்.

எங்கள் இனத்தின் உரிமையைக் கேட்டதற்காக எங்கள் உரிமைப் போராளிகளுக்கு இசா கைது.

இதுதான் அம்னோவின் தத்துவம்.

உண்மையை கூறுபவர்கள்,எழுதுபவர்கள்,அம்னோவின் அராஜாகத்தை எதிர்ப்பவர்கள்தான் தேசத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், அவர்களுக்கு கிடைப்பது விசாரணை இல்லா தடுப்புக்காவல்!!

இனவாதத்தை உதிர்ப்பவன்,கிரிஸ் கத்திக்கு முத்தமிடுபவன்,சகோதர இனத்தை அவமதிப்பவன்,இவர்களுக்கெல்லாம் பதவியும் பட்டமும்!!
அம்னோவின் அராஜகம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது....
இசா கைதுகள் மேலும் தொடரலாம்.....
மக்களின் உரிமைக்குரலவளையை நெறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அம்னோ மூடர்கள்.
அராஜகத்துக்கு அஞ்சாமல்,உரிமைக்காக இந்நாட்டின் மக்கள் வெகுண்டெழுந்து அம்னோவின் இனவாதத்தை விரட்டியடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
மக்கள் குரல் நிச்சயம் வெல்லும்!!!!

9.9.08

எப்பிங்காம் தமிழ்பள்ளி நிலம் விழுங்கப்பட்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது.....

எப்பிங்காம் தமிழ்பள்ளிக்கு தனியார் நிறுவனம் வழங்கிய நிலம்,சாமிவேலு பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதைக் காட்டும் பத்திரம்.
இதுவொரு புதிய செய்தி;ஆனாலும் அதிர்ர்ச்சியான செய்தியில்லை.....
கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்;ஆனாலும் சாமிவேலுவா கொக்கா,கழுவுற நீருல,நழுவுற மாதிரி தப்பிச்சிடுவான் மனுசன்.
தமிழ்பள்ளிகளுக்கெல்லாம் தாம்தான் காவலன் என்பதைப் போல் காட்டிக்கொள்ளும் தானைத்தலைவன் செய்திருக்கும் வேலையைப் பார்த்தீர்களா??
இன்னும் கொஞ்சம் ஏமாந்தால்,இந்த சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சுருட்டி விற்றுவிடுவார்கள் மஇகாகாரர்கள்.
அங்கு கடித்து,இங்கு கடித்து,தமிழ்பள்ளிகளைக் கடித்துள்ளார் சாமி.
இப்பொழுது புதிதாக எழுந்திருக்கும் கேள்வி.....
கூலிமில் உள்ள ஒரு தமிழ்பள்ளிக்கு கத்ரி இதற்கு முன்பு ஒதுக்கிய நிலம் என்ன ஆனது என்பதுதான்.
இந்த நிலம் சாமிவேலுவின் பெயரிலோ,டத்தோ சரவணன்(முன்னாள் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்) பெயரிலோ இரூந்தலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு,பினாங்கு மாநிலத்தில்,பத்துகவான் தமிழ்பள்ளிக்கு பினாங்கு மேம்பாட்டு நிறுவனம்(PDC) வழங்கிய 3 இலட்சம் வெள்ளி நன்கொடை, தேர்தல் முடிந்து பல மதங்களுக்கு பிறகே பள்ளியின் கட்டட மேம்பாட்டுக் குழுவிடம் வழங்கப்பட்டது.வழங்கியவர் முன்னாள் அட்சிக்குழு உறுப்பினர்.ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும்போது வழங்கப்பட்ட பணம், தேர்தலில் தோற்ற பிறகு வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை. இம்மூன்று இலட்சம் வெள்ளியானது தேர்தலின் போது குறிப்பிட்ட தலைவரின் தேர்தல் செலவுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேப்போல்தான் அசாட் தமிழ்பள்ளி விவகாரமும்.நிலமே ஒதுக்காமல் நிலத்தை ஒதுக்கி விட்டோம்,மான்யத்திற்கு காத்திருக்கிறோம் என்றெல்லாம் வசனம் பேசினார்கள். பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசமி அவர்கள் ம இகா தலைவர்கள் கூறுவது போல அசாட் தமிழ்பள்ளிக்கு எந்த நிலமும் முன்னாள் தேசிய முன்னணி அரசால் ஒதுக்கப்படவில்லையென்ற உண்மையை வெளிபடுத்தினார்,அதோடு மட்டுமல்லாமல் மஇகா-காரர்களின் தமிழ்பள்ளி நாடகத்தை அம்பளப்படுத்தினார்.அதோடு மட்டுமில்லாமல் சாமிவேலுவை தமிழ்பள்ளி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற ஒரு அழ்ந்த அறிக்கையையும் வெளியிட்டார்.
சாமிவேலுவும் அவரின் சகாக்களும் தமிழ்பள்ளியை வைத்து நடத்தும் நாடகங்களை ஒவ்வொன்றாக நமது மக்கள் கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவர்.
தொடர்ந்து காத்திருப்போம்,
இந்த திருடர்களின் திருட்டுக்களை மேலும் அறிய!!!