9.3.08

அழிந்தது ஆணவம்....வென்றது மக்கள் சக்தி!!

மலேசிய வரலாற்றில் 08-03-08,மறக்க முடியாத நாளாகும்!!
50 வருடங்களாக மலேசிய திருநாட்டை இனவாதம்,ஊழல்,அக்கிரமம் ஆகியவற்றால் கட்டிப்போட்டிருந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்டிய நாள்!!

மலேசிய சரித்திரத்தில் முதல் முறையாக 2/3 பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைய போகிறது.அம்னோ அராஜகத்தால் கொதித்து போயிருக்கும் மக்கள்,அம்னோவிற்கும் அதன் அடிமை கூட்டணி கட்சியினருக்கும் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.ஆட்சி தங்கள் வசம் இருப்பதால் எது வேண்டுமானலும் செய்யலாம் என்ற ஆணவத்தில் போது தேர்தலில் கூட பல ஊழல் அராஜங்களை புரிந்த போதிலும் மாபெரும் மக்கள் ஆதரவினால் எதிர்கட்சிகளின் கூட்டணியான 'மக்கள் கூட்டணி' 75 நாடாளுமன்ற இடங்களையும்,5 மாநில சட்டமன்றங்களையும் கைப்பற்றியுள்ளது.

தமிழர்களின் பேரெழுச்சி....

கடந்த 50 வருடங்களாக தேசிய முன்னணியின் அபார ஆதரவளர்களாக இருந்து வந்த மலேசியவாழ் இந்திய சமுதாயத்தினரின் எதிர்ப்பு பல நாடாளுமன்ற,சட்டமன்ற முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.இந்தியர்கள் அதிகமாக வாழும் 3 மாநிலங்கள் எதிர்கட்சியின் வசம் வந்திருப்பதே இதற்கு நல்ல சான்று.இந்தியர்கள் அதிகமாக வாழும் பேரா,பினாங்கு,சிலாங்கூர், ஆகிய 3 மாநிலங்கள் உட்பட 5 மாநிலங்களை வென்றுள்ள மக்கள் கூட்டணி கெடா மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி வாக்கு வேட்டையில் இறங்கிய மக்கள் முன்னணி தனது முயற்சியில் வெற்றியும் அடைந்துள்ளது.இந்தியர்களின் மனதை பெரும் வகையில் புண்படுத்திய தேசிய முன்னணியின் தலைவர்கள் பலர் இப்பொழுது அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.ஹிண்ட்ராஃப் அமைப்பின் மூலம் வெடித்த 'மக்கள் சக்தி' புரட்சி,இந்த தேர்தலில் 62 தொகுதிகளில் தனது பலத்தை நிருபித்துள்ளது.

BYE BYE மஇகா......
மலேசிய இந்தியர்களின் குரல் என்று பிதற்றிக்கொண்டிருந்த மஇகாகாரர்கள் எல்லாம் ஆளையே காணோம்.....
தானே இந்தியர்களின் தலைவன் என்று பிதற்றிய மாபெரும் அறிவாளி,தங்களை கைவிட்டால் இந்தியர்கள் மண்ணைத்தான் உண்ண வேண்டும் என்று பாடல் பாடிய மாண்புமிகு(நேற்றுவரை) ச.சாமிவேலு தனது சொந்த சுங்கை சிப்புட் தொகுதி மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ம இகா போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 3இல்தான் வெற்றி பெற்றுள்ளது.19 சட்டமன்ற தொகுதிகளில் 4-5தான்(தற்பொழுதைய நிலவரப்படி)
வென்றுள்ளது.சாமிவேலுவுக்கும்,மஇகாவுக்கும் மக்கள் சக்தி தந்த பரிசு,மலேசிய இந்தியர்களின் வாழ்வில் பொன்னான சரித்திர நாளாகும்.

-தொடரும்-

No comments: