Showing posts with label கருத்துக்களம். Show all posts
Showing posts with label கருத்துக்களம். Show all posts

8.5.09

இலங்கை விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடம்


மலேசியாவின் இரட்டை வேட அரசாங்கத்தின் தலைவர்!!

உலக அரங்கில் எங்கே மனித அவலங்கள் நடந்தாலும், உடனே அதற்கு எதிராக குரல் எழுப்ப மலேசியா அரசாங்கம் தயங்கியதில்லை. தென்னாப்பிரிக்காவில் அப்பர்தேய்ட் எனப்படும் இனவெறி தலைவிரித்தாடிய போது பொதுநலவாய(காமென்வெல்ட்) அமைப்பிலிருந்து தென்னப்பிரிக்காவை நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்ததே மலேசியா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். போஸ்னியா, கொசொவோ போன்ற பிராந்தியங்களில் இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மலேசிய அரசு மிகக்கடுமையாக அவற்றை கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பாலஸ்தீன விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேல் போய், இஸ்ரேல் நாட்டுடன் எந்தவொரு தூதரக உறவுகளும் இல்லை என்ற அளவுக்கு மலேசியாவின் வெளியுறவு கொள்கை மனிதாபிமானத்தை முன்னிறுத்தியுள்ளது. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதனி நேரடியாகவே மலேசியா எதிர்த்தது. அதேபோல், பாலஸ்தீனம், போஸ்னியா, கொசொவோ, பிலிப்பின்ஸ், லெபனான் என்று உலகில் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டிக்கிறது மலேசிய அரசாங்கம். ஐரோப்பிய் கண்டத்தில் உள்ள நாடுகளில் நடக்கும் படுகொலைகள் மலேசிய அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியும் போது, நமது ஆசிய கண்டத்திலேயே உள்ள ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலைகள் மட்டும் தெரியவில்லை. இது மலேசிய தமிழர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மனிதாபிமான விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றுகின்றது.

இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை கண்டும் காணாதது போல் இருக்கும் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை என்னவென்று சொல்வது??

அண்மையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற அவசரக்கூட்டத்தின் விவாதத்தில் கலந்துக்கொண்ட பினாங்கு மாநில துணை முதல்வர், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை நிறுத்துமாறு இலங்கை அரசையும் வற்புறுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த இராய்ஸ் யாத்தீம், இலங்கையில் நிலைமைகளை தாங்கள் உற்று கவனிப்பதாகவும், ஈழத்தமிழர்களின் மீது மலேசிய தமிழார்களின் கரிசணையை கருத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இராய்ஸ் யாத்திம் வெளியுறவு அமைச்சிலிருந்து விலகும் வரை அதைப்பற்றி பேசவேயில்லை. தமிழர்கள், இன்று கேட்பார்கள் நாளை மறந்து விடுவார்கள் என்ற நினைப்புப்போல!!

மலேசிய அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் மஇகாவோ, ஏதோ இவர்கள் மனு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பதைப்போல் மனுக்கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கூட கொடுத்தனர். அமைச்சரவையில் மலேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழும் வேலையில் அதனுடைய விடையும் நமக்கு தெரிந்தே உள்ளது. கடந்த காலங்களில் மலேசியாவில் உள்ள தமிழர்களின் நிலை பற்றியே இந்த "பிரதிநிதிகள்" என்ன செய்துக்கொண்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் மலேசிய அரசு கொலைவ்வெறியன் மகிந்தாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருக்குமா?? அடிக்கடி சிங்கள காடையர் அமைச்சர்கள் மலேசியாவிற்கு வந்து புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பதாகக் கூறுவார்களா?? ம இகா மலேசியத்தமிழர்களுக்கு மட்டும் தீங்கிழைக்கவ்வில்லை, ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலைகளை நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி கண்டித்த மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை ஒப்புக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலஸ்தீனர்களின் துன்பத்தை புரிந்து ௧0 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மலேசிய அரசு, ஈழத்தில் பட்டினியால் சாகும் எம் தமிழர்களை நினைத்துக்கூட பார்க்கவில்லை. (பினாங்கு மாநில அரசு மட்டுமே, 15000 ரிங்கிட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு இன்னும் அதிகமாக தர விரும்பிய போதும், சட்ட சிக்கல் காராணமாகவே அதிக பட்சமாக 15000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
இதுவெல்லாம் மலேசிய அரசாங்கம், மனிதாபிமான விடயத்தில் இரட்டை வேடம் ஆடுவதை புலப்படுத்துகிறது.

கொசொவோவில் செத்தால் அவன் மனிதன்; போஸ்னியாவில் செத்தால் அவன் மனிதன், பாலஸ்தீனத்தில் செத்தாலும் மனிதன்; ஈழத்தில் சாவுபவன் மட்டும் மாடா?? கொசொவோ,போஸ்னியா,பாலஸ்தீனத்தில் துன்பப்பாடுவோரோடு மத அடிப்படையிலான தொடர்பு உள்ளதனால்தானே, மலேசியாவிற்கு அவர்களின் மீது அவ்வளவு அக்கறை??!! மலேசியாவில் வாழும தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களோடு இரத்த உறவே உள்ளதே, அதை புரிந்துக்கொள்ள இந்த முட்டாள் அரசாங்கத்தால் முடியவில்லையா?? அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முட்டாள் மலேசிய இந்திய காங்கிரஸ்காரனால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா??

காங்கிரஸ்க்காரன் எங்கிருந்தாலும் அவனை செருப்பால் அடிக்க வேண்டும்; அது இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், அல்லது மலேசிய இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், பொத்தம் பொதுவாக காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரித்தான்!!

இரட்டை வேடம் போடும் மலேசிய அரசே, உடனடியாக இலங்கை அரசாங்கத்தை போரை நிறுத்த வற்புறுத்து. மலேசிய வெளியுறவுத்துறையின் துணையமைச்சராக இருக்கும் தமிழனே, உனது சீன முதலாளிகளை திருப்தி படுத்துவதில் மட்டும் குறியாக இருக்காதே. உன்னைப்போல் ஒரு தமிழன்தான் அங்கு ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கிறான், முடிந்தால் அவனுக்கு உதவப்பார்!! எதற்கும் உருப்படாத சாதியைப் பிடித்துக்கொண்டு ஆடாதே!!!

தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா??

தமிழனின் உயிர் அவ்வளவு மலிவா??

தமிழனின் கோபம் தெரியுமா?? அவன் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா??
கடந்த மார்ச்8 தேர்தல் நினைவில் உள்ளதுதானே??

எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; எங்கள் ஈழத்தமிழர்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்!!

5.1.09

கணைகள் வீசும் பெண்......

ஈழத்தமிழர் தினம் இனவெறி போரால் படும் இன்னல்களை இங்குள்ள தமிழர் அறியாமல், தினமொரு கனவில் திளைத்திருப்பதை கண்டு பலமுறை எனது நெஞ்சம் வெம்பியிருக்கின்றது. அதிலும் பண்பாட்டை காக்க வேண்டிய பெண்களை பற்றிதான் எனக்கு மிக அதிகக்கவலை எனலாம்.

அங்கே ஆயுதம் கையிலெடுத்து போராடும் எமது பெண் புலிகளையும், இங்கே குடி,கும்மாளம் என பொழுதை கழிக்கும் ஒரு சில தமிழ் பெண்களையும் ஒப்பிட்டு பார்த்து பல முறை வருந்தியிருக்கிறேன்.

பண்பாடு, பாரம்பரியம் என்று இன்றும் நமது பெண்கள் பலர் வாழ்கிறார்கள் என்பதிலும் ஓரளவு திருப்தி. நமது தமிழ் பெண்களின் அபரீத வளர்ச்சி, சிந்தனை முதிர்ச்சியைக் கண்டு பெரிதும் உவகைக் கொண்டதெல்லாம் உண்டு.

பாரதி கண்ட புதுமைப்பெண் வெறும் கனவு அல்ல, இன்று நிரந்தர நிஜமாகியுள்ளது. அதிலும், பாரதியின் புதுமைப்பெண் என்று கூறிக்கொண்டு, தவறான பாதையில் செல்லும் சிலரும் உண்டு. அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம்.

பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற காலக்கட்டத்தை கடந்து, இன்று பிரபாகரன் கண்ட புலிப்பெண் என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தில் மட்டும்தான் "பிரபாகரன் கண்ட புலிப்பெண்கள்" இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, எனது அருமை அக்காவின் மூலம் அறிமுகமானவள் இந்த கணைகள் வீசும் பெண். எனது தமக்கையின் வழி அறிமுகமான ஒரு பெண் வலைப்பதிவரைப் பற்றிதான் மேற்கூறிய நீண்ட நெடிய விளக்கம்.

கணைகள்.... என்ற வலைப்பதிவை காண நேரிட்டப்பொழுது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன்னை
அடைத்துக்கொள்ளாமல், இலக்கியம், அரசியல், தகவல் பரிமாற்றம் என்று புகுந்து விளையாடும் இந்த பதிவரின் ஈழத்தைப் பற்றிய கவிதைகள், உரைவீச்சுகள்தான் எனது ஆச்சரியத்திற்கு காரணம். நமது தாய் திருநாட்டில் ஈழப்போராட்டத்தை அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உரிமையைக் கேட்டு போராடும் எமது தமிழ் புலிகளை மானசீகமாக ஆதரிக்கும் இந்த பெண் பதிவரைக் கண்டதில் உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

போர்... என்றாலே "நாங்கள் அதை வெறுக்கிறோம்" எனும் பெண்களுக்கு மத்தியில், தேவியில்லாப் போரையும் உரிமைப்போரையும் வித்தியாசப்படுத்தத் தெரிந்தவர் இந்த பதிவர் என்பதுதான் சிறப்பு.
இவரின் படைப்பில் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பிட்ட பதிவு பின்வருமாறு...

"இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!"

"என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!"


"நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!"

இதே கோபத்தோடுதான் ஈழ்த்தில் எமது பெண்கள் கைகளில் ஆயுதம் ஏந்துகின்றார்கள். இந்த பெண் கையில் கணினியின் தட்டச்சு கிடைத்து விட்டது. கோபம் கொப்பளித்தாலும், அது நியாயமான கோபம் என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து கிடையாது.

இந்த கோபமெல்லாம் இதேப்போல் படைப்புகளாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. இந்த பெண் வலைப்பதிவரின் படைப்புகளை கவனிக்க கீழ்காணும், இணைய முகவரியை சுட்டுங்கள் :-



கணைகள் என்ற வலைப்பதிவில் வெறும் பூவிலான கணைகளை மட்டும் வீசாமல், அடிக்கடி இதுபோன்ற ஏவுகணைகளையும் வீச வேண்டும் என்பது எனது ஆவல்.
வலைப்பதிவர் நண்பர்கள், இந்த் பிரபாகரன் கண்ட புலிப்பெண்ணின் கணைகளை தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமென்றும் முன்மொழிகிறேன்.

27.11.08

தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்......


உலக தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் மிகவும் கவலையாக உற்று நோக்கப்படும் விடயம் எதுவெனில், ஸ்ரீ லங்கா படைகள் கிளிநோச்சியை வசப்படுத்தி விடுமா என்பதுதான்.தமிழன் என்றாலே அடிதான் வாங்குவான் என்று உலகமே நினைத்து நம்மை ஏளனப்படுத்திய போது, தமிழனுக்கு அடிக்கவும் தெரியும் என்று காட்டியது ஈழத்தமிழன்தான்.தங்கள் மீது திணிக்கப்பட்ட இனவெறி போக்கை, கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்காரவாதத்தை அகிம்சை முறையில் எதிர்த்து துவண்டு போன தமிழன்தான் ஈழத்தமிழன்.

துவண்டு போனவன் விழுந்து போய் விடவில்லை; எழுந்து நின்றான்!!

மாவீரர்கள்........

சிங்கள பேரினவாதத்தை ஆயுதமேந்தி எதிர்க்க துணிந்து, தமது இன்னுயிர்களை சுதந்திர வேட்கைக்காக துறந்த எமது மாவிரர்களை இவ்வேளையில் நினைத்து பார்க்கிறேன். காதல் தோல்வியில் உயிரை வெறுத்து, உயிர்விடும் ஜென்மங்களுக்கு மத்தியில், தாயக மண்ணின் சுதந்திரத்திற்காக,தனது நாளைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று வேட்கையோடு உயிரை தியாகம் செய்யும் இவர்கள் மாவீரர்கள் மட்டுமல்ல,மாமனிதர்களும் கூட. ஈழத்தின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை நீத்த ஒவ்வொரு தமிழ் மறவனும் அந்த புண்ணிய பூமியில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்!! அந்த விதையிலிருந்த தோன்றப்போகும் விருட்சங்கள்,சிங்கள் பேரினவாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!

பெண் புலிகள்......

எமது பண்டைய மறத்தமிழச்சிகள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர் என்று தமிழர்கள் எப்பொழுதும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. பண்டைய தமிழச்சிகளை நாம் பார்த்தது கிடையாது, ஆனால் கண்டிப்பாக அவ்வாறுதான் எமது பண்டைய தமிழ் பெண்கள் இருந்திருப்பார்கள் என்பதை இன்றைய தமிழ் மறவத்திகளைப் பார்க்கும் போது திண்ணமாகிறது. இன்றைய தமிழ் பெண்கள் புலியை முறத்தால் விரட்டவில்லை; தாங்களே புலியாகி,எதிரியை கொன்றொழிக்கின்றனர்.

எமது ஈழத்தமிழ் பெண்ணினம்,சிங்கள அரசின் பேரினவாத பிடியில் சிக்கி, தங்கள் உயிரை விட மேன்மையானதாக போற்றிக் காக்கும் கற்பைக் காப்பாற்ற கையில் எடுத்தது முறத்தையல்ல,நெருப்பைக் கக்கும் AK 47-ஐ.

நமது பண்பாட்டை ஆட்டம் 100 வகை, 200 வகை என்று சீரழிக்கும் பெண்களுக்கு மத்தியில்,சனிக்கிழமை வந்தால்,போதையிலும் கும்மாளத்திலும் கூடிக்கழிக்கும் பெண்களுக்கு மத்தியில், பண்பாட்டை காக்கும் தமிழச்சிகளையும், தாய்மண்ணின் சுதந்திரம் காக்க கையில் ஆயுதம் எந்திய புலிப்பெண்களையும் பார்க்கையில் எமது தமிழினத்தின் பண்பாடும்,மரபும் அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்து விடாது என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

தமிழினத்தலைவன்........

உலகத்தில் உள்ள தமிழருக்கெல்லாம், யார்தான் தலைவர் ??இராசேந்திர சோழனுக்குப் பிறகு அந்த தனித்தன்மை மிகுந்த தமிழன் ஒருவன் இருக்கிறானென்றால், அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
ஒரு சாரார்,கலைஞரை உலகத் தமிழரின் தலைவர் என்று கூறினாலும், அதில் எமக்கு உடன்பாடில்லை. பக்கம் இருக்கும் தேசத்தில் தமிழரை இன அழிப்பிலிருந்து காப்பற்ற முடியாமல்,அரசியல் காரணங்களுக்காக சூழ்நிலை கைதியாகிக் கிடக்கும் கலைஞரை நினைத்து உலகத்தின் எந்த மூலையில் உள்ள தமிழனும் பொறுமுவானே தவிர, பெருமைக் கொள்ள மாட்டான்.

தமிழர் என்றால் அடிமைகள் என்றும் ஏமாளிகள் என்றும் வெள்ளையன் குறித்து விட்டு சென்றுள்ள கூற்றை,உலகில் வாழும் தமிழர்களெல்லாம் நிருபித்து,சாசனம் எழுதிக்கொடுக்காமல் பல விஷயங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் அடிமை விலங்கை உடைத்து, தன்மானத்தை காக்க, வந்த தமிழர் தலைவன் பிரபாகரன் மட்டுமே. தமிழன் எங்கு போனாலும் அடிதான் வாங்கினான், திரும்பக்கொடுத்தது தமிழீழத்தில் மட்டும்தான்.

இராசேந்திரன் காலத்தில்,முப்படைகளை திரட்டி கம்போஜம் வரை வெற்றிக் கொண்டான் என பெருமை மட்டும்தான் நமக்கு மிஞ்சும் என்றிருந்த வேளையில், தரைப்படை,கடற்படை,வான்பாடை என்று நவீன வளர்ச்சியின் தேவைக்கேற்ப முப்படைகள் கண்டு தமிழரின் பெருமையை நிலைநிறுத்தியது பிரபாகரன்தான். அந்த இராசேந்திரன் கொண்டு சென்றது புலிக்கொடிதான் ; இன்றைய தமிழீழ இராச்சியத்தின் சின்னமும் புலிக்கொடிதான்.

வேட்கை விடுவதில்லை.........

பூநகரியை பிடித்து விட்டோம், கிளிநோச்சியை நெருங்கி விட்டோம், புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள் படைகளின் ஆணவத்திற்கு என்றுமே தாம் அடிபணிய போவதில்லை என்பதை 2008 மாவீரர் உரையில் தலைவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். வலிந்து திணிக்கப்பட்ட போரை, துணிந்து எதிர்த்து, வெல்வதற்கு தயாராக உள்ளனர் தமிழ் புலிகள். மிகச்சிறந்த போர் வல்லுனரான பிரபாகரனின் ராணுவ நகர்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சிங்கள் இராணுவம் தவிக்கப்போகும் காலம்,மிக அண்மையில் என்று நமது உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளதை நானும் பிரதிபலிக்கிறேன்.

சுதந்திர ஈழம் மலரும்..........

தமிழீழ சுதந்திரத்தை முன்னிறுத்தி நடைபெறும் உரிமைப்போரில்,தமிழர் கரம் வலுப்பெறப்போகும் நாள் வெகு தூரமில்லை.

அந்நாளை எதிர்கொள்ள உலகத் தமிழர் அனைவரும் கட்சி,மத,சாதி வேறுபாடுகளை மறந்து, சுதந்திர தமிழீழத்தை உலக நாடுகள் அங்கிகரிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் எழுப்பிடல் வேண்டும்.

கண்டனக்கூட்டத்திற்கு கூப்பிட்டால் மறுத்தளித்து விட்டு,ஈழத்தமிழர் ஆதரவு பேரணி என்ற பெயரில் கட்சி கோசங்கள் போன்ற கேவலமான அரசியலெல்லாம் இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் வேண்டாமென்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

தந்தை செல்வாவின் ஜனநாயக போரட்டத்தில் தொடங்கி, தியாகி திலிபனின் மறைவில் கொழுந்து விட்டெறிந்து, மாவிரர்களின் ஈகத்தால் தொடர்ந்தும் அணையாமல் எறிந்து கொண்டிருக்கும் சுதந்திர தீ, சிங்கள பேரினவாதத்தை எரித்து விடும் நாள் தூரம் இல்லை.

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........

14.8.08

தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?!

தமிழர் சரித்திரம்,வழி நெடுகிலும் பற்பல சிறந்த வீரதீரங்களையும், சாதனைகளையும் கண்டது.தமிழரின் சரித்திரம் தலைச்சிறந்த சரித்திர நாயகர்களை தன்னகத்தேக் கொண்டது.அவர்களுள்,மாமல்லன் என அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன்,இராஜராஜன் எனப்பட்ட அருள்மொழிவர்மன்,அவரின் புதல்வன் இராஜேந்திர சோழன்,ஆகியோர் தமிழக வராலாற்றில் மட்டுமின்றி தமிழரின் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்கள். அதிலும் இராஜேந்திர சோழன் கடாரம்,கம்பூச்சியம்,சாவகம் என் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் புலிக்கொடியை பறக்கவிட்டு,தமிழர் புகழ் உலக வரலாற்றிலும் நிலைத்து நிற்க செய்தவர்.இதையெல்லாம் அறியும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தலைத்தூக்கும்ம்.அதே வேளையில், இராஜராஜ சோழனை பற்றியோ,இராஜேந்திர சோழனை பற்றியோ, மாமல்லனைப் பற்றியோ பேசும்பொழுது,யார் அவர்கள் என்று ஒரு தமிழன் கேட்டால்,என்னவென்று சொல்வது??

ஆனால்,அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.

இன்றுள்ள நாம்,கல்கியின் பார்த்திபன் கனவையோ,பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம்.ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ,பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால்,கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர,பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள்.இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்??
ஒவ்வொரு தமிழனுக்கும்,தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

எனது பாட்டன்,பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான்.மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து,தமிழினத்தின் பூர்வீகம்,அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான்.சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.


இந்தோனேசியா,ஜாவாவில் அமைந்துள்ள பிரம்பனன் ஆலய தொகுதி

500-600 வருட சரித்திர பின்னணியைக் கொண்ட மலாய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் நமது மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு மேல்நிலைப் பள்ளி வரையில் பயில்கின்றனர். மாற்றாரின் குறுகிய சரித்திரத்தை பயிலும் நம் தமிழன்,நமது நெடுநீண்ட சரித்திரத்தை பயிலாமல் மறக்க விட்டது,கல்வியமைச்சில் தமிழ் பாடப்பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் நமது இன அதிகாரிகளின் தவறா??
தமிழன் சரித்திரம் படித்தால் தலை நிமிர்ந்து விடுவான், தலை நிமிர்ந்தால் நமது பதவிக்கு ஆப்பு வந்துவிடும் என்று கண்டும் காணாமல் விட்ட சமுதாயத்தின் அரசியல் தலைவர்களின் தவறா??
தமிழ் சரித்திரம் கொண்டே தமிழரை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்று உணராமல் விட்டுவிட்ட தமிழ் வழி இயக்கங்களின் தவறா??
யார் தவறு??

நாளை தலையெடுக்கப்போகும் நம் தமிழன்,சரித்திரம் தெரிந்த, தனித்தன்மையுடைய தமிழனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா.
அவ்வாறு ஒரு சரித்திரம் தெரிந்த தமிழினத்தை எப்படி உருவாக்குவது??என்பதுதான் தற்போது நம்மிடம் நிலவும் கேள்வி,இந்த கேள்விக்கு ஒரே பதில்;தமிழ் பள்ளிகளின் மூலம் என்பதுதான்.

தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் வரலாறும் ஒரு பாடமாக கற்றுகொடுக்கப் பட வேண்டும்.இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் தமிழரின் வரலாறு புரியும் வண்ணம் தமிழ் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும்.உதாரணத்திற்கு,அறிஞர் மு.வ-வின் பாவை விளக்கு நவீனம் தற்பொழுது எஸ்.டி.பி.எம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. அறிஞர் மு.வ-வின் சமுதாய கருத்துகள் மாணவர்களுக்கு தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.ஆனால், அதே வேளையில் இன அடையாளம் அழியாமல் இருக்க வேண்டுமெனில், சரித்திரமும் முக்கியமல்லவா? ஆகவே,கல்கியின் பொன்னியின் செல்வனையோ, பார்த்திபன் கனவையோ,சிவகாமி சபதத்தையோ அல்லது மற்ற தமிழ் சரித்திர அற்ஞர்களின் நவீனத்தையோ புதிதாக பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

இடைநிலை,மேல்நிலை கல்வியை விட அடிப்படைக்கல்வியான ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் சரித்திரம் சேர்க்கப்பட்டால்தான்,மிக சிறப்பாக அமையும்.

"தமிழ்ப்பள்ளியில் தமிழர் சரித்திரம்"
சாத்தியமா??
எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது??
யார் பொறுப்பேற்பது??

அடுத்த பதிவில் அலசலாம்.

- தொடரும் -


*பின்குறிப்பு :
நண்பர்களே,தமிழ் பள்ளியில் தமிழர் சரித்திரம் போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

6.7.08

இரங்கராஜன் நம்பி.......ஓர் உரிமைப்போராளி!!


எனது உரிமைப்போர் வலைப்பதிவில் பொதுவாக நான் சினிமாவைப் பற்றி எழுதுவதில்லை!!

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அங்கமாக பார்ப்பவன் நான்;ரசனையின் உச்சநிலையை அடைவதின் மூலமே,ஒரு திரைப்படத்தை விமர்சிக்கமுடியும் என்பது எனது கருத்து.

மிக அண்மையில் நான் ரசித்த தமிழ் திரைப்படம், தசாவதாரம்.

வைணவக்கொள்கைகளை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்னைப்போன்றவர்களையும் வைணவத்தலைப்புடைய இப்படம் ஈர்த்து விட்டிருந்தது என்பதுதான் உண்மை.

கலைஞானி என்ற அடைமொழி தனக்கு சாலப்பொறுந்தும் என்பதை கமல் மீண்டும் நிருபித்துள்ளார்.தமிழ் திரைப்படத்துறையை உலக அளவுக்கு கொண்டுசென்றுள்ளார் கமல்.பத்து வேடங்களில்,பத்து வித்தியாசமான பரிணாமங்களை திரையில் காட்டியிருக்கிறார்.

உரிமைப்போர் என்ற இந்த வலைப்பதிவில் நான் சம்பந்தமில்லாமல் சினிமாவை இழுக்கவில்லை!!

தமிழ் திரையுலகை உலக் பரிணாமத்திற்குக் கொண்டுச்சென்ற உலகநாயகன், தசாவதாரத்தில் எடுத்திருக்கும் பத்து அவதாரங்களில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமானது,முதன்முதலில் தோன்றும் இரங்கராஜ நம்பியின் கதாபாத்திரம்தான்.

தனதுரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவன் இந்த இரங்கராஜ நம்பி!!

சிதம்பரத்தில் இருந்து கோவிந்தராஜ பெருமாளின் மூலவர் சிலையை பெயர்த்தெடுக்க ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.தன் உயிரினும் மேலாக தாம் நேசிக்கும் இறைவனை யாரும் நெருங்காமல் தடுக்கிறான் இரங்கராஜ நம்பி.

"சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம்,கர்வம் தவிர்க்க சொல்" என்று மன்னனின் மதவெறியையும்,சைவ கர்வத்தையும் இடித்துரைக்கிறான். படைகளை வரதராஜ பெருமாளின் சன்னிதானத்திற்குள் ஏவி இரங்கராஜ நம்பியை கைது செய்கிறான் மன்னன்.வரதராஜ பெருமாளின் சிலயையும் பெயர்த்தெடுக்கிறான் மன்னன்!!இறுதிவரை அதை எதிர்த்து போராடி தோற்றும் போகிறான் இரங்கராஜ நம்பி.

கட்டுண்டு கிடக்கும் நம்பிக்கு மன்னன் இறுதி வாய்ப்பொன்றும் அளிக்கிறான். ஓம் நமசிவாய என்று கூறி உனது பாவங்களை போக்கிக்கொள் என்று உயிர்பிச்சையிடுகிறான்.தன் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைவனை,கண்ணீர் ததும்ப தொட்டு கும்பிட்டு;

"ஓம் நமோ நாரயணா"

என்று கதறுகிறான் இரங்கராஜ நம்பி!! வைணவர்களை அடக்கி ஒடுக்க நினைத்த மன்னனுக்கு சவால் விடும் நம்பியையும்,அவனுயிர் வரதராஜ பெருமானையும் கடலில் இறக்கிவிட ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்கன்.தில்லையிலிருந்து சமுத்திரம் வரையிலும் நம்பியை சிதையிலிட்டு இழுத்து வருகிறார்கள்.நம்பி அப்பொழுது உதிர்க்கும் சொற்கள்...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது!!

இல்லை என்று சொன்ன பின்பும்-இன்றி அமையாது!!

தொல்லை தந்தபோதும் எங்கள்-தில்லை மாறாது!!
வீர சைவர்கள் முன்னாள்-எங்கள் வீர வைணவம் தோற்காது!!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்,மேற்கில் சூரியன் உதிக்காது!!
ராஜலஷ்மி நாயகன் சீனிவாசன்தான்;
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்!!
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ,ராஜர்தான்;
ராஜனுக்கே ராஜன் எங்கள் ரங்கராஜன்தான்!!

என்று தில்லையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட வரதராஜனை கிஞ்சித்தும் விட்டுக்கொடுக்காமல் கதறுகிறான் நம்பி!! தொடர்ந்து.......
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது!!
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது!!
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்;
வெண்ணிலாவை அது அனைத்திடுமா?!
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்;
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா?!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது;
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது!!!

என்றுமே தாம் கொண்ட கொள்கை மாறாது என்று மன்னனுக்கு இடித்துரைக்கிறான்.மேலும் உன்னால் இந்த சிலையைத்தான் பெயர்க்க முடியும் எங்கள் நெஞ்சுக்குள் வாழும் எங்கள் தெய்வத்தை அல்ல என்பதையும் கூறுகிறான் நம்பி!! "அரியும்,சிவமும் ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு" என்பதை போல்,தெய்வத்திற்கு சமயம் தெரியாது என்பதையும் இடித்துரைக்கிறான்.

இறுதியில் தனதுயிரும் மேலான வரதராஜனோடு கடலில் கலக்கிறான் நம்பி!!

இந்த நம்பியை நான் உரிமைப்போராளியாகத்தான் பார்க்கிறேன்.
தனதுரிமையை என்றுமே இழக்க விரும்பாத ஒருவன்!!
தனது ஆசாபாசங்களை கொண்ட கொள்கைக்காக விட்டுக்கொடுப்பவன்!!
உயிரே போனாலும்,மாற்றுக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவன்!!

இந்த நம்பியின் படைப்பு வெறும் கற்பனை என்று சிலர் சொல்கிறார்கள்;ஒரு முருகன் பாடல் நினவுக்கு வருகிறது,
"கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்,கந்தனே உனை மறவேன்"

எனது ஆய்வுகளின்படி நம்பி,உண்மை சரித்திர பாத்திரம்!!
கமலை பிடிக்காத சிலர்,சரித்திரத்தை மற்றிக் கூறுகிறார்கள்!!(இந்த விடயத்தில் யாரோடும் நான் விவாதத்துக்கு தயார்)

நம்பியை ஒரு வைணவன் என்று மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை!!

வைணவ சமயத்தை ஆரிய திணிப்பு என்று இதுவரை ஏற்றுக்கொள்ளாத என்னைப்போன்றோர் பலரும்,நம்பிக்கு நடந்த சம்பவம்,சைவ மன்னனின் தவறான அணுகுமுறையென்றே கூறுவர் என்று நம்புகிறேன்.

மன்னனின் தவறான சமய அனுகுமுறையே சோழப்பேரரசை மூழ்கடித்திருக்கும் என்பது எனது கருத்து!!
சோழக்குலத்தோன்றல்கள் யாரும் செய்யத்துணியாத கொடிய செயலை இரண்டாம் குலோத்துங்கன் செய்துள்ளான்!!

சோழர்கள்,இயல்பில் சைவ மத சார்புடையவர்கள் என்ற போதிலும்,ஒரு போதும் வைணவத்திற்கு எதிராக அவர்கள் நடந்தது இல்லை என்றே கூற வேண்டும்.பல சமய மக்களையும் சரிசமமாக ஆண்டவர்கள் சோழர்கள்.சைவத்திருத்தலங்களுக்கும்,வைணவத்திருத்தலங்களுக்கும்,புத்த விகாரங்களுக்கும் சரிசமமாக திருப்பணிகள் செய்துள்ளதை சோழ வரலாறு நெடுகிலும் காணலாம்.சோழர்களின் சமயசார்பற்ற ஆட்சியை குறிப்பிட்டு சொல்வதற்கு உதாரணமாக வீராணம் ஏரியைக் கூறலாம்.ஆரம்பக்காலத்தில் இவ்வேரியை வெட்டிய சோழன்,ஏரியை சுற்றி 108 விஷ்ணு ஆலயங்களை எழுப்பியதாக படித்த நினைவு.இவ்வேரியின் இயற்பெயரே "வீர நாரயண ஏரி" என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான குடும்ப பின்னணியைக் கொண்ட இரண்டாம் குலோத்தூங்கன் செய்த கொடிய காரியம் சோழ ஆட்சியில் ஓர் இருண்ட பாகம் என்றே நான் கருதுகிறேன்.

சமய அநீதியை எதிர்த்து போராடும் எந்த போராளியின் போராட்டமும் தோற்றதில்லை எனலாம்.மன்னனின் அராஜகத்தை எதிர்த்து போராடிய இரங்கராஜ நம்பி இறந்துதான் போனான்.ஆனால்,அவன் போராட்டத்தின் வழி தெய்வம் கண் திறந்ததோ என்னவோ,கொடுங்கோல் குலோத்தூங்கனுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் சரிந்தது.

இந்த நம்பியின் சரித்திரம் போல்தான் நம் கண் முன்னே இப்பொழுது நிகழ்வதும்.

எங்கள் ஆலயங்களை உடைத்தான்.......
எங்கள் தெய்வ விக்கிரகங்களை சிதைத்தான்........
தட்டிக்கேட்ட எங்கள் மக்களை இரத்தம் சொட்ட உதைத்தான்........
நியாயம் கேட்டோரை சிறையில் அடைத்தான்......

முடிவு.....

இறைவன் கற்பித்தான் பாடம்!!

6 மாநிலங்களை இழந்தான்,நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழந்தான்.

அரசாங்கத்தின் அராஜகத்துக்கு தெய்வம் க்ற்ப்பித்த பாடம்!!

இது தொடக்கம்தான்.....

அரசன் அன்று கொள்வான்,தெய்வம் நின்று கொள்ளும்!!!

இரங்கராஜ நம்பி கொலை சம்பவத்திற்கு பிறகு,ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் தனது முழு கீர்த்தியையும் இழந்தது!!

இங்கே 100 ஆண்டுகள் எல்லாம் ஆகாது;இன்னும் 1 மாதமோ,2 மாதமோ!!

எனது பார்வையில்......

இரங்கராஜ நம்பி,
உரிமைப்போராளிகளுக்கு முன்னோடி!!!