Showing posts with label தேர்தல் களம். Show all posts
Showing posts with label தேர்தல் களம். Show all posts

12.2.08

நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது....

ஆகக்கடைசியாக எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி,சில நிமிடங்களுக்கு முன்பு,மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!


சற்று நேரத்திற்கு முன்பு,மாண்புமிகு பிரதமர் அவர்கள் தனது விருப்ப எண்ணான 13 என்ற எண்ணைக் கொண்ட மெர்சடிஸ் பேன்ஸில் மாமன்னரின் அரண்மனைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுதேர்தலின் போதும் பிரதமர் இதே காரில்தான் அரண்மனைக்கு வந்தார் என்பதும்,பிறகு நாடளுமன்றத்தை கலைத்தார் என்பதும்


நேற்று வரையில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று கூறிவந்த பிரதமர் இன்று நாடாளுமன்றத்தை கலைத்தார்.இந்த சாதரண இந்த விவகாரத்தில் கூட தனது வாக்குறுதியை காப்பற்ற முடியாத இவரின் தேர்தல் வாக்குறுதிகளையா நம்புவது??

பிரதமர் தனது ஆளும் தேசிய முன்னணி கூட்டணி,வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பன்மையை பெறும் என்று நம்பிக்கக தெரிவித்தார்.

சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.சீனர்களின் நாள்காட்டியில் இன்று ஏழாவது நாளகும்,நாளை மறுநாள் ஒன்பதாவது நாளில் சீனர்களின் மிக முக்கிய கொண்டாட்டம் வரும் வேளையில்,பிரதமரின் இந்த செயலானது மற்ற இனத்தினரின் உரிமைகளையும்,கலாச்சரத்தையும் மதிக்காத செயலாகும்.ஏற்கனவே,தீபாவளியின் போது அம்னோ மாநாட்டை நடத்திவிட்டு,இந்திய பத்திரிக்கை விநியோகஸ்தர்களை சாடிய,இனவாத அம்னோ அரசிடமிருந்து வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்.

மக்கள் விழித்துக்கொண்டால் சரி,

இனவாதத்தை வெறுப்போம்,சம உரிமையை மீட்போம்!!

மக்கள் குரல் ஒங்குக,மக்கள் சக்தி வெல்லும்!!