24.2.08

பாரிசான்

எதற்கு பாரிசான்??

இன்று நாம் எதிர்நோக்கும் லிஃப்ட் பிரச்சனை ஒன்று மட்டும் தீர்த்தால் போதுமா??
உடனே இவர்களுக்கு ஓட்டு போட்டு விடலாமா??
நாம் இந்த வீடுகளுக்கு வந்து 8 வருடங்கள் ஆகிறது,அப்போதெல்லாம் தீர்க்காத இந்த பிரச்சனையை இந்த ஓரிரு மாதங்களில் தீர்த்து விடுவார்களா??

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் இயங்கும்,தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு இயங்கும் அவ்வளவுதான்.பிறகு,நீங்கள் மறுபடியும் படிதான் ஏறி இறங்க வேண்டும்.இந்த 1 மாதத்திற்காக,5 வருடங்களை வீணடிக்காதீர்கள்!!

இவர்கள் சொன்னது(பாரிசான்/மஇகா) எதையுமே இதுவரை செய்ததில்லை,இனிமேல் செய்யப்போவதுமில்லை!!

நம்பி,நம்பி ஏமாந்தது போதும்!!
மீண்டும் ஒருமுறை இவர்களை நம்பி ஓட்டு போட்டு விட்டு,புலம்பி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இவர்கள் நமக்கு செய்த துரோகங்களுக்கு இந்த முறை பாடம் கற்பிப்போம்!!
வேண்டாம் பாரிசான்!!!

23.2.08

L.கிருஷ்ணன்

வேண்டாம் பாரிசான்......

யார் இந்த L.கிருஷ்ணன்.....
எங்கிருந்து வந்தார்.......

மீடாஸ்(MIDAS) என்ற தனியார் கல்லூரி ஒன்று பட்டவொர்த் பகுதியில் இயங்கி வந்ததை நீங்கள் அறிவீர்கள்.அந்த மீடாஸ் கல்லூரியின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவர்தான் இந்த கிருஷ்ணன்.
மீடாஸ் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் பெரும்பாலானோர் நமது இந்திய மாணவர்கள் ஆவர்.நடுத்தர,ஏழை இந்திய மாணவர்களே இங்கு பயின்றவர்களில் அதிகம்.
அந்த மீடாஸ் கல்லூரியின் நிலை இன்று என்ன ஆனது??
அங்கு பயின்ற இந்திய மாணவர்களுக்கு தகுதிகேற்ற சான்றிதழ் கிடைத்ததா??
பல லட்சம் வெள்ளிகளை நமது மாணவர்களிடமிருந்து வாங்கி சேர்த்த மீடாஸ் நிர்வாகம் என்ன ஆனது??
இந்த கிருஷ்ணன் ஏன் அந்த மீடாஸ் கல்லூரியை தொடர்ந்து நடத்தவில்லை??

அதன் பிறகு இதே L.கிருஷ்ணன் செபராங் ஜெயாவில் ரீஃபா(RIFA) என்ற கல்லூரியை தொடங்கினார்.அந்த கல்லூரியிலும் நம் இந்திய மாணவர்கள்தான் அதிகம்.அந்த கல்லூரியில் பயிலவும் நம் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தனரே,அவர்களுக்கு அதற்கேற்ற சான்றிதழ் கிடைத்ததா??அந்த கல்லூரி என்ன ஆனது??அதில் பயின்ற மாணவர்கள் என்ன ஆயினர்??அங்கு சேர்த்த லட்சக்கணக்கான பணம் என்ன ஆனது??


கடந்த 3-4 வருடங்களாக செபராங் பிறை நகராண்மை கழகத்தில்(MPSP) கவுன்சிலராக இருப்பவர் இதே L.கிருஷ்ணன்தானே?இவர் கவுன்சிலராக இருந்த காலத்தில் எத்தனை இந்தியர்கள் நகராண்மை கழகத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்??இதே கிருஷ்ணனுக்கு தெரிந்துதானே செபராங் பிறை நகராண்மை கழகத்தினர்(MPSP) பத்து கவானில் உள்ள இந்து ஆலயத்தை உடைக்க சென்றனர்.(பிறகு மக்கள் சக்தி தலையீட்டால் அந்த ஆலயம் தப்பித்தது)மக்களுக்கு L.கிருஷ்ணன் சொல்ல வேண்டிய பதில்கள் இன்னும் சரியாக கிடைக்காத நிலையில் L.கிருஷ்ணன் எதை நம்பி பொதுத்தேர்தலில் நிற்கிறார்?

சமுதாய இளைஞர்களின் பணம் என்ன ஆனது என்று கிருஷ்ணன் முதலில் பதில் சொல்வாரா??
கிருஷ்ணன் நகராண்ணை கழக உறுப்பினராக இருந்த காலத்தில் சமுதாயத்திற்கு என்னதான் செய்தார்??
பதில் சொல்வாரா கிருஷ்ணன்??

எதையுமே ஒழுங்காய் செய்யாத கிருஷ்ணனை நம்பியா நீங்கள் போக போகிறீர்கள்?
போங்கள்,போங்கள்,
இராஜபதி 13 வருடம் மாபெரும் சேவை செய்தார்,L.கிருஷ்ணன் ஒரு 10 வருடமாவது சேவை செய்யட்டுமே என்கிறீர்களா??

ஆமாம் 29 வருடமாக இந்த சமுதாயத்திற்கு சோதனைகள் பலவற்றை தந்த சாதனை தலைவரின் கட்சிக்காரர் ஆயிற்றே,செய்யட்டும்,செய்யட்டும்!!!
தலைவரின் வழியில் இவரும் சேவை செய்யட்டும்!!!

வேண்டாம் பாரிசான்!!!

வேண்டாம் தேசிய முன்னணி!!

ஏன் வேண்டாம்?

கடந்த 13 வருடங்களாக பிறை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இராஜபதி ஒரு வருடத்தில் எத்தனை முறை நம் தொகுதிக்கு வந்திருப்பார்?ஒரு மாதத்திற்கு ஒரு முறையேனும் வந்திருப்பாரா??ஏதாவது ருக்குன் தெத்தாங்கா நிகழ்வு என்றால் தலை காட்டுவார்..அவ்வளவுதான்!!
ஒரு மக்கள் பிரதிநிதியின் வேலை அவ்வளவுதானா??நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்!!


1995 பொது தேர்தலின் போது கம்போங் தெலுக்-விற்கு வருகை தந்த டத்தோஸ்ரீ சாமிவேலு கூறினார்.
"உங்கள் அனைவருக்கும் வீட்டுக்கு வீடு,தரை வீடு வாங்கி தருவதற்கு நான் பொறுப்பு!"
ஆனால் அந்த வருட கடைசியிலேயே நாமெல்லாம் கம்போங் தெலுக்,பிறை தோட்டத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கொண்டேனா வீடுகளில் அடைக்கப்பட்டோம்.அதன் பிறகுதான் நாம் இன்று இருக்கும் இந்த வீடுகள் கட்டப்பட்டன.சாமிவேலுவின் மொழியில் இதுதான் தரை வீடுகளோ?! இன்று வாக்குகள் கேட்டு வரும் கிருஷ்ணனோ,அல்லது இங்கு இயங்கும் மஇகாகாரர்களோ இதற்கு பதில் சொல்வார்களா??

1999இல் பொதுத்தேர்தல் வந்த பொழுது இராஜபதி மீண்டும் வந்தார்,"உங்களை சீக்கிரம் உங்கள் வீட்டில் குடிபுக வைக்கிறேன்,எனக்கு ஓட்டு போடுங்கள்!"என்று வந்தார்.நீங்களும் போட்டீர்கள்,மறு வருடமே வசதிகள் குறைந்த இந்த அடுக்கமாடி குடிசைக்கு நாம் மாற்றப்பட்டோம்.முதல் வருடம் தொடங்கி பல தொல்லைகள் நம்மை தொடர்கின்றன.குப்பைகளை கொட்ட ஒரு வழியில்லை,எங்கு பார்த்தாலும் குப்பை,கூளங்கள்.முதலில் இயங்கிய 3 மின்தூக்கிகளில்(lift) 2 சில மாதங்களில் நிறுத்தப்பட்டு,ஒன்றுதான் இயங்கியது.இது 2004 வரை....

2004 தேர்தல் வந்தது,மீண்டும் இராஜபதி வந்தார்,இரண்டு மின் தூக்கிகளை இயங்க வைத்தார்(ஓரிரு மாதங்களில் அதுவும் போனது,வேறு கதை),உடனே ஒட்டு போட்டு அவரை வெல்ல வைத்தீர்கள்.மீண்டும் நல்ல (தூங்கும்)சேவை செய்தார்,இப்பொழுது,"நான் நிறைய (தூங்கும்)சேவை செய்து விட்டேன்,விலகிக்கொள்கிறேன்,"என்று சென்று விட்டார்.

இப்பொழுது அவர் வழியில் இன்னொரு மஇகாகாரர் வந்து,"எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் நானும் நல்ல சேவை செய்வேன்."என்கிறார்.
"இப்பொழுது அரவே ஒடாத மின் தூக்கியை நான் ஓட வைக்கிறேன்,எனக்கு ஓட்டு போடுங்கள்"என்று வீர வசனம் பேசுகிறார்.(சாமிவேலு கட்சியை சேர்ந்தவராயிற்றே,நன்றாய் வசனம்தான் பேசுவார்)எத்தனை நாட்களுக்கு ஓடும்,இரண்டு மாதம்,மூன்று மாதம்??அவ்வளவுதான்,இன்று போனவன் 5 வருடம் கழித்துதான் வருவான்!!மீண்டும் ஒரு லிஃப்ட் நாடகம் நடக்கும்,மறுபடியும் வெற்றி பாரிசானுக்கே!!!

ஐயா,நாமெல்லாம் மனிதர்கள்தானே?
இவர்கள் நம்மை ஆட்டு மந்தைகளைப் போல்தான் இது வரையிலும் நடத்தி வந்தனர்,இனிமேலும் நாம் இவர்களை நம்பலாமா??

வெறும் லிஃப்டுக்கும்,50வெள்ளி பணத்துக்கும்,ஒரிரு கைலிகளுக்கும் உங்கள் வாக்குகளை அங்கு போட்டு விட்டு அடுத்த 5 வருடங்களுக்கு கஷ்டபட வேண்டும் என் நம் தலையில் எழுதி உள்ளதா???
அல்லது நமது நெற்றியில்தான் "இளிச்சவாயர்கள்" என்று எழுதியுள்ளதா?
யோசியுங்கள்;பாரிசானை(மஇகா) நம்பி ஏமந்தது போதும்!!
மாற்று முண்ணனிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்!!!

இந்த பிரச்சனையை சட்ட நடவடிக்கை வழி தீர்த்திருக்க முடியும்,எந்த மஇகா தலைவரும், இந்த தொகுதியின் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினருக்கோ, மாநிலத்தின் முதல்வராக இருந்து இன்று நம் தொகுதியிலேயே நமது வாக்குகள் வேண்டி காத்திருக்கும் கோ சூ கூனுக்கோ அக்கறையில்லை.தேர்தல் வந்தவுடன் திடிர் பாசம் நம் மீது பொத்துக்கொண்டு வருகிறது!!

நம்பாதீர்கள்........
பொய்யர்களை நம்பாதிர்கள்!!!
பாரிசானை நம்பாதிர்கள்!!
உங்கள் வாக்கு யாருக்கு வேண்டுமானலும் விழலாம்,பாரிசான் வேட்பாளருக்கு மட்டும் விழ்க்கூடாது!!!

பிறையில் தேர்தல் களம்....

பிறையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.திடீர்,திடீர் மாற்றங்கள் பல நிகழ்ந்தது பிறை தொகுதியில்தான்.
சாமிவேலுவிற்கு சில பாடங்கள் கற்றுக்கொடுத்தது நம் தொகுதி;எதிரணியின்(மாற்று முண்ணனி) நேர்மையை சோதிக்க வைத்ததும் நம் தொகுதிதான்.

சரி இப்பொழுது தொகுதியின் முக்கிய விடயத்திற்கு வருவோம்;
யாருக்கு நமது வாக்குகள்??


ஏன் L.கிருஷ்ணனுக்கு வாக்களிக்க கூடாது......

இவர் தேசிய முன்னணி(மஇகா) வேட்பாளர்.

தேசிய முண்ணனியை பொறுத்த வரை அவர்கள் இந்தியர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.கடந்த 25 நவம்பர் 2007 அன்று தலைநகரில் உரிமைகளை கேட்டு ஒன்று கூடிய நமது மக்களை கண்ணீர் புகை கொண்டும்,இரசாயன நீர் கொண்டும் தாக்கியவர்கள் இதே பரிசான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மலேசிய போலிசார்தான்.அதோடு மட்டுமல்லாமல் பத்துமலை திருத்தலத்தின் வாசற் கதவுகளை அடைத்து விட்டு அங்கிருந்த ஆயிரகணக்கான நம் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் இந்த பாரிசான் ஆட்சிதான்.அதோடு நின்று விடாமல் 31 தமிழர்கள் மீது கொலைக முயற்சி குற்றஞ்சாட்டியதும் இந்த பாரிசான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சட்டத்துறைதான்

19.2.08

மழலைகளை மதிக்கத்தெரியாத ஜென்மங்களுக்கு மலர் கொடுக்க போனது நம் குற்றம்தான்!!

எனக்கு பெரிய காதுகள் உள்ளன;கண்டிப்பாக உங்கள் குறைகளை நான் கேட்பேன்!!



-இப்படி சொன்னவர்தான் கடந்த 16ஆம் தேதி அன்று கோரிக்கை வைக்க மலர் தாங்கி வந்த மழலைகளைக் கூட இரசாயன கலவை நீர் கொண்டும்,கண்ணீர் புகைக்கொண்டும் தாக்கிய மலேசிய காவல் துறைக்கு பொறுப்பான உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா படாவி(இந்த பெயரை எழுதும் பொழுது கூட எனக்கு இரத்தம் தலைக்கேறுகிறது).



பிப்ரவரி 16ஆம் தேதி காலை மணி 8 இருக்கும்,வீட்டிலிருந்து கிளம்பி மலர் வழங்கும் நிகழ்வு நடைபெறப்போகும் மலேசிய நாடாளுமன்றத்திற்கு விரைந்து சென்றேன்.ஜாலான் பார்லிமெனில் என்றும் இல்லா நெரிசல் தெரிந்தாலும்,தொடர்ந்து சென்றேன்.நாடாளுமன்ற வாயிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டிருந்தது.நாடாளுமன்றத்திற்குள் நுழைய பல்வேறு வழிகளிலும் முயன்றுக்கொண்டிருக்கையில்,ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து,நிகழ்வு கோலாலம்பூர் சுதந்திர வளாகத்தில் நடைபெறுவதை அறிந்து அங்கு விரைந்தேன்.நான் கோலாலம்பூரின் மையப்பகுதியை அடைந்த பொழுது,ரசாயன நெடி அடிக்க தொடங்கி விட்டது.



அங்கும் இங்கும் அலைந்து ஒரு வழியாய் மோட்டார் வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கையிலே,அங்கு கூடியிருந்த தமிழர்கள் அங்குமிங்குமாய் கலைந்து கொண்டிரூந்ததை காண முடிந்தது,மேலும் நடந்த பொழுதுதான் அங்கே போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளை கண்ணாறக் கண்டேன்.அந்த இடத்தில் அவர்களிடம் அகப்பட விரும்பாமல் மெர்டேக்கா சதுக்கத்திற்கு சென்றேன்.அங்கு வரிசையாய் நின்றிருந்த FRU வாகனங்களை கடந்து சென்ற போது அங்கு நின்றிருந்த யாரும் கவனிக்கவில்லை.மெர்டேக்கா சதுக்கம் எங்கும் ஒரே போலிசாரின் நடமாட்டம்தான் தென்பட்டது,ரசாயன கலவை எங்கும் ஊற்ற பட்டிருப்பதை காண முடிந்தது.



இப்பொதெல்லாம் மக்கள் கூட்டம் ப்போலீசாரின் வன்முறையால் கலைக்கப்பட்டிருந்தது.அங்குமிங்கும் சில செய்தியாளர்களை காண முடிந்தது.அப்பொழுதுதான் என்னை அனுகிய ஒரு செய்தியாளரிடம் நநன் பேசிக்கொண்டிருந்தேன்.அங்கும் வந்துவிட்ட போலிசார் அனனவரையும் விரட்டியடித்தனர்.ஆகவே நடையைத் தொடர்ந்தேன்.பேரணி கலைக்கப்பட்டதை அடுத்து வீட்டுக்கு திரும்பும் எண்ணத்தோடு நடந்தேன்,தேசிய பள்ளிவாசலை அடைந்த பொழுது,ஓர் நபர் பின்னாளிருந்து என் பிடரியை அழுத்தி,

"நான் போலிஸ்,மல்லுக்கட்டாமல் என்னோடு வா" என்றான்.

"எதற்கு?"நான் கேட்டேன்.

"உன்னை கைது செய்கிறேன்."

"எதற்கு?"

"சட்டவிரோதமாக ஒன்று கூடியதால்."

"இங்கு இருப்பது நான் ஒரே தமிழன்,யாரோடு ஒன்று கூடினேன்??"