23.2.08

L.கிருஷ்ணன்

வேண்டாம் பாரிசான்......

யார் இந்த L.கிருஷ்ணன்.....
எங்கிருந்து வந்தார்.......

மீடாஸ்(MIDAS) என்ற தனியார் கல்லூரி ஒன்று பட்டவொர்த் பகுதியில் இயங்கி வந்ததை நீங்கள் அறிவீர்கள்.அந்த மீடாஸ் கல்லூரியின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவர்தான் இந்த கிருஷ்ணன்.
மீடாஸ் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் பெரும்பாலானோர் நமது இந்திய மாணவர்கள் ஆவர்.நடுத்தர,ஏழை இந்திய மாணவர்களே இங்கு பயின்றவர்களில் அதிகம்.
அந்த மீடாஸ் கல்லூரியின் நிலை இன்று என்ன ஆனது??
அங்கு பயின்ற இந்திய மாணவர்களுக்கு தகுதிகேற்ற சான்றிதழ் கிடைத்ததா??
பல லட்சம் வெள்ளிகளை நமது மாணவர்களிடமிருந்து வாங்கி சேர்த்த மீடாஸ் நிர்வாகம் என்ன ஆனது??
இந்த கிருஷ்ணன் ஏன் அந்த மீடாஸ் கல்லூரியை தொடர்ந்து நடத்தவில்லை??

அதன் பிறகு இதே L.கிருஷ்ணன் செபராங் ஜெயாவில் ரீஃபா(RIFA) என்ற கல்லூரியை தொடங்கினார்.அந்த கல்லூரியிலும் நம் இந்திய மாணவர்கள்தான் அதிகம்.அந்த கல்லூரியில் பயிலவும் நம் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தனரே,அவர்களுக்கு அதற்கேற்ற சான்றிதழ் கிடைத்ததா??அந்த கல்லூரி என்ன ஆனது??அதில் பயின்ற மாணவர்கள் என்ன ஆயினர்??அங்கு சேர்த்த லட்சக்கணக்கான பணம் என்ன ஆனது??


கடந்த 3-4 வருடங்களாக செபராங் பிறை நகராண்மை கழகத்தில்(MPSP) கவுன்சிலராக இருப்பவர் இதே L.கிருஷ்ணன்தானே?இவர் கவுன்சிலராக இருந்த காலத்தில் எத்தனை இந்தியர்கள் நகராண்மை கழகத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்??இதே கிருஷ்ணனுக்கு தெரிந்துதானே செபராங் பிறை நகராண்மை கழகத்தினர்(MPSP) பத்து கவானில் உள்ள இந்து ஆலயத்தை உடைக்க சென்றனர்.(பிறகு மக்கள் சக்தி தலையீட்டால் அந்த ஆலயம் தப்பித்தது)மக்களுக்கு L.கிருஷ்ணன் சொல்ல வேண்டிய பதில்கள் இன்னும் சரியாக கிடைக்காத நிலையில் L.கிருஷ்ணன் எதை நம்பி பொதுத்தேர்தலில் நிற்கிறார்?

சமுதாய இளைஞர்களின் பணம் என்ன ஆனது என்று கிருஷ்ணன் முதலில் பதில் சொல்வாரா??
கிருஷ்ணன் நகராண்ணை கழக உறுப்பினராக இருந்த காலத்தில் சமுதாயத்திற்கு என்னதான் செய்தார்??
பதில் சொல்வாரா கிருஷ்ணன்??

எதையுமே ஒழுங்காய் செய்யாத கிருஷ்ணனை நம்பியா நீங்கள் போக போகிறீர்கள்?
போங்கள்,போங்கள்,
இராஜபதி 13 வருடம் மாபெரும் சேவை செய்தார்,L.கிருஷ்ணன் ஒரு 10 வருடமாவது சேவை செய்யட்டுமே என்கிறீர்களா??

ஆமாம் 29 வருடமாக இந்த சமுதாயத்திற்கு சோதனைகள் பலவற்றை தந்த சாதனை தலைவரின் கட்சிக்காரர் ஆயிற்றே,செய்யட்டும்,செய்யட்டும்!!!
தலைவரின் வழியில் இவரும் சேவை செய்யட்டும்!!!

No comments: