31.7.08

இந்த்ராஃபின் விலை வெறும் 5 இலட்சம்தானா??

சில மணி நேரங்களுக்கு முன் எனக்கு கிடைத்த ஒரு குறுந்தகவல்,இப்படி சொல்கிறது.......

இந்தியர்களின் சாபக்கேடு மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் RS.தனேந்திரன், இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.இந்த்ராஃப் ஆதரவாளர்களை மஇகாவில் இணைப்பதற்கு 500,000(5 இலட்சம்) ரிங்கிட்டை மலேசிய இந்தியர்களின் சாபக்கேடான S.சாமிவேலு விடமிருந்து பெற்றுள்ளார்.5 வீரர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் போது,இந்த புல்லுருவி சொந்த இனத்தை விலைபேசியுள்ளான். பட்டவொர்த் மகாமரியம்மன் ஆலய வெள்ளி இரத நன்கொடையை கையாடல் செய்த இந்த பச்சோந்தி இப்போது,ஈப்போவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது.தனேந்திரனோடு சேர்ந்து இந்த துரோகத்தை இழைத்துள்ள இன்னும் சிலர்,பின்வருமாறு, G.அசோகன்,G.முகுந்தன் மற்றும் மலேசியாக்கினி நிருபர் ஆதி.வீரங்கன் ஆகியோர்.இந்திய சமுதாயத்தின் துரோகிகளே,அம்மன் உங்களை நரகத்துக்கு அனுப்புவாளாக.

ஆங்கிலத்தில்,

The Indian dillema lurks it ugly head again.National Coordinator of HINDRAF, RS.Thanendran has betrayed d Indians by accepting 500,000 bribe fr d Great Indian Robber,S.Samy Vellu,to get HINDRAF supporters to join d rest of d thieves in MIC.What a shame?5 heroes languishing in jail & dis scumbag sells out his race.Having cheated silver chariot fund of d Mahamariamman Temple Butterworth,Thanenthiran is in hiding in Ipoh.His chronies who hv also recieved money fr Samy vellu include G.Asokhan,G.Mukunthan & Malaysiakini reporter Athi.Veeranggan.Taritors of d Indian comnty,may Amman Shakthi burn u to hell.

இதனால்தான் இவ்வளவு நாளும்,மக்கள் கூட்டணி அரசாங்கத்தை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர் இந்த நன்றி மறந்த நரிக்கூட்டத்தினர்.

தனேந்திரன் இதையெல்லாம் செய்யக்கூடிய ஆள்தான் என்று முன்பிலிருந்து ஒரு பேச்சு இருந்த போதிலும்,உதயா அண்ணனுக்காக பல ஆதரவாளர்கள், அடக்கி வாசித்தனர்.இனிமேலும் அமைதியாய் இருந்தால்,நாளைக்கே உள்ளே உள்ள 5 பேரும் பணம் வாங்கி விட்டன்ர் என்பார் தனேந்திரன்.

தாங்கள் கேட்ட பதவியை மக்கள் கூட்டணி அரசு தரவில்லை என்றதும், கொள்கை என்பதையே விற்றுவிட்ட இவர்களெல்லாம்,பணத்துக்காக் சொந்த ம....... , தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம் என்று பார்க்கிறேன்.

இனிமேலும் இந்திய சமுதாயம் பொறுத்தல் கூடாது.
இந்திய சமுதாயத்துக்கு துரோகம் இழைப்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.சாமிவேலுவுக்கே பாடம் கற்பித்துள்ளோம் நாம்.
இவர்களெல்லாம் என்ன,வெறும் காளான்கள்.

பொறுத்தது போதும்,பொங்கியெலுவோம் தமிழர்களே,
பாடம் கற்பிப்போம் இந்த தனெந்திரனுக்கும்,அவர்தன் கைக்கூலிகளுக்கும்.

போராட்டம் ஓயாது,
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்.

1 comment:

BMahendran said...

prooof irenthaa nalla irekkem.