தமிழீழ தேசிய போராட்டத்தின் நெடுகிலும், தலைவர் பிரபாகரன் பல இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகளை குவித்துள்ளார். தமிழீழ தேசிய போராட்டத்தை உற்று கவனித்து வருபவர்கள் இதனை வெகுவாக அறிவார்கள். உலகத்தில் உள்ள நாடுகள் எல்லாம், நாடில்லா தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் இலங்கை இனவெறி அரசூக்கு தோள்கொடுத்து உதவிய நான்காம் கட்ட ஈழப்போரில், புலிகளுக்கு ஏற்பட்டது பின்னடைவுதான் என்ற பொழுதிலும், புலி பதுங்குவது பாய்வதற்கு என்பதுதான் நமக்கு நன்றாக தெரியும்.
பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று அறிவிப்பதன் மூலம், உளவியல் பலவீனத்தை புலிப்போராளிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை சரணடைய வைத்து விடலாம் என்று நம்புகிறது இலங்கை இனவெறி அரசு. இதற்கிடையில், புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனும் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பிற்கும், இந்திய உளவுத்துறையான (RAW)ராவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அனைத்துலக காவல்துறையான இண்டர்போலால் தேடப்படுபவர்களின் பட்டியலில் க.பத்மநாபன் சேர்க்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் வலுக்கிறது.
எது எப்படியிருப்பினும், தலைவர் உயிரோடுதான் உள்ளார்,5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பர் என்று உலகம் முழுவதும் பரந்துக்கிடக்கும் தமிழர்களும் நம்புகிறார்கள். முன்பு, தமிழீழ-இலங்கை அரசுகளுக்கான அமைதிப்பேச்சுகளில் பங்குபெற்றவரும், இன்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ள பேராசிரியர் இராமசாமி அவர்களும் அவ்வாறே கூறுகிறார். அவரின் அறிக்கை...(இங்கே சொடுக்கவும்)
பேராசிரியர் அவர்களைப் போலவே, ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகிய தமிழ்நாட்டு தலைவர்களும் தலைவர் பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர். ஆகவே,ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் முன்னெடுக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. உலகத்தமிழர்களான நாம், தலைவரின் கரத்தை பலப்படுத்தி, நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இழப்புகளை கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போர் தமிழ் தேசியத்திற்கு வழி ஏற்படுத்த உறுதுணையாக இருப்போமாக.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்...
பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று அறிவிப்பதன் மூலம், உளவியல் பலவீனத்தை புலிப்போராளிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை சரணடைய வைத்து விடலாம் என்று நம்புகிறது இலங்கை இனவெறி அரசு. இதற்கிடையில், புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனும் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பிற்கும், இந்திய உளவுத்துறையான (RAW)ராவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அனைத்துலக காவல்துறையான இண்டர்போலால் தேடப்படுபவர்களின் பட்டியலில் க.பத்மநாபன் சேர்க்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் வலுக்கிறது.
எது எப்படியிருப்பினும், தலைவர் உயிரோடுதான் உள்ளார்,5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பர் என்று உலகம் முழுவதும் பரந்துக்கிடக்கும் தமிழர்களும் நம்புகிறார்கள். முன்பு, தமிழீழ-இலங்கை அரசுகளுக்கான அமைதிப்பேச்சுகளில் பங்குபெற்றவரும், இன்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ள பேராசிரியர் இராமசாமி அவர்களும் அவ்வாறே கூறுகிறார். அவரின் அறிக்கை...(இங்கே சொடுக்கவும்)
பேராசிரியர் அவர்களைப் போலவே, ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகிய தமிழ்நாட்டு தலைவர்களும் தலைவர் பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர். ஆகவே,ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் முன்னெடுக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. உலகத்தமிழர்களான நாம், தலைவரின் கரத்தை பலப்படுத்தி, நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இழப்புகளை கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போர் தமிழ் தேசியத்திற்கு வழி ஏற்படுத்த உறுதுணையாக இருப்போமாக.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்...