Showing posts with label தமிழ்பள்ளி. Show all posts
Showing posts with label தமிழ்பள்ளி. Show all posts

9.9.08

எப்பிங்காம் தமிழ்பள்ளி நிலம் விழுங்கப்பட்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது.....

எப்பிங்காம் தமிழ்பள்ளிக்கு தனியார் நிறுவனம் வழங்கிய நிலம்,சாமிவேலு பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதைக் காட்டும் பத்திரம்.
இதுவொரு புதிய செய்தி;ஆனாலும் அதிர்ர்ச்சியான செய்தியில்லை.....
கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்;ஆனாலும் சாமிவேலுவா கொக்கா,கழுவுற நீருல,நழுவுற மாதிரி தப்பிச்சிடுவான் மனுசன்.
தமிழ்பள்ளிகளுக்கெல்லாம் தாம்தான் காவலன் என்பதைப் போல் காட்டிக்கொள்ளும் தானைத்தலைவன் செய்திருக்கும் வேலையைப் பார்த்தீர்களா??
இன்னும் கொஞ்சம் ஏமாந்தால்,இந்த சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சுருட்டி விற்றுவிடுவார்கள் மஇகாகாரர்கள்.
அங்கு கடித்து,இங்கு கடித்து,தமிழ்பள்ளிகளைக் கடித்துள்ளார் சாமி.
இப்பொழுது புதிதாக எழுந்திருக்கும் கேள்வி.....
கூலிமில் உள்ள ஒரு தமிழ்பள்ளிக்கு கத்ரி இதற்கு முன்பு ஒதுக்கிய நிலம் என்ன ஆனது என்பதுதான்.
இந்த நிலம் சாமிவேலுவின் பெயரிலோ,டத்தோ சரவணன்(முன்னாள் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்) பெயரிலோ இரூந்தலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு,பினாங்கு மாநிலத்தில்,பத்துகவான் தமிழ்பள்ளிக்கு பினாங்கு மேம்பாட்டு நிறுவனம்(PDC) வழங்கிய 3 இலட்சம் வெள்ளி நன்கொடை, தேர்தல் முடிந்து பல மதங்களுக்கு பிறகே பள்ளியின் கட்டட மேம்பாட்டுக் குழுவிடம் வழங்கப்பட்டது.வழங்கியவர் முன்னாள் அட்சிக்குழு உறுப்பினர்.ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும்போது வழங்கப்பட்ட பணம், தேர்தலில் தோற்ற பிறகு வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை. இம்மூன்று இலட்சம் வெள்ளியானது தேர்தலின் போது குறிப்பிட்ட தலைவரின் தேர்தல் செலவுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேப்போல்தான் அசாட் தமிழ்பள்ளி விவகாரமும்.நிலமே ஒதுக்காமல் நிலத்தை ஒதுக்கி விட்டோம்,மான்யத்திற்கு காத்திருக்கிறோம் என்றெல்லாம் வசனம் பேசினார்கள். பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசமி அவர்கள் ம இகா தலைவர்கள் கூறுவது போல அசாட் தமிழ்பள்ளிக்கு எந்த நிலமும் முன்னாள் தேசிய முன்னணி அரசால் ஒதுக்கப்படவில்லையென்ற உண்மையை வெளிபடுத்தினார்,அதோடு மட்டுமல்லாமல் மஇகா-காரர்களின் தமிழ்பள்ளி நாடகத்தை அம்பளப்படுத்தினார்.அதோடு மட்டுமில்லாமல் சாமிவேலுவை தமிழ்பள்ளி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற ஒரு அழ்ந்த அறிக்கையையும் வெளியிட்டார்.
சாமிவேலுவும் அவரின் சகாக்களும் தமிழ்பள்ளியை வைத்து நடத்தும் நாடகங்களை ஒவ்வொன்றாக நமது மக்கள் கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவர்.
தொடர்ந்து காத்திருப்போம்,
இந்த திருடர்களின் திருட்டுக்களை மேலும் அறிய!!!

14.8.08

தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?!

தமிழர் சரித்திரம்,வழி நெடுகிலும் பற்பல சிறந்த வீரதீரங்களையும், சாதனைகளையும் கண்டது.தமிழரின் சரித்திரம் தலைச்சிறந்த சரித்திர நாயகர்களை தன்னகத்தேக் கொண்டது.அவர்களுள்,மாமல்லன் என அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன்,இராஜராஜன் எனப்பட்ட அருள்மொழிவர்மன்,அவரின் புதல்வன் இராஜேந்திர சோழன்,ஆகியோர் தமிழக வராலாற்றில் மட்டுமின்றி தமிழரின் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்கள். அதிலும் இராஜேந்திர சோழன் கடாரம்,கம்பூச்சியம்,சாவகம் என் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் புலிக்கொடியை பறக்கவிட்டு,தமிழர் புகழ் உலக வரலாற்றிலும் நிலைத்து நிற்க செய்தவர்.இதையெல்லாம் அறியும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தலைத்தூக்கும்ம்.அதே வேளையில், இராஜராஜ சோழனை பற்றியோ,இராஜேந்திர சோழனை பற்றியோ, மாமல்லனைப் பற்றியோ பேசும்பொழுது,யார் அவர்கள் என்று ஒரு தமிழன் கேட்டால்,என்னவென்று சொல்வது??

ஆனால்,அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.

இன்றுள்ள நாம்,கல்கியின் பார்த்திபன் கனவையோ,பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம்.ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ,பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால்,கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர,பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள்.இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்??
ஒவ்வொரு தமிழனுக்கும்,தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

எனது பாட்டன்,பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான்.மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து,தமிழினத்தின் பூர்வீகம்,அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான்.சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.


இந்தோனேசியா,ஜாவாவில் அமைந்துள்ள பிரம்பனன் ஆலய தொகுதி

500-600 வருட சரித்திர பின்னணியைக் கொண்ட மலாய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் நமது மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு மேல்நிலைப் பள்ளி வரையில் பயில்கின்றனர். மாற்றாரின் குறுகிய சரித்திரத்தை பயிலும் நம் தமிழன்,நமது நெடுநீண்ட சரித்திரத்தை பயிலாமல் மறக்க விட்டது,கல்வியமைச்சில் தமிழ் பாடப்பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் நமது இன அதிகாரிகளின் தவறா??
தமிழன் சரித்திரம் படித்தால் தலை நிமிர்ந்து விடுவான், தலை நிமிர்ந்தால் நமது பதவிக்கு ஆப்பு வந்துவிடும் என்று கண்டும் காணாமல் விட்ட சமுதாயத்தின் அரசியல் தலைவர்களின் தவறா??
தமிழ் சரித்திரம் கொண்டே தமிழரை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்று உணராமல் விட்டுவிட்ட தமிழ் வழி இயக்கங்களின் தவறா??
யார் தவறு??

நாளை தலையெடுக்கப்போகும் நம் தமிழன்,சரித்திரம் தெரிந்த, தனித்தன்மையுடைய தமிழனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா.
அவ்வாறு ஒரு சரித்திரம் தெரிந்த தமிழினத்தை எப்படி உருவாக்குவது??என்பதுதான் தற்போது நம்மிடம் நிலவும் கேள்வி,இந்த கேள்விக்கு ஒரே பதில்;தமிழ் பள்ளிகளின் மூலம் என்பதுதான்.

தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் வரலாறும் ஒரு பாடமாக கற்றுகொடுக்கப் பட வேண்டும்.இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் தமிழரின் வரலாறு புரியும் வண்ணம் தமிழ் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும்.உதாரணத்திற்கு,அறிஞர் மு.வ-வின் பாவை விளக்கு நவீனம் தற்பொழுது எஸ்.டி.பி.எம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. அறிஞர் மு.வ-வின் சமுதாய கருத்துகள் மாணவர்களுக்கு தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.ஆனால், அதே வேளையில் இன அடையாளம் அழியாமல் இருக்க வேண்டுமெனில், சரித்திரமும் முக்கியமல்லவா? ஆகவே,கல்கியின் பொன்னியின் செல்வனையோ, பார்த்திபன் கனவையோ,சிவகாமி சபதத்தையோ அல்லது மற்ற தமிழ் சரித்திர அற்ஞர்களின் நவீனத்தையோ புதிதாக பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

இடைநிலை,மேல்நிலை கல்வியை விட அடிப்படைக்கல்வியான ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் சரித்திரம் சேர்க்கப்பட்டால்தான்,மிக சிறப்பாக அமையும்.

"தமிழ்ப்பள்ளியில் தமிழர் சரித்திரம்"
சாத்தியமா??
எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது??
யார் பொறுப்பேற்பது??

அடுத்த பதிவில் அலசலாம்.

- தொடரும் -


*பின்குறிப்பு :
நண்பர்களே,தமிழ் பள்ளியில் தமிழர் சரித்திரம் போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.