15.2.08

நாளை பிஞ்சு ரோஜாக்களின் அணிவகுப்பு;பிஞ்சுகளை பிரதமர் அரவணைப்பாரா?போலிஸ் அராஜகம் மீண்டும் தலைத்துக்குமா??

நாளை 16ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2008 அன்று,பிஞ்சு குழந்தைகள் ரோஜாக்களை ஏந்தி பிரதமரை காண நாடாளுமன்றத்துக்கு வருகின்றனர்.பல நூறு குழந்தைகளை முன்னின்று அழைத்து வரப்போகிறாள் சிறுமி வைஷ்ணவி.வைஷ்ணவியோடு சேர்ந்து ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களை குறைகளை கூறுங்கள்,நான் கண்டிப்பாக கேட்கிறேன்;எனக்கு இரண்டு பெரிய காதுகள் இருக்கின்றன என்று பிரதமர் கூறியிருந்தது ஞாபகம் இருக்கலாம்.இந்த குழந்தையின் மழலை மொழி பிரதமரின் காதுகளில் விழுகின்றதா பார்க்கலாம்.இந்த மழலலகளின் பேரணிக்கு இன்னும் சில மணி நேரமே இருக்கும் வேளையிலும் கூட பிரதமரிடமிருந்து சாதகமான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் தெரிய வருகிறது.

"நான் ஏன் வரவேண்டும்?"
இந்நிலையில்,பிரதமர் அவகளிடம் இப்பேரணி குறித்து செய்தியாளர்கள் வினவியபோது,"நான் ஏன் வரவேண்டும்?" என்று பிரதமர் வினவியுள்ளார்.
அப்படி அவர் வினவியது உண்மையானால்,அதை நினைத்து நாம் பெரிதும் கவலையடைகிறோம்.மலேசிய மக்கள் அனைவருக்கும் அவர்தானே பிரதமர்,அவர் வராமல்,பக்கத்து நாடான தாய்லாந்து பிரதமரா வரவேண்டும்?
50 ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது;நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள்தாம்,எங்களுக்கும் நீங்கள்தான் பிரதமர்;நீங்கள்தான் வரவேண்டும்.வந்து எங்கள் கோரிக்கைகளை கேட்கவேண்டும்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட,நீங்கள்தான் இடைக்கால அரசின் தலைவர்,உங்களிடம்தான் கோரிக்கை விட முடியும்.இது உங்களுக்கு நாங்கள் தரும் தனிப்பட்ட மரியாதை அல்ல;உங்கள் வசம் இருக்கும் அந்த பதவிக்கு தரப்படும் மரியாதை!!இது உங்களிடம் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையல்ல,அரசியலமைப்பு சட்டத்தின்படி மாமன்னரின் மேல் வைத்துள்ள நம்பிக்கை!!பதவிக்கும்,அரசியலமைப்பு சட்டத்துக்கும், மாமன்னருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியது உங்களின் கடமை என்பதை மறந்து விட வேண்டாம்!!

நாளை உங்களை தேடி வரும் குழந்தைகள் பாசத்தோடு வருகிறார்கள், அவர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

பாசத்தொடு வரும் குழந்தைகளை,பாக் லா அரவணைப்பாரா;
அல்லது புகைக்குண்டும்,இரசாயனமும் கலந்து விரட்டியடிப்பாரா என்று பார்ப்போம்.

மக்களின் குரல் எல்லாம் விளங்கும் பாக் லாவிற்கு,மழலைகள் குரல் விளங்குமா??
அல்லது,அதுவும் மலாய் மழலையாக இருந்தால்தான் விளங்குமா??

விடை இன்னும் சில மணி நேரத்தில் நமக்கு கிடைத்துவிடும்.

மக்கள் சக்தி வெல்லும்!!

No comments: